அலுவலகத்திலிருந்து தில்லுதுர திரும்பும் போதே, தன் மனைவி பதட்டத்துடன் வாசலில் காத்திருப்பதைப் பார்த்தார்.
தில்லுதுரயை நேரில் பார்த்ததும் தான், அவர் நிம்மதியுடன் நீண்ட ஒரு பெருமூச்சை விட்டபடி சொன்னார்.
"அப்பாடி... உங்களுக்கு ஒண்ணுமில்லியே.! நான்கூட பயந்தே போய்ட்டேன்.!"
மனைவி சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யத்துடன் தில்லுதுர கேட்டார்.
"ஏன்... பயப்படற அளவுக்கு என்ன ஆச்சு.?".
தில்லுதுர கேட்டதும் அவர் மனைவி அதே பதைபதைப்பு மாறாமல் சொன்னார்.
"இல்ல... இப்ப கொஞ்சம் முன்ன இந்த வழிய போன ஒருத்தன் சொன்னான், 'தெரு முனைல கருப்பா, குண்டா, எரும மாடு மாதிரி ஒரு ஆளு அடிபட்டுக் கெடக்கான்னு..' அதான் நீங்களோனு பயந்திட்டேன்.!" என்றாள்.
.
.
.
8 comments:
யப்பா. என்ன ஒரு கொலைவெறி
soopar..
தில்லுதுரையின் மனைவிக்கு ரொம்ப சந்தோசமாயிருந்துருக்குமே?
என்ன ஒரு நல்ல மனைவி! :-)
amas32
தில்லு துர பெண்டாட்டி தில்லு துரச்சியா இருக்காளே !
வணக்கம்
அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹா.... ஹா...
உம் எழுத்து நடை ..
சிரிப்பை வரவலைக்கிறது..
வாழ்த்துக்கள்.இப்பணி தொடர..
Post a Comment