Saturday, November 30, 2013

சோமாலிய கடற்கொள்ளையன் சொறிமுத்து


ஸ்ரீராம் கப்பல் சம்பந்தமான வியாபாரம் செய்பவன்.

அன்று அவன் சோமாலியவிற்கு ஒரு விற்பனை குறித்துப் பேசுவதற்காக வந்திருந்தான்.

அந்தக் கம்பெனி கடற்கரை ஓரமாக இருந்ததால், தனது தங்கும் அறையையும் அங்கேயே பக்கத்தில் இருந்த ஹோட்டலில் போட்டிருந்தான் ஸ்ரீராம்.

அன்றிரவு போரடிக்கிறது என்று ஹோட்டல் பாருக்குப் போனபோதுதான், பாரில் அந்தக் கடற்கொள்ளையனை ஸ்ரீராம் சந்தித்தான்.

ஸ்ரீராம் ஒரு கடற்கொள்ளையனை சந்திப்பது அதுதான் முதல்முறை.

கட்டைக் காலும், கைகளில் ஹூக்கும், ஒரு கண்ணை மறைத்த பேட்சும் பார்க்கவே வித்தியாசமாயிருந்த, அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் ஸ்ரீராம்.

கடற்கொள்ளையன் நல்ல போதையில் இருந்ததால், குஷியாய் தன் பெயர் சொறிமுத்து என்றும்... தான் ஒரு மிகப் பெரிய கடற்கொள்ளையன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ஸ்ரீராம் கேட்டான்,"அண்ணே... உங்க ஒரு கால் ஏன் இப்படிக் கட்டைல செஞ்சதா இருக்கு..?".

கேட்க ஆள் கிடைத்ததும் சொறிமுத்து சந்தோஷமாய் தனது சாகஸங்களை அவிழ்த்துவிடத் துவங்கினான்.

"சுறா மிகுந்த கடல்களில் நீச்சல் அடிப்பது கடற்கொள்ளையர்களின் வீரத்துக்கு அடையாளம். அப்படி ஒரு சமயத்தில் ஒரு சுறா என் காலைக் கவ்விக் கொண்டது. நான் அந்தச் சுறாவை அந்த இடத்திலேயே கொன்று தள்ளிவிட்டுத்தான் கப்பல் ஏறினேன். ஆனால், அதற்குள் அந்தச் சுறா என் காலை சிதைத்திருந்தது. அப்படித்தான் என் கால் போனது..!".

தன் கால் போனதைக்கூட அவ்வளவு சந்தோசமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான் சொறிமுத்து.

ஸ்ரீராம் அடுத்த சந்தேகத்தைக் கேட்டான்.

"அதுசரி.. உங்க கைக்கு என்ன ஆச்சு.? அதுல ஏன் இப்படி ஹூக் மாட்டிருக்கீங்க?".

சொறிமுத்து தனது அடுத்த சாகஸத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

"கடற்கொள்ளையர் வாழ்க்கைங்கறது ஆஃபீஸ் போய்ட்டு வர்றது மாதிரி அவ்வளவு ஈசியான ஜாப் கிடையாது. அவங்க வாழ்க்கைல போர் தவிர்க்கவே முடியாதது. அதுபோல ஒருமுறை சண்டையின் போது வாள் பிடித்துச் சண்டை போட்ட என் வலது கையை மணிக்கட்டோடு வெட்டிவிட்டான் எதிரி. அதற்கப்புறம் அவன் தலையைக் கழற்றி விட்டுத்தான் ஓய்ந்தேன். அதன் பிறகு, என் தலைவன் என் வீரத்தைப் பாராட்டி இந்த ஹூக்கை என் கைகளில் மாட்டிவிட்டான்...!" சொல்லிவிட்டு இடி இடியெனச் சிரித்தான் சொறிமுத்து.

ஸ்ரீராம் அவனது தைரியத்தை வியந்தபடியே அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"உங்க வலது கண்ணுல பேட்ச் போட்டு இருக்கீங்களே... அதுக்கு என்ன ஆச்சு..?".

ஸ்ரீராம் கேட்டதும் சொறிமுத்து சொன்னான்.

"ஸீகல்னு கடல்ல காக்கா மாதிரி ஒரு பறவை இருக்கு. அது ஒருசமயம் என் கண்ணுல ஆய் போயிடுச்சு..!".

ஸ்ரீராம் அரண்டு போனான்.

"என்ன சொல்றீங்க... ஒரு பறவையோட ஆய் கண்ணைப் போக்கற அளவுக்கு பாய்ஷனா என்ன..?".

ஸ்ரீராம் கேட்டதும், அதற்கு சொறிமுத்து மிகச்சோகமாய் பதில் சொன்னான்.

"அது அவ்வளவு பாய்ஷன் இல்லை. அது என்ன ஆச்சுனா, அந்த சம்பவம் நான் கையில ஹுக் மாட்டின அடுத்தநாளே நடந்தது..!".
.
.
.

5 comments:

maithriim said...

:-)))

amas32

Unknown said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//போர் //

ரொம்ப போர் அடிக்கும்போதுபடிக்க வேண்டிய கதை என்று அர்த்தமா? (ச்சும்ம்மாதான்!)

நல்ல சுவையான கதை.

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா...

udhay said...

ஹாஹா :-)

Post a Comment