Wednesday, December 8, 2010

ரத்த சரித்திரம்

டேனி படிக்கும் வகுப்பில் உயிரியலில் ரத்த ஓட்டத்தைப் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் அறிவியல் ஆசிரியர்.

மிகத் தெளிவாக பாடம் நடத்தும் ஆசிரியர் என்பதால், எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான உதாரணத்தைக் கையில் எடுத்தார் அவர்.

"மாணவர்களே... நம் எல்லோருக்கும் நடக்கும் ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். இப்போது நான் தலைகீழாய் நிற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது, ரத்தமானது என் தலையை நோக்கி அதிவேகமாய்ப் பாய்கிறது. அதனால், எனது முகம் இன்னும் அதிகமாய் சிவக்கிறது... இல்லையா..?".

மாணவர்கள் எல்லோரும் கோரசாய், "ஆமாம் சார்..!" என்றார்கள்.

ஆசிரியர் அடுத்துக் கேட்டார்.

"அப்படியானால்... நான் நேராய் நிற்கும்போது, அதே ரத்தமானது, ஏன் என் கால்களில் அவ்வாறு பாய்வதில்லை..? ஏன், என் கால்கள் சிவப்பதில்லை..?".

எல்லா மாணவர்களும் சற்றே யோசனையில் அமைதியாய் இருக்கும்போது, டேனியின் பளிச்சென்று கேட்டது.

"ஏனென்றால், உங்களுடைய கால் காலியாய் இல்லை..!".
.
.
.

7 comments:

சென்ஷி said...

ஹா ஹா ஹா :))

சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர்!..

heartsnatcher said...

நல்ல நகைச்சுவை அருமை

duraian said...

இதெல்லாம் ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப சாஸ்தி :))))))))))

Vidhya Chandrasekaran said...

ROFL:))))

Parthiban said...

SUUUUUUUPPPER ... !!!

Priya said...

toooo Good

Post a Comment