Thursday, September 2, 2010

கடவுளின் படம்

அது பள்ளியின் ட்ராயிங் வகுப்பு.

குழந்தைகளை அவர்கள் மனதுக்குப் பிடித்ததை வரையச் சொல்லிவிட்டு வகுப்பைச் சுற்றி வந்தார் ஆசிரியை.

குழந்தைகள் எல்லோரும் குனிந்து வேகவேகமாய் வரைந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தவர், அந்தச் சிறுவன் வரைவதைப் பார்த்ததும் நின்றார்.

டேனி தன்னருகில் ஆசிரியை நிற்பதும் தெரியாமல் அக்கறையாய் வரைந்து கொண்டிருந்தான்.

அவன் கவனம் எல்லாம் படத்தின் மேலேயே இருந்தது.

டீச்சர் கேட்டார்.

"டேனி என்ன படம் வரைஞ்சுட்டு இருக்க...?".

டேனி கண்களை உயர்த்தாமல் பதில் சொன்னான்.

"கடவுளோட படம் டீச்சர்...!'.

டீச்சர் அவன் ஆர்வத்தைக் கவனித்தபடியே கேட்டார்.

"ஆனா, கடவுள் எப்படி இருப்பாருன்னு யாருக்கும் தெரியாதே...!".

டேனி மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னான்.

"இப்ப நான் வரைஞ்சு முடிச்சதும் தெரிஞ்சுடும் டீச்சர்...!'.
.
.
.

3 comments:

Jey said...

//"இப்ப நான் வரைஞ்சு முடிச்சதும் தெரிஞ்சுடும் டீச்சர்...!'//

:)

Unknown said...

gud one...!

Subramanian said...

அருமை!

Post a Comment