Tuesday, August 13, 2013

தில்லுதுர கம்பெனி ஆட்கள்

தில்லுதுரயின் அளவான சாஃப்ட்வேர் கம்பெனி, கடுமையான பொருளாதார சிக்கலில் தவித்த காலம் அது.

ஹெ.ஆர். டிபார்ட்மெண்ட்டில் இருந்து சிக்கலை சமாளிக்க ஆள் குறைப்பு செய்ய தில்லுதுரயிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

சொன்னபடி ஆட்களைக் குறைத்தாலும் தில்லுதுர வேறொரு யோசனையுடன் இருந்தார்.

ஹெச்.ஆர். ஹெட்டை கூப்பிட்டு தனது கம்பெனியின் சிறந்த இருபது பேரைத் தேர்ந்தெடுத்து... தமது செலவில், பத்துப் பேரை இங்கிலாந்துக்கும், பத்துப் பேரை அமெரிக்காவுக்கும் அனுப்பி வெவ்வேறு கம்பெனிகளில் வேலை செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னார்.

ஓரிரு வருடங்களில் தமது கம்பெனி சிக்கலில் இருந்து மீண்டதும் இவர்களது அனுபவத்தைப் பயன்படுத்தி, தனது கம்பெனியை மேம்படுத்தலாம் என்பது அவரது திட்டம்.

சொன்னபடி அந்த இருபது பேரையும் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் அனுப்பி வைக்கவும் செய்தார்கள்.

எண்ணிப் பதினைந்தே மாதம்.

தில்லுதுரயின் கம்பெனி மறுபடி பிஸினெஸில் சூடுபிடித்து பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருந்தது.

திடீரென ஒருநாள் அந்த இருபது பேர் ஞாபகம் வந்து ஹெ.ஆர். ஹெட்டைக் கூப்பிட்டு விசாரித்தார் தில்லுதுர.

”வெளிநாடு பயிற்சி பெற்ற இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்.?”.

ஹெ.ஆர். சிரித்தபடி சொன்னார்.

“இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற அனைவரும் உண்மையிலேயே புத்திசாலிகள். அவர்கள்  எல்லோருக்கும் இப்போது நம் கம்பெனியில் மிக உயர்ந்த பதவிகளைக் கொடுத்தாயிற்று.!”.

தனது முடிவு சரியாய் அமைந்து விட்ட சந்தோஷத்துடன் தில்லுதுர ஹெச்.ஆரிடம் அடுத்துக் கேட்டார்.

“அந்த... அமெரிக்கா போனவர்கள் என்னாச்சு.?”.

தில்லுதுர கேட்டதும் ஹெச்.ஆர். முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் தில்லுதுரயிடம் சொன்னார்.

“அவய்ங்க ரொம்ப புத்திசாலிக.... திரும்பி வரமுடியாதுனு சொல்லிட்டு அமெரிக்காவுலயே செட்டிலாயிட்டானுக.!”.
.
.

2 comments:

ராஜி said...

தேவைதான் தில்லு துரைக்கு!!

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா...

தில்லுதுரைக்கு ஆப்பு வச்சிட்டாங்களா அமெரிக்கா முதலாளிகள்...

Post a Comment