Thursday, July 1, 2010

தில்லுதுர அட் லோனாவாலா



தில்லுதுர லோனாவாலா போனப்ப நடந்த பயங்கர எக்ஸ்பீரியன்ஸ் இது.

அவரு மும்பையிலிருந்து பூனா கார்ல போகப் போறேன்னு சொன்னதுமே ஆபிஸ்ல அவரோட சினேகிதர் சொன்னாரு, “இதாப் பாரு தில்லு… மும்பை டூ பூனே போறப்ப புது எக்ஸ்பிரஸ்வே-ல போகாதே… அதுக்குப் பதிலா ஓல்ட் ரோட்டுல போனினா சீனெரி எல்லாம் பாக்க சூப்பரா இருக்கும்”னு கொளுத்திப் போட தில்லுதுரயும் அந்த ரூட்லயே போக முடிவு செஞ்சிட்டாரு.

அவருக்கு கார் மலை உச்சில பிரேக் டவுனாகி நிக்கற வரைக்கும் தெரியாது… அந்த முடிவு எவ்வளவு பெரிய தப்புன்னு…!

தில்லுதுர காரைவிட்டு எறங்கி நின்னு பாக்கறாரு… கண்ணுக்கு எட்டுனவரைக்கும் ஒரு ஈ காக்காயக் காணம்.

பயங்கர இருட்டு… மழை வேற.

கொஞ்ச நேரத்துல நல்லா நனஞ்சு நடுங்க வேற ஆரம்பிச்சுடுச்சு.

வண்டி எதுவும் அந்த வழியில வர்ற மாதிரியும் தெரியல.

வேறவழியில்லாம பக்கத்துல ஏதாவது சிட்டி தெரியுதானு தேடி நடக்க ஆரம்பிச்சாரு.

கொஞ்ச நேரம் போயிருக்கும்.

ஒரு கார் அவரைப் பாத்து வருது... வந்து மெதுவா அவர் பக்கத்துல நிக்குது.

தில்லுதுர யோசிக்கவே இல்ல.

டப்புனு காரோட பின்னாடிக் கதவத் தொறந்து பாய்ஞ்சு சீட்ல ஒக்காந்திட்டாரு.

கொஞ்சம் மனசு நிதானமாகி கார் டிரைவருக்கு ஒரு நன்றியச் சொல்லிடலாம்னு முன் சீட்டப் பாத்தாரு.

பாத்ததுதான் மாயம்... நெஞ்சுக் கொலயே ஆட்டம் கண்டுடுச்சு.

கார்ல டிரைவர் சீட்ல ஆளயே காணோம்.

தில்லுதுர அப்பத்தான் கவனிச்சாரு... கார் ஓடற மாதிரி எஞ்சின் சவுண்டையும் காணோம்... ஆனா, கார் நகர்ந்து போய்கிட்டிருக்கு.

தில்லுதுர நெஞ்சப் பிடிச்சுக்கிட்டு மெல்ல ரோட்டப் பாக்கறாரு... சாமி... காரு அந்த பெண்டுல ஒரு பெரிய பள்ளத்தப் பாத்து போயிட்டுருக்கு.

தில்லுதுரைக்கோ குடலே வாய்க்கு வந்திடும் போல ஆயிடுச்சு.

செத்தோம்டானு பயந்து போயி அவர், 'சாமி..சாமி'ன்னு சாமி கும்புட ஆரம்பிச்சுட்டாரு.

கரெக்டா அந்த பெண்டோட சுவத்த கார் முட்டப் போன நேரம்... நனைஞ்சு ஈரமா இருந்த ஒரு  கையி ஜன்னல் வழியா வந்து ஸ்டீரிங் வீல ஒரு திருப்பு திருப்புச்சு.

கார் பெண்ட முட்டாம பத்திரமாத் திரும்பி அடுத்த பெண்டப் பாத்துப் போக ஆரம்பிச்சிருச்சு.

அடுத்த பெண்டுலயும் அதே கையி ஜன்னல் வழியா மறுபடி வந்து ஸ்டீரிங்கத் திருப்புச்சு.

ஒவ்வொரு பெண்டுலயும் இதே நடக்க தில்லுதுர நெஞ்சு இப்ப படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சு.

அவரு பக்கு பக்குனு ரோட்டயே வெறிச்சுப் பாத்துகிட்டு ஒக்காந்திருந்தாரு.

சடார்னு ரோட்ல ஒரு வெளிச்சம்... எதுத்தாப்புல ஒரு வண்டி தாண்டிப் போகுது.

தில்லுதுர மனசுல எல்லா தைரியத்தையும் வரவச்சுகிட்டு... காரை விட்டுக் குதிச்சு கீழே இருக்கற ஊரப் பாத்து கத்திக்கிட்டே எடுத்தாரு பாருங்க ஒரு ஓட்டம்.

அந்த ஊரு டீக்கடைல வந்துதான் நின்னாரு.

கடைல நொழஞ்சு ஒரு ஜக்குத் தண்ணிய மடக்கு மடக்குனு குடிச்சுட்டு... அங்க இருந்தவங்ககிட்ட நடந்ததப் பத்தி நெஞ்சப் புடிச்சுக்கிட்டு சொல்லிட்டு இருக்காரு.

எல்லாரும் அந்த நம்பமுடியாத கதைய வாயப் பொளந்துகிட்டுக் கேட்டுட்டு இருக்காங்க....

அப்பத்தான் அந்த ரெண்டு பேரும் வேர்க்க விறுவிறுக்க கடைக்குள்ள நுழையறாங்க.

அதுல ஒருத்தன் தில்லுதுரயப் பாத்ததும் பக்கத்துல இருந்தவங்கிட்டச் சொன்னான்.

"மாப்ள... இந்த மடையந்தாண்டா நாம காரைத் தள்ளிக்கிட்டு வந்தப்ப நமக்குத் தெரியாம ஏறி உள்ளே உக்காந்திட்டு வந்தவன்...!".
.
.
.
நன்றி: வெங்கட்

8 comments:

Aba said...

ஹாஹாஹ்ஹா... பிரமாதம். எங்கிருந்து புடிக்கிரீண்ட இதெல்லாம்?

Anonymous said...

super!!!

மங்களூர் சிவா said...

:))

Santhappanசாந்தப்பன் said...

இது கலக்கல்!

Mahi_Granny said...

நல்ல கற்பனை . தொடருங்கள். தொடர்வோம்

கபிலன் said...

இது புதுசா இருக்கே...
அசத்தல் போங்க.....

அன்புடன் கபிலன்.

Sujai said...

Super!!! :)

Elango said...

superrr...!

Post a Comment