Friday, September 24, 2010

ஸ்தோத்திரம் ஃபாதர்

தில்லுதுரயும் அவர் நண்பரும் நடந்து போகும் வழியில், ஒரு ஆர்.சி. சர்ச் வாசலில் அந்த நபரைப் பார்த்தார்கள்.

நீண்ட வெள்ளை மழைக்கோட்டை மாட்டி, இடுப்பில் நழுவாமல் இருக்க ஒரு கயிற்றாலும் கட்டியிருந்த அவரைப் பார்க்க ஒரு கிறிஸ்தவ பாதிரியாரைப் போலவே இருக்க அவரிடம்,"ஸ்தோத்திரம் ஃபாதர்..." என்றார் தில்லுதுரயின் நண்பர்.

அவரும் பதிலுக்கு கிண்டலாகச் சிரித்தபடியே, "ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்..." என்று சொல்லிவிட்டுப் போனார்.

நண்பர் தொடர்ந்து அவரிடம்,"ஃபாதர்..." என்று ஏதோ தொடரப் போக...

இடைநுழைந்த தில்லுதுர, "டேய் நிறுத்து, அவரை எனக்குத் தெரியும்..." என்றவர் தொடர்ந்து சொன்னார்.

"அவர் ஃபாதரே கிடையாது. ஏன்னா, அவருக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகூட இருக்கு..!".
.
.
.

3 comments:

senthil said...

:) super

சரவணன்.D said...

நன்றி!!!

சென்ஷி said...

ஹாஹாஹா... செம்ம முரண்பாடு ;))

Post a Comment