Friday, July 16, 2010

சூரசம்ஹாரம்

சின்னத்தம்பி ஒரு பெரிய இறைச் சொற்பொழிவாளர்.
ஊர் ஊராகச் சென்று கடவுள்கள் குறித்தும் அவர்கள் திருவிளையாடல்கள் குறித்தும் சொற்பொழிவாற்றுவது என்பது திட்டம்.
அன்று, அப்படித்தான் பொள்ளாச்சியில் சுப்ரமணியர் கோவிலில் உரையாற்ற வந்திருந்தார்.
கந்தசஷ்டியானதால் ஒரு வாரம் சூரசம்ஹாரம் குறித்து உரையாற்றுவது அவர் வேலை.
அன்று சூரன் மற்றும் முருகக் கடவுள் இடையேயான போர் பற்றிய சொற்பொழிவு.
மக்களின் திரளான கூட்டம்.
சின்னத்தம்பியின் உரையிலோ உற்சாகம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு அவரது உரை போரைக் கண்முன்னே கொண்டுவந்து காட்டிகொண்டிருக்கிறது.
கூட்டம் முருகக் கடவுளின் வெற்றியைக் கைதட்டிக் கொண்டாடுக் கொண்டிருக்கிறது.
ஆனால்,மேடைக்கருகில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கிராமத்து ஆள் பேச்சாளர் சின்னத்தம்பியை படாத பாடு படுத்திக் கொண்டிருந்தார்.
அவர் முருகன் ஜெயிக்கும்போது எப்படிக் கைதட்டிக் கொண்டிருந்தாரோ... அதேபோல் சூரன் ஜெயிக்கும்போதும் இவர்மட்டும் கைதட்டிக் கொண்டிருந்தார்.
கண்டுகொள்ளாமல் பேச்சைத் தொடர்ந்தாலும் அவர் விடாமல் சூரனுக்கும் கைதட்டிக் கொண்டிருந்தது சின்னத்தம்பியின் கவனத்தைத் திசைதிருப்பிக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் சின்னத்தம்பி அந்த கிராமத்து ஆளைப் பார்த்துக் கேட்டார்.
"யோவ்... என்னய்யா ஆளு நீ...? முருகன் ஜெயிச்சாலும் கை தட்டுற... சூரன் ஜெயிச்சாலும் கை தட்டுற ... உன் மனசுல என்னதான் நெனச்சுகிட்டு இருக்கிற...?".
அந்த கிராமத்து ஆள் அப்பாவியை சின்னத்தம்பியைப் பார்த்துச் சொன்னார்.
"இன்னும் போர் முடியலீங்களே... யாரு ஜெயிப்பாங்கன்னு எப்படித் தெரியுமுங்க... எதுக்கும் இருக்கட்டுமுன்னுதான் ரெண்டுபேருக்கும் கைதட்டி வெச்சேனுங்க...!".

2 comments:

எல் கே said...

:)))

அஷீதா said...

:))))))

kalakkureenga...unga humor sense suopernga.

Post a Comment