Sunday, August 30, 2015

தில்லுதுரயின் கடைசி நிமிடங்கள்

மாலை 5 மணிக்கு தில்லுதுரயைப் பரிசோதித்த டாக்டர் வந்த மெடிக்கல் ரிப்போர்ட்களைப் பார்த்ததுமே சொல்லிவிட்டார்.

”இன்னிக்கு ராத்திரிவரை தான் உங்க ஆயுள். நாளைக்கு காலைல நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க. அதனால உங்களுக்கு புடிச்சது எல்லாத்தையும் இன்னைக்கு ராத்திரிக்குள்ள செஞ்சிக்கங்க.!”.

ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்த தில்லுதுர, விஷயத்தை அழுதபடியே மனைவியிடம் சொன்னார்.

மனைவியும் துடித்துப் போனாள்.

கண்களைத் துடைத்தபடி தில்லுதுர கேட்டார்.

“எனக்கு உன் கையால உருளைக்கிழங்கு போண்டாவும், வாழைக்கா பஜ்ஜியும் சாப்பிடணும் போலருக்குமா… கொஞ்சம் செஞ்சி தர்றியா.?”

“இதோங்க… “ என்று எழுந்து ஓடிய மனைவியிடம் சொன்னார், “அப்படியே அதுக்கு தொட்டுக்க கொஞ்சம் தேங்காச் சட்டினியும் செஞ்சிடும்மா.!”
இரவு ஏழு மணிக்கு கேட்டார்.

“ராத்திரி சாப்பாட்டுக்கு வஞ்சிரம் மீன் குழம்பு, மட்டன் கோலா அப்படியே ரத்தப் பொறியல் செஞ்சிடும்மா. இன்னும் ஒரு நாலு மணிநேரந்தான் இருப்பேன்.!”

இரவு பத்து மணிக்கு கேட்டார்.

“நல்ல பசும் பாலை வாங்கி… அதை நல்லா சுண்டக் காய்ச்சி, கொஞ்சமா சர்க்கரை போட்டு, ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்டர் காஃபி போட்டுக் கொடும்மா.! இன்னும் ஒரு ரெண்டு மணிநேரந்தான் இருக்கு.!”

இரவு 12 மணி.

எதோ நினைத்தபடி... தன்னருகே அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்புகிறார் தில்லுதுர.

தூக்க கலக்கத்துடன் திரும்பிப் படுத்த மனைவி கோபத்துடன் சொன்னாள்.

“பேசாம படுங்ககாலைல எந்திரிச்சதும் ஆயிரம் வேல இருக்கு. சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும், எடுத்துட்டுப் போறதுக்கு வண்டி சொல்லணும்உங்களுக்கென்ன காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல..!!”.
.
.
.