Tuesday, December 14, 2010

லட்சம் கோடி

தேசமே திரும்பிப் பார்த்த, அந்த மாபெரும் ஊழலின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

மந்திரியை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்த அரசு தரப்பு வக்கீல் காட்டமாய் அவரிடம் கேட்டார்.

"இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய, நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா இல்லையா..?".

வக்கீல் கேட்டதும் எல்லோரும் மந்திரியைத் திரும்பிப் பார்க்க, அவரோ வக்கீல் கேட்டதே காதில் விழாததுபோல் நீதிமன்ற ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

வக்கீல் மறுபடி கேட்டார்.

"சொல்லுங்கள்... இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா, இல்லையா..?".

மந்திரி இப்போதும் எந்தச் சலனமும் இல்லாமல் ஜன்னல் வழியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் ஒருமுறை வக்கீல் கேட்க, மந்திரி வக்கீலைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நிற்பதைப் பார்த்த நீதிபதி, கோபத்துடன் சுத்தியலை டேபிள் மீது நாலு தட்டுத் தட்டி மந்திரியைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டார்.

"மிஸ்டர் மந்திரி... வக்கீல் கேட்கிறர் அல்லவா..? பதில் சொல்லுங்கள் ..!".

"ஓ..!" நீதிபதி சொன்னதும் திரும்பிய மந்திரி சொன்னார்.

"மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே..! இவ்வளவு நேரமும் வக்கீல் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்..!".
.
.
.

2 comments:

கௌதமன் said...

ஹா சூப்பர்! கடைசி வாக்கியம் வாய்விட்டு சிரிக்க வைத்தது.

சென்ஷி said...

அடக்கடவுளே :)))

Post a Comment