ஜப்பானிய மன்னன்
ஒருவனுக்கு திடீரென ஒரு தீவிர சந்தேகம் கிளம்பியது.
இந்த துறவிகள்
ஏன் துறவறம் மேற்கொள்கிறார்கள்.? நாம் இறந்தால் என்ன ஆவோம் என சாஸ்திரங்கள் சொல்கிறது.
ஆனால் இந்தத் துறவிகள் இறந்த பிறகு ஏதும் அதிசயங்கள் நடக்குமோ.? அதனால்தான் துறவறம்
பூணுகிறார்களோ.?
தனது சந்தேகத்தை
தீர்த்துக் கொள்ள அவன் ஒரு சென் துறவி குடோ-வை அணுகினான்.
“தன்னை முழுவதும்
உணரும் ஞானஒளி பெற்ற ஒரு ஞானகுரு தான் இறந்த பிறகு என்ன ஆகிறான்.?” என்று கேட்டான்.
துறவியோ எந்த உணர்ச்சியும்
இன்றி மன்னனைப் பார்த்துக் கேட்டார்.
“அதை ஏன் மன்னா
என்னிடம் கேட்கிறாய்.? அது எப்படி எனக்கு தெரியும்.?”.
மன்னன் இன்னும்
அதிக குழப்பத்துடன் குருவிடம் கேட்டான்.
“உங்களுக்குத்
தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும். நீங்கள்தானே ஞானகுரு.?”.
மன்னன் கேட்டதும்
குடோ அவனைப் பார்த்து புன்னகைத்தபடி பதில் சொன்னார்.
“ஆமாம்… நான் ஞானகுரு
தான். ஆனால் நான் இன்னும் சாகவில்லையே.!”.
.
.
.
1 comment:
:-))))
amas32
Post a Comment