Thursday, December 16, 2010

ஒருகை ஓசை

அது ஒரு வளரும் அரசியல் கட்சி.

கட்சி ஆரம்பித்துக் கொஞ்ச நாள்தான் ஆகியிருப்பதால், கட்சியின் எல்லாச் செயல்களும் கட்சித் தலைவருக்கு அடுத்தபடியாக இருக்கும் இளவழகன் முடிவுப்படி தான் நடந்து கொண்டிருந்தது.

கட்சி சம்பந்தமான மீட்டிங்குகளில் பார்க்க வேண்டும் இளவழகனின் பேச்சை.

அனல் பறக்கும்.

மாசற்ற தமிழர் பெருமை, வீரம், மொழி, இனம், பாரம்பரியம் குறித்தெல்லாம் அவன் பேசினால்... கேட்பவர் மனம் சொக்கிக் கிடப்பார்கள்.

அந்த சமயத்தில், தொண்டர்களை உண்டியல் குலுக்கி வசூலை ஆரம்பிக்கச் சொல்லியிருந்தான் இளவழகன்.

அப்போதுதான், மக்களும் அந்த உணர்ச்சி வேகத்தில் பணத்தை அள்ளி உண்டியலில் கொட்டுவார்கள்.

அப்படி வசூலாகும் பணம்தான், இளவழகனின் எல்லா செலவுகளையும் சரிக்கட்டி வருகிறது.

அன்றும் இதுபோல்தான், கோவையில் இளவழகன் பேச்சு ஏற்பாடாகி இருந்தது... நல்ல கூட்டம்.

இளவழகன் வரும் முன்னரே, கூட்டத்தைக் கணக்கிட்டு வசூல் செய்ய, வழக்கமான இரண்டு உண்டியலுக்குப் பதிலாக நாலு உண்டியல் ஏற்பாடு செய்திருந்தார்கள் விழாவை ஏற்பாடு செய்திருந்தவர்கள்..

ஆனால், இளவழகன் வந்ததும் அந்த மற்ற இரு உண்டியல்காரர்களையும் தடுத்துவிட்டான்.

காரணம் கேட்டபோது சொன்னான்.

"ரெகுலரா உண்டி குலுக்கறவங்களப் பாத்திங்க தானே..? அவங்க ரெண்டு பேருமே ஒரு கை உள்ளவங்கனு தெரியாதா..?" என்றான்.
.
.
.

No comments:

Post a Comment