Tuesday, August 31, 2010

மாட்டுப் பெண்

(இது என் கணவர் சொன்ன கதை - அவருடைய வார்த்தைகளில்.)


என் நண்பன் சின்னச்சாமி ஒரு பெரிய பால்பண்ணை வைத்திருக்கிறான்.

ஒரு சமயம் அவன் பசு மாடு ஒன்றின் பிரச்சினை சம்பந்தமாக அருகிலிருந்த வெட்ரினரி டாக்டர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

டாக்டரைப் பார்க்கவோ அங்கே கூட்டமான கூட்டம்.

ஊரிலேயே அவர்தான் கைராசியான டாக்டர் என்று பேச்சு.

அவரிடம் கால்நடை சென்றால், எப்படிப்பட்ட வியாதி என்றாலும் உடனே சொஸ்தமாகிவிடும் என்பது பரவலான நம்பிக்கையாம்.

என் வீட்டில் நாயோ பூனையோ இல்லாததால் எனக்கு இதுபற்ற்யெல்லாம் தெரியாமல்தான் கூடச்சென்றேன்.

டாக்டரைப் பார்க்கக் காத்திருந்த நேரத்தில், அவன் சொன்ன டாக்டர் புராணம்தான் இத்தனையும்.

கொஞ்ச நேரத்தில், எங்கள் டோக்கன் எண்ணைச் சொல்ல நாங்கள் இருவரும் உள்ளே சென்றோம்.

டாக்டர் சின்னச்சாமியிடம் கேட்டார்.

"என்ன பிரச்சினை..?".

சின்னச்சாமி சொன்னான்.

"சார்... என்னோட பண்ணைல இருக்கற ஒரு பசுமாட்டுகிட்ட ஒரு பிரச்சினை. அது சம்பந்தமா உங்ககிட்ட ஒரு தகவல் கேட்டுட்டுப் போலாம்னு வந்தோம்...!".

டாக்டர் கேட்டார்.

"பசுவைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்களா...?".

"இல்லை சார்..."

"உங்க பண்ணைல எத்தனை பசு இருக்கு...?"

சின்னச்சாமி பதில் சொன்னான்.

டாக்டர் கேட்டார்.

"மத்த பசுக்கள்கிட்ட நீங்க சொன்ன பிரச்சினை இருக்கா..?".

"இல்லை சார்... இந்த ஒரு பசுகிட்ட மட்டும்தான்...!".

டாக்டர் சற்று ஆசுவாசமாய் உட்கார்ந்து என் நண்பனின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.

"இப்பச் சொல்லுங்க... அந்தப் பசுகிட்ட என்ன பிரச்சினை...?".

நண்பன் சொல்ல ஆரம்பித்தான்.

"சார்... வாங்கிட்டு வந்த நாளிலிருந்தே இப்படித்தான் பண்ணிக்கிட்டு இருக்கு. வைக்கோல் வச்சா வைக்கோலச் சாப்பிடாது, அத்துக்கிட்டுப் போய் பேப்பரைச் சாப்பிடும். களணித் தண்ணிய வச்சா அதக் குடிக்காம கால்வாய்த் தண்ணியக் குடிக்கப் போயிடும். இப்பக் குட்டி போட்டிருச்சு. ஆனா,கன்னுக்குட்டிக்கு பால் தர்றதில்ல. கறக்கப் போறவங்களை எட்டி ஒதைக்குது... முட்ட வருது..! மொத்தத்துல கண்ட்ரோலே பண்ண முடியலை. அதான் இதுக்கு என்ன பண்ணலாம்னு உங்ககிட்டக் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்...!".

நண்பன் சொல்லி முடித்ததும் டாக்டர் கொஞ்ச நேரம் யோசித்தவர், என் நண்பனைப் பார்த்துக் கேட்டார்.

"நீங்க அந்த மாட்டை மசக்காளிபுரத்துலருந்தா வாங்கினீங்க..?".

நண்பன் ஒரு கணம் என்னைத் திகைப்புடன் பார்த்துவிட்டு, டாக்டரைப் பார்த்து ஆச்சர்யமாய்க் கேட்டான்.

"ஆமா டாக்டர்... உங்களுக்கு எப்படித் தெரியும்..? நீங்க எப்படிக் கண்டுபிடிச்சீங்க...?".

நண்பன் கேட்டதும் டாக்டர் அலுப்புடன் சொன்னார்.

"ஏன்னா... நானும் அந்த ஊர்லதான் பொண்ணெடுத்தேன்...!".
.
.
.

6 comments:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

this ia too much

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வட பஜ்ஜி போண்டா எல்ல்லாம் எனக்கு தான்

Unknown said...

ரொம்பக் குசும்புதான் உங்க கணவருக்கு...!

ஸாதிகா said...

மின்மினி..கதை சூப்பர்.நிஜமில்லையே?

கோவி.கண்ணன் said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

this ia too much //

ரிப்பீட்டே.......

Unknown said...

உங்கள் கணவர் அர்த்தம் புரிந்து நடந்துகொள்ளுங்கள்.

Post a Comment