Tuesday, December 21, 2010

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது

கோவையிலிருந்து சென்னை செல்ல அவசர அவசரமாக ஒரு ஆம்னி பஸ்சைப் பிடித்து ஏறின சமயம் நடந்தது அது.

கிளம்பிய பஸ், பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்றுச் சுற்றி, தடதடவென ஆடி, மீண்டும் கிளம்பிய இடத்துக்கே வந்து அமைதியாய் நின்றது.

என்ன பிரச்சினை, எதுவென்று தெரியாமல் ஒரு கால்மணி நின்ற பிறகு, பஸ் எப்போதும் போல் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தது.

விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன், டிக்கெட் செக் செய்ய வந்தவரிடம் பக்கத்து சீட்டிலிருந்தவர் கேட்டார்.
"என்ன சார் பிராப்ளம்..?".
அவர் அலட்டிக் கொள்ளாமல் சொன்னார்.
"வண்டியிலிருந்து வந்த சத்தம் சரியில்லாததால.., டிரைவர் வண்டியை எடுக்கப் பயந்து நிறுத்திட்டாரு..!".
அப்படியும் எதுவும் சரி செய்ததுபோல் தெரியாததால், அவர் மறுபடியும் கேட்டார்.

"அதுக்குள்ள சரி பண்ணிட்டிங்களா என்ன..?'

டிக்கெட் செக்கர் முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் சொன்னார்.

"பண்ணியாச்சு சார்..!".
கேட்டவர் கொஞ்சம் குசும்புக்காரர் போல.. தொடர்ந்து கேட்டார்.

"அதுக்குள்ள என்ன இஞ்ஜினையா மாத்திட்டிங்க..?".
செக்கர் இப்போதும் அதேபோல் பாவமற்ற முகத்துடன் சொன்னார்.

"இல்ல சார்... டிரைவரை மாத்திட்டோம்..!".
.
.
.

2 comments:

சென்ஷி said...

ஹாஹாஹா.... :)))))))))))))))))))))))))))))

Sumi said...

Awesome:) :)
Every post carries wisdom drenched in simplicity n innocent.
Love all ur writings. Keep on posting.

Post a Comment