Tuesday, February 1, 2011

அடுத்த வாரிசு

'ராம்நாத் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்' உரிமையாளர் ராம்நாத் நேற்று அதிகாலையில் இறந்து போனார்.

ராம்நாத் திருமணம் ஆகாதவர்.

எனவே, அவரது இந்தக் கோடிக்கணக்கான சொத்துக்கு நேரடி வாரிசு கிடையாது.

அவர் தனது மொத்தச் சொத்தையும் யார் பெயரில் எழுதி வைத்திருக்கிறார் என்பது ஒரு ரகசியமாகவே இருந்தது.

ஆனால், அதை யார் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறார் என்பது, அவரது வக்கீலான எனக்கும் ராம்நாத்தின் நெருங்கிய நண்பர்கள் சில பேருக்கு மட்டும்தான் தெரியும்.

இன்னும் சொல்லப்போனால், இனி அந்தச் சொத்துக்கு முழு உரிமையாளராகப் போகும் அவரது தூரத்து உறவுக்கார ஏழை அநாதைப் பெண்ணான, அந்த வசந்திக்குக் கூடத் தெரியாது.

ராம்நாத் இறந்ததும் வசந்தியைத் தேடி அவள் தங்கியிருக்கும் விடுதிக்குப் போனோம்.

அவள், யாரோ தனது தோழி வீட்டுக்குப் போயிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

ராம்நாத்தின் இறுதிக் காரியங்களில் நிறைய வேலை பாக்கி இருந்ததால், எனக்குத் தொழில்ரீதியாக நிறைய உதவிவரும் அந்தப் 'ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜன்ஸி'யைத் தொடர்பு கொண்டேன்.

அதன் முதலாளி விக்ரம் ஒரு துடிப்பான வளரத் துடிக்கும் இளைஞன்.. நல்ல புத்திசாலி.

அவனிடம் வசந்தியின் ஃபோட்டோவைக் கொடுத்து, ஆனால் அந்த உயில் விஷயத்தைச் சொல்லாமல், அந்தப் பெண்ணை பத்திரமாய் மூன்றாம் பேருக்குத் தெரியாமல் கொண்டு வரும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தேன்.

பிறகு, எனக்கிருந்த பிடுங்கல்களில் இந்த விஷயம் மறந்துபோக, ஒரு வாரம் கழித்து அவனுக்கு போன் செய்தேன்.

"என்னாச்சு விக்ரம்.? அந்த வசந்தியை கண்டுபிடிச்சுட்டியா..?".

விக்ரம் மறுமுனையில் பதில் சொன்னான்.

"நீங்க சொன்ன மறுநாளே கண்டுபிச்சுட்டேன் சார்..!".

"அப்புறம் அவ எங்கே இருக்கிறா..?".

நான் கேட்டதும் விக்ரம் கூலாய் பதில் சொன்னான்.

"என்கூட என் வீட்டில்தான் இருக்கிறா சார்...! பாவம் ஏழைப் பொண்ணு. சின்ன வயசு. என்னைப் போலவே அநாதை.பாக்கவே ரொம்பக் கஷ்டமா இருந்தது. மனசு தாங்கல.அதனால, நேத்துதான் அவளை வடபழனில வச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...!".
.
.
.

4 comments:

Anonymous said...

நல்லாருக்கு கதை..தொடருங்கள்

இளைய கவி said...

நல்லாருக்கு கதை

Anonymous said...

ithu suppuru

சென்னைத்தமிழன் said...

அய்யோ... அய்யொ.... நல்ல டமாசு....

Post a Comment