Tuesday, July 13, 2010

படையல்

டேனியின் அம்மா ஒரு சைவம்.
அவர் வீட்டிலும் அசைவம் சமைப்பதில்லை.
எனவே, டேனியும் பிறந்ததிலிருந்தே முட்டைகூடச் சாப்பிட்டதில்லை.
ஆனால், அவன் அப்பாவோ பரம்பரையாய் மாமிசப் பட்சிணிகள்.
டேனியின் அம்மாவும் இதுவரை அவன் அசைவம் சாப்பிட வாய்ப்பு அமையாதவாறே பார்த்துக் கொண்டு வந்திருக்கிறாள்.
கடைகளில் கோழியும் ஆடும் தோலுரிந்து தொங்குவதைப் பார்க்கையில் அதை வினோதமாய்ப் பார்த்ததுண்டே தவிர அது ஏன், எதற்கு அவ்வாறு தொங்குகிறது என்று அவன் ஆச்சர்யமாய் கேட்டதில்லை.
இது இப்படியிருக்க... சோதனையாய் அந்த மாதம் அவன் அப்பா ஊரில் ஒரு கோவில் விசேஷம் வந்தது.
டேனியின் அம்மாவுக்கோ அந்த சமயத்தில் கல்லூரியில் விடுமுறை கிடைக்கவில்லை.
அவளுக்கோ பயமான பயம்.
ஏற்கனவே கணவன் வீட்டில் பையன் கறி, மீனெல்லாம் சாப்பிட்டாத்தான் 'பையன் கொஞ்சம் திடமா வளர்வான்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் வேறு.
'இதுதான் சமயம்' என்று தன் பிள்ளையை அசைவம் சாப்பிடப் பழக்கிவிடுவார்களோ என்று பயந்துகொண்டே இருந்தாள்.
கணவன் 'என்னுடன் இருக்கும்போது அப்படியெல்லாம் உன் விருப்பமில்லாமல் அசைவம் சாப்பிடப் பழக்க மாட்டேன்...' என்று உறுதி கூறி அவனையும் ஊருக்கு உடன் அழைத்துச் சென்றார்.
ஊரில் டேனியும் அவன் அப்பாவும் கோவிலில் நின்று கொன்டிருக்கும்போதுதான் கோழி அறுத்தார்கள்.
டேனி கோழி அறுப்பதையும் அது துடிக்கத் துடிக்க சாமிக்கு ரத்தம் படைப்பதையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
பிறகு, "என்னப்பா செய்றாங்க...?" என்று கேட்டுத் தெரிந்து கொண்டான்.
கோவிலில் சாமிக்குப் படையல் எல்லாம் முடிந்த பிறகு பந்தியில் டேனி சாப்பிடாதால் அவன் அப்பாவும் 'அசைவம் வேண்டாம்' என்று சொல்லிவிட அவர்களுக்கு சைவச் சாப்பாடே பரிமாறப்பட்டது.
என்றாலும்,அவர்கள் பந்திக்கு நேரெதிரே ஊர்க்காரர்களில் யாரோ ஒருவர்கூட வந்திருந்த ஒரு ஆங்கிலேயன் உட்கார்ந்திருந்தான்.
அவனுக்குப் பரிமாறப்பட்ட கோழியின் தொடையை அவன் கத்தி மற்றும் முள்கத்தியின் உதவியுடன் கொத்திக் கொண்டிருக்கையில் டேனி அவன் அப்பாவிடம் கேட்டான்.
"ஏம்பா...அந்த அங்கிள் அதைக் கத்தியால குத்திகிட்டு இருக்காரு. அந்தக் கோழி இன்னும் சாகலையாப்பா...?".

4 comments:

சென்ஷி said...

:)

ஒரு சாதாரண மொக்கை ஜோக்கைக்கூட இம்புட்டு விறுவிறுன்னு கதை மாதிரி சொல்ற நேர்த்திதான் பிடிச்சிருக்குது..

Venkat M said...

Nice...

Unknown said...

க்ராஃப்ட் நல்லா வருது உங்களுக்கு...!

எல் கே said...

nicee

Post a Comment