தில்லுதுர அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நேரம்.
அன்று திங்கட்கிழமை காலை.
அவர் தனது மேனேஜரைப் பார்க்க அவர் அறைக் கதவைத் தட்டி அனுமதி பெற்றுவிட்டு உள்ளே நுழைந்தார்.
ஏதோ ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்த மேனேஜர் நிமிர்ந்தே பார்க்காமல், "என்ன வேணும்..?" என்று கடுப்புடன் கேட்டார்.
தில்லுதுர தயக்கத்துடன், "சா.. சார்...!".
மேனேஜர் கடுப்பு கொஞ்சமும் குறையாமல் கேட்டார்.
"சொல்லுப்பா... என்ன விஷயம்.?".
"சார்... நேத்துதான் பழைய வீட்டை காலி பண்ணிட்டு புது வீட்டுக்கு வந்தோம்..!".
தில்லுதுர தொடர்வதற்குள் ஃபைலை விட்டு தலையை மேலே தூக்கிய மேனேஜர் கோபமாய் கேட்டார்.
"அதுக்கு.?".
தில்லுதுர இப்போது மேலும் தயக்கமாய் தொடர்ந்தார்.
"இ.. இல்ல சார். வீட்டுல ஏகப்பட்ட சாமானு. எல்லாம் போட்டது போட்ட படி இருக்கு. மனைவி ஒத்தை ஆளு. எல்லாத்தையும் தனியா எடுத்து வைக்க முடியாதுனு சொல்லி கண்டிப்பா நானும் ஹெல்ப் பண்ணனும்னு சொன்னாங்க..!".
தில்லுதுர பேசப் பேச இடைமறித்த மேனேஜர் கோபமாய் சொன்னார்.
"இங்க பாருப்பா... ஏற்கனவே இந்தவாரம் ஆஃபிஸ்ல லீவ் ஜாஸ்தி. இதுல நீ வேற லீவு கேக்காத. கண்டிப்பா குடுக்க முடியாது... சாரி.!".
சொல்லிவிட்டு மேனேஜர் தலையைக் குனிந்து கொண்டதும்... தில்லுதுர சந்தோஷமாய் மேனேஜரிடம் சொன்னான்.
"சார்... நீங்க இந்த விசயத்துல எனக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவீங்கனு தெரியும் சார்... ரொம்பத் தேங்க்ஸ் சார்.!".
.
.
.
3 comments:
nice..!
Hahahaa..:)
:)))
Post a Comment