டேனியின் ஸ்கூலில்
ட்ரேடிங் பற்றி ஏதோ சொல்லிக் கொடுத்த தினம் அன்று.
அவன் சாயங்காலம்
வீட்டுக்கு வந்ததுமே அவனுடைய அப்பாவிடம் தனக்குப் பிடிக்காத தன்னுடைய டைனோசர் பொம்மையை
விற்க முயன்று கொண்டிருந்தான்.
“எவ்வளவு ரூபாய்டா
இந்த பொம்மை.?”.
அப்பா கேட்டதும்
டேனி கண்களை விரித்துக் கொண்டு சொன்னான்.
“ட்வெண்ட்டி தவ்சண்ட்
ரூபீஸ்.!”.
அப்பா சிரித்தபடியே
சொன்னார்.
“இருபதாயிரம் ரூபாய்
ரொம்ப அதிகம்டா. இந்த பொம்மையோட விலையே அறுநூறு ரூபாய்தான்.!”.
சொன்னதும் டேனி
சிரித்தபடியே சொன்னான்.
“அது இந்த பொம்மை
புதுசா வாங்கினப்ப. இப்பத்தான் நம்ம வீட்டுல எல்லோர்கிட்டயும் பழகிடுச்சில்ல.!”.
”அப்பக் கூட இது
ரொம்ப அதிகம்டா.!”.
சொல்லிவிட்டு அவர்
வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட, டேனி வெளியே விளையாட ஓடிவிட்டான்.
ரெண்டொரு நாள்
போயிருக்கும்.
திடீரென ஞாபகம்
வந்து அவர் டேனியிடம் கேட்டார்.
“டேய்… அந்த டைனோசர்
பொம்மை என்னாச்சு.?”.
அவர் கேட்டதும்
டேனி வெற்றிக் களிப்புடன் சொன்னான்.
“அதை அன்னிக்கே
பக்கத்து வீட்டு அர்னேஷ் கிட்ட இருபதாயிரத்துக்கு வித்துட்டேனே.!”.
கேட்டதும் ஆச்சர்யத்துடன்
அவர் டேனியிடம் கேட்டார்.
“எப்படினு சொல்லு…
புரியலயே.!”.
கேட்டதும் டேனி
புன்னகையுடன் சொன்னான்.
“என் இருபதாயிரம்
ரூபாய் பெரிய டைனோசர் பொம்மைய கொடுத்திட்டு, அவன்கிட்ட இருந்த பத்தாயிரம் ரூபாய் சின்ன
கார் பொம்மை ரெண்டை வாங்கிட்டேன். சரிதான.?” என்றான்.
.
.
.
3 comments:
:))
ஹா... ஹா.... குழந்தைகள் உலகம்...
அழகான..கவிதையான கதை..
Post a Comment