Monday, September 6, 2010

நொந்தகுமாரன்

நந்தகுமாரன் ஒரு காலத்தில் பயங்கர ஃபைனான்சியர்.

இப்போ எல்லாம் போச்சு.

வாங்கியவன் எல்லாம் காணாமல் போவதும், போய் விசாரித்தால் எல்லோரும் தப்பான அட்ரஸ் கொடுத்திருப்பதும் தொடர்ந்து நடக்க நந்தகுமாரன் வாழ்வில் நொந்தகுமாரனாகிவிட்டான்.

செல்வம் போய், கையில் இருந்த காசுபணம் போய், கார் வீட்டையெல்லாம் பேங்க் ஜப்தி செய்ய நந்தகுமாரன் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.

குடும்பம் இல்லாதவர் என்பதால் பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை.

என்றாலும் வயிற்றுப்பாட்டுக்கே திண்டாட்டம் ஆகிவிட்டது இப்போது.
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.

பணம் போச்சு, கௌரவம் போச்சு, மரியாதை, மதிப்பு, நண்பர்கள் என எல்லாமே போயாச்சு.

எல்லாம் போனாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே,
அது போகவேயில்லை... விடாமல் நந்தகுமாரனைத் துரத்தியது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நந்தகுமாரன், யாருக்கும் தெரியாமல் பக்கத்து ஊரில் போய் பிச்சை எடுப்பது என முடிவு செய்தார்.

'எங்கே பிச்சை எடுக்கலாம்...' என கடவுள் முன்னால் திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தார்.

கோயில்,கடைத்தெரு,பஸ் ஸ்டான்ட் என ஏகப்பட்ட இடங்கள் எழுதிப் போட்டதில் "கோயில்" என சீட்டு கிடைத்தது.

மறுநாள் காலையிலேயே நந்தகுமாரன் கடவுளின் திருவுள்ளப்படி பக்கத்து ஊர்க் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டார்.

காலையிலிருந்தே பக்தர்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்களேயொழிய, நந்தகுமாரன் தட்டில் விழுந்ததோ ஐம்பது பைசாவும் ஒரு ரூபாயுமான சில்லறைகளே.

பொழுது சாயும்வரை காத்திருந்தும் ஒரு இருபது ரூபாய்கூடச் சேரவில்லை.
நொந்துபோன நந்தகுமாரன், 'வேறு எங்கே உட்காரலாம்...' என்று பார்த்த போது... சற்று தூரத்தில் ஒரு வைன் ஷாப் கண்ணுக்குத் தெரிந்தது.

மாலை நேரம் ஆனதால், இப்போது அங்கே கொஞ்சம் நடமாட்டமும் அதிகமாயிருக்க... ஊருக்குக் கிளம்பும் முன் அங்கேயும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்கலாம் என முடிவு செய்தார் நந்தகுமாரன்.

உள்ளே போனவர்கள் நல்ல போதையில் வெளியேவர, அவர்கள் கையிலிருந்து நந்தகுமாரன் தட்டில் ஐந்தும் பத்துமாய் ரூபாய் நோட்டுகளாய் விழ ஆரம்பித்தது.

தட்டு நிறைய நோட்டுகள் விழவிழ, நந்தகுமாரன் எதிரே தெரிந்த கோவில் கோபுரத்தைப் பார்த்துச் சொன்னார்.

"பகவானே... என்னிடம் பணம் வாங்கியவர்கள்தான் ஒரு அட்ரஸ் கொடுத்துவிட்டு இன்னொரு அட்ரஸில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நீயுமா...?".
.
.
.

8 comments:

senthil velayuthan said...

nalla iruku

சென்ஷி said...

haa haa haa :))

அறிவிலி said...

:)

Anonymous said...

வைன் ஷாப் இல்லை.டாஸ்மாக்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha ha... super thought

Abhimanyu said...

:-) க க க போ

neyvelivichu.blogspot.com said...

kadavul: enakkiruntha options romba kammi.. iruntha listil wine shoppukku pakkathil (as always) irunthathu koil than.. athan athai sonnen.. :-)

chinnapiyan said...

அந்த கடைசி வரிகள் மனத்தை என்னவோ செய்கிறது.நன்று. நன்றி.

Post a Comment