Friday, August 16, 2013

தில்லுதுர அட் தியானா க்ளாஸ்

தில்லுதுர படித்து முடித்து நீண்ட நாட்களாக வேலையின்றி வீட்டில் சும்மா இருந்த காலம் அது.

அப்பா எவ்வளவு திட்டியும் கண்டுகொள்ளாமல், சும்மா இருப்பதின் சுகத்தை முழுதாய் அனுபவித்தபடி தில்லுதுர ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.

திட்டித் திட்டி அலுத்துப்போய் இப்போதெல்லாம் அவர் தில்லுதுரயை திட்டுவதைக் கூட நிறுத்தி விட்டார்.

கொஞ்ச நாட்கள் போயிருக்கும்.

அன்று தில்லுதுரயின் அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தில்லுதுரயின் அம்மா மகிழ்வுடன் அவரிடம் சொன்னார்.

”ஏங்க... விஷயம் தெரியுமா.! நம்ம பையனுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு.!”.

அவர் சொல்வதைக் கேட்ட அப்பா கோபத்துடன் கேட்டார்.

”ஏன்... உம்பையன் எங்கயும் வேலைக்குச் சேந்துட்டானா.?”.

அவர் கேட்டதும், தில்லுதுரயின் அம்மா சந்தோசத்துடன் சொன்னார்.

“இல்லீங்க... ஆனா அவனுக்கு நல்ல புத்தி வந்துடும். இன்னிலருந்து அவன் ஒரு தியான வகுப்பில சேர்ந்திருக்கான்.!”.

சொன்னதும் கடுப்புடன் திரும்பிய தில்லிதுரயின் அப்பா கோபமாய்ச் சொன்னார்.

“வெவரம் புரியாமப் பேசாத.! தியானம்ங்கறதே சும்மா இருக்கறதுதான். என்ன... இவ்வளவு காலம் தனியா சும்மா இருந்த உம்மகன் இனி கூட்டத்தோட சும்மா இருப்பான். அவ்வளவுதான் வித்தியாசம்.!”

அவர் சொல்லிக் கொண்டே போக, அதற்காக மகனுக்கு ரூபாய் ஐயாயிரம் கொடுத்த அதிர்ச்சியில் உறைந்திருந்தார் தில்லுதுரயின் அம்மா.
.
.
.


2 comments:

'பரிவை' சே.குமார் said...

தில்லுதுரை கலக்கிட்டாரு போங்க... சும்மா இருக்க 5000 அம்போவா...

Unknown said...

நல்ல நகைச்சுவை கதை...

Post a Comment