Tuesday, June 4, 2013

நமஸ்காரா டேனி



அது திருமணத்திற்குப் பிறகு நானும் டேனியும் கோவையில் இருக்க, அவர் மட்டும் மைசூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம்.

ஏதோ ஒரு சமயத்தில் மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்று என்னையும் அவனையும் மைசூரு வரச் சொல்லியிருந்தார் அவர்.

அருமையான ஊர்... அட்டகாசமான க்ளைமேட்.

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பேப்பரில் படிப்பது போலெல்லாம் இல்லாமல் அன்பைப் பொழியும் மக்கள்.

போன முதல் நாள் காலை, வெளியே ஊர் சுற்றிப் பார்க்க கிளம்புவதற்கு முன், அவர் ஹவுஸ் ஓனரம்மாவை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது வீட்டுக்குள் இருந்த ஹவுஸ் ஓனரின் குழந்தை ஷன்மதியை அவர்கள் டேனிக்கு அறிமுகம் செய்ய, அது அழகாய் டேனியைப் பார்த்து புன்னகைத்தபடி, "நமஸ்காரா..!" என்றது.

டேனி அதுவரை நமஸ்காரா என்ற வார்த்தையை கேட்டதில்லை என்பதால், அது அந்தக் குழந்தையின் பெயராய் இருக்குமோ என்றா குழப்பத்துடன் அந்தக் குழந்தையைப் பார்த்து, "நான் டேனி" என்றான்.

பேச்சு சுவாரஸ்யத்தில் யாரும் அதைக் கவனிக்கவில்லை என்றாலும், வெளியே செல்லும்போது டேனிக்கு நான் நமஸ்காரா என்றால், வணக்கம் குட்மார்னிங் போல ஒரு வார்த்தை என்பதை மெல்ல சொல்லிக் கொடுத்தேன்.

டேனிக்கும் புரிந்தது போலத்தான் இருந்தது.

மறுநாள் நாங்கள் பார்க்குக்கு கிளாம்பிக் கொண்டிருந்த சமயம்... வாசலில் ஹவுஸ் ஓனர் குழந்தை ஷன்மதியைப் பார்த்ததும் டேனி அவளிடம் ஓடினான்.

விளையாடிக் கொண்டிருந்த அவள் தோள்களைத் தொட்டு அவள் திரும்பியதும் அழகாய், "ஷன்மதி... நமஸ்காரா.!" என்றான்.

டேனி சொன்னதும் ஒரு விநாடி யோசித்த ஷன்மதி புன்னகையுடன் சிரித்தபடி அவனிடம் சொன்னாள்.

"நான் டேனி.!".
.
.
.

11 comments:

Mohan said...

ஹா ஹா ஹா. அந்த சமையம் நானும் மைசூர் ல தானே இருந்தேன்.

chinnapiyan said...

வழக்கம்போல கடைசியில் ஒரு எதிர்பாரா ட்விஸ்ட். நன்றி.

ddrd said...

எப்படி மேடம் இப்படி எல்லாம் .... நல்ல இருக்கு ....

Nat Sriram said...

Excellent !!

Shankar said...

good as usual.

Shankar said...

Very good and witty as usual.

SRK said...

Super.

maithriim said...

aaaww so sweet!!

amas32

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைத்த நமஸ்காரா..!

Mamathi said...

:)

Mamathi said...

:)

Post a Comment