Thursday, May 6, 2010

அடடா மழைடா... அடை மழைடா...!




புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைப் பார்வையிட மந்திரி வந்திருந்தார்.

எங்கும் தண்ணீர். இன்னும் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.

விவசாயிகளைப் பார்க்க வயல்வெளிக்கே வந்துவிட்டார் அவர்.

வயலெல்லாம் முழங்கால் அளவுத் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தது.

ஒரு விவசாயியிடம் மந்திரி கேட்டார்.

"அய்யா... இவ்வளவு பெரிய மழையை நான் பார்த்ததே இல்லை. மிகப் பெரிய வெள்ளம் அல்லவா...?'

அந்த விவசாயி பதில் சொன்னார்.

"என்னுடைய வெள்ளம் பெரியது இல்லை அய்யா.  பக்கத்து வயல் பண்ணையாருடையது. அவருக்கு வந்த வெள்ளம்தான் மிகப் பெரியது...!"

மிகச் சாதாரணமாய்ச் சொன்னார் அவர்.

அவர் முகத்தில் இருப்பது சந்தோஷமா... சோகமா என்பதும் தெரியவில்லை.

மந்திரி குழம்பிப் போனார்.

ஒரே ஊர். ஒரே அளவு மழை. ஒரே மாதிரித்தான் வெள்ளமும் இருக்கிறது.

இதில் பண்ணையாருடைய வயலில் மட்டும் எப்படி வெள்ளம் அதிகமாயிருக்க முடியும்..?

மந்திரி அதை அந்த விவசாயியிடம் கேட்டும் விட்டார்.

அதற்கு அந்த விவசாயி பதில் சொன்னார்.

"அதெப்படிங்க ரெண்டு பேர் வயல்லயும் ஒரே மாதிரி வெள்ளம் இருக்கும்..? என்னோட வயல் அஞ்சு ஏக்கர்... பண்ணையாருடையது நூத்தம்பது ஏக்கர் ஆச்சுங்களே...!".
.
.
.

2 comments:

Post a Comment