Tuesday, June 1, 2010

ஊய்... ஊய்...!


ராக்கேஷுக்கு எதிர்பாராத ஒரு ஆக்ஸிடண்ட்டில் ஒரு கை போய்விட்டது.

அவனுக்கு அதனால் நிறையப் பிரச்சினைகள்.

நினைத்தபடி கார் ஓட்டமுடியவில்லை.

கிடார் வாசிக்க முடியவில்லை.

தண்ணி அடிக்கும் போது கிளாஸைக் கீழே வைக்காமல் ஊறுகாயை எடுத்து ஒரு ஓட்டு ஓட்ட முடியவில்லை.

ராக்கேஷால் எதைச் சகித்துக் கொண்டாலும் இந்தக் கடைசிக் காரணத்தை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

எனவே, அவன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தான்.

அதைச் செயல்படுத்த முடிவு செய்து ஏழாவது மாடி ஜன்னலில் ஏறி குதிக்க எத்தனிக்கும் போது தான் அதைப் பார்த்தான்.

கீழே ஒருவன் இரண்டு கைகளும் இல்லாமல் சந்தோஷமாய் குதித்துக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான்.

ராக்கேஷுக்கு ஒரு கணத்தில் மனது மாறிப்போனது.

'அட... இரண்டு கைகளும் இல்லாதவனே இவ்வளவு குஷியாய் இருக்கும் போது நாம் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்...?'

இதை நினைத்ததும் ஜன்னலிலிருந்து கீழே இறங்கிய ராக்கேஷ், தன் உயிரை சரியான சமயத்தில் காப்பாற்றிய அந்த மனிதனை சந்தித்து நன்றி சொல்ல வேகமாய்க் மாடியிலிருந்து இறங்கி ஓடினான்.

கீழே வந்து பார்த்தால், அவன் குதித்துக் குதித்து ஓடியதோடு அல்லாமல் "ஊய்... ஊய்...!" என்று சப்தம் எழுப்பியவாறு உற்சாகமாய் ஓடிக் கொண்டிருந்தான்.

ராக்கேஷுக்கோ ஆச்சர்யம் உச்சத்திற்கே போய்விட்டது.

'எப்படி ஒரு மனிதனால் இரண்டு கைகளும் இல்லாமல் இவ்வளவு உற்சாகமாய் இருக்கமுடிகிறது...?'

ராக்கேஷ் அவனை மறித்து அதைக் கேட்டும் விட்டான்.

அவனோ ராக்கேஷிடம் எரிச்சலுடன் பதில் சொன்னான்.

"யாருப்பா சந்தோஷமா இருக்கேன்னு சொன்னது...? நானே உட்கார்ற இடத்துல அரிக்குதுனு சொறிஞ்சுவிட ட்ரை பண்ணிட்டுருக்கேன்... நீ வேற கடுப்பக் கிளப்பிக்கிட்டு...!" என்றவன் திரும்பவும், "ஊய்... ஊய்...!" என்று சப்தம் எழுப்பியபடி வேகமாய் ஓட ஆரம்பித்தான்.
.
.
.

2 comments:

Anisha Yunus said...

ஆஹா...இப்படி போயிடிச்சே....கவலை படாம ராஜேஷை விட்ட வேலய செய்ய சொல்லுங்க...ஹி ஹி

மங்களூர் சிவா said...

/
"யாருப்பா சந்தோஷமா இருக்கேன்னு சொன்னது...? நானே உட்கார்ற இடத்துல அரிக்குதுனு சொறிஞ்சுவிட ட்ரை பண்ணிட்டுருக்கேன்... நீ வேற கடுப்பக் கிளப்பிக்கிட்டு...!" என்றவன் திரும்பவும், "ஊய்... ஊய்...!" என்று சப்தம் எழுப்பியபடி வேகமாய் ஓட ஆரம்பித்தான்.
/

ROTFL
:)))))))))))))

Post a Comment