Friday, February 25, 2011

திருமதி செல்வம்

திருமணம் முடிந்து அலுவலகத்துக்கு வந்த முதல்நாள், தன் மனைவியையும் உடன் அழைத்து வந்திருந்தார் தில்லுதுர.

புதிய மணமக்களை வரவேற்று, ஒரு பார்ட்டி ப்ளான் செய்திருந்தார்கள் அலுவலகத்தினர்.

மணமக்களை எல்லோரும் வாழ்த்திப் பேசிவிட்டு பரிசுப் பொருட்களை கொடுத்த பிறகு, அலுவலகத்திலேயே நீண்ட காலம் பணிபுரியும், மனமொத்த மிக அந்நியோன்யமான, வயதான தம்பதியரான... செல்வம் தம்பதியினர் ஜோடியாய் மேடைக்கு வந்தனர்.

செல்வம் தம்பதியினர் பரிசைக் கொடுத்து வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு, மேடையை விட்டு இறங்கும்போது, தில்லுதுர அவர்களிடம் கேட்டார்.

"செல்வம் சார்.. உங்களுடைய நீண்டநாள் சந்தோஷமான மண வாழ்வின் ரகசியத்தைச் சொன்னால், அது இந்த சமயத்தில் எங்களுக்கு மிகவும் உபயோகமாய் இருக்குமே..!".

தில்லுதுர கேட்டதும், செல்வத்தை முந்திக் கொண்டு திருமதி செல்வம் பதில் சொன்னார்.

"அது ஒண்ணும் பெரிய ரகஷியமில்லை மிஸ்டர் தில்லுதுர... வாழ்க்கை முழுவதும், எப்போதும் எந்த நேரத்திலும், நீங்க நான் சொல்லும் மூன்று வார்த்தையைச் சொல்லிக் கொண்டிருந்தால் போதும். உங்கள் வாழ்க்கை எப்போதுமே சந்தோசமாகவே செல்லும்..!".

தில்லுதுர ஆர்வம் தாங்காமல் திருமதி செல்வத்தைப் பார்த்துக் கேட்டார்.

"சொல்லுங்கள் மேடம். எது அந்த மூன்று வார்த்தை..?".

திருமதி செல்வம் எல்லோரும் ஆர்வத்துடன் தன்னைப் பார்ப்பதை அறிந்து சந்தோசமாய் சொன்னார்.

"அந்த மூணு வார்த்தை, 'நீங்க சொன்னா சரிதான்' என்பதுதான்...!" .

திருமதி  செல்வம் சொன்னதும் தில்லுதுர ஆர்வத்துடன் செல்வத்தைப் பார்த்துக் கேட்டார்.

"சார் நீங்க என்ன சொல்லறிங்க..?".

தில்லுதுர கேட்டதும் அனைவரும் ஆர்வத்துடன் செல்வம் பக்கம் பார்க்க...
அவர் சிரித்தபடியே சொன்னார்.

"அவ சொன்னா சரிதான்...!".
.
.
.

10 comments:

Nanjil Kannan said...

:)))))))))))))

செல்வா said...

இதுதான் அந்த மூணு வார்த்தையா அண்ணா.. ஹி ஹி

குறையொன்றுமில்லை. said...

ஆஹா நல்ல ஆலோசனைதான்.

குறையொன்றுமில்லை. said...

அப்போ நீங்க சொன்னா சரிதான். :))))))))))))

வணங்காமுடி...! said...

சரிதான்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சரிதான் ....சரிதான்....சரிதான்...

மதுரை சரவணன் said...

நீங்க சொன்னா சரிதான்.... vaalththukal

Unknown said...

சரிதான்

drs007 said...

Super..

Mohan said...

Veetla adi palamo????

Post a Comment