Friday, April 12, 2013

சூப்பர் மேடம்




தில்லுதுரயின் மனைவி அந்த பெட் ஷாப்புக்குள் நாய்க்குத் தீனி வாங்கத்தான் நுழைந்தாள்.

ஆனால், அந்த ஷாப்புக்குள் நுழைந்ததும் அவள் கண்ணில் பட்டது அந்த அழகான பச்சைக் கிளி.

நல்ல பச்சை நிறமும் சிவந்த மூக்குமாய் பார்ப்பதற்கே அருமையாய் இருந்தது அந்தக் கிளி.

அந்தக் கிளியும் தில்லுதுரயின் மனைவியைப் பார்த்ததும், "சூப்பர் மேடம் சூப்பர் மேடம்..." என்று குதிக்க ஆரம்பித்தது.

தில்லுதுரயின் மனைவி அந்தக் கிளியின் விலை என்ன என்று கடைக்காரரைக் கேட்டாள்.

கடைக்காரரோ,"அந்தக் கிளியை நான் சும்மா கூடத் தந்துவிடுவேனம்மா. ஆனால், அது நம்ம வீட்டுக்கு வேண்டாம். ஏன்னா, அது ஒரு மோசமான தொழில்கார பொம்பள வீட்டுல வளர்ந்த பேசும் கிளி. அந்தப் பொம்பளயும் மோசம், அதோட அந்தக் கிளியின் பேச்சும் ரொம்ப மோசம்.."

கடைக்காரர் என்ன சொன்னாலும்...  அது பேசும் கிளி என்பதால் தில்லுதுரயின் மனைவிக்கு ஆர்வம் இன்னும் அதிகம் ஆகிவிட்டது.

கிளியை பேக் பண்ணச் சொல்லிவிட்டு காரில் வந்து உட்கார்ந்தாள்.

காருக்குள் வந்து வைத்ததிலிருந்து கூண்டுக்குள்ளேயே சிறகுகளை அடித்துக் கொண்டு கிளி சூப்பர் மேடத்துடன் காரைச் சேர்த்துக் கொண்டு,"சூப்பர் மேடம் சூப்பர் கார்...சூப்பர் மேடம் சூப்பர் கார்...!"என்று கத்திக் கொண்டிருந்தது.

கொஞ்சம் கடுப்பாயிருந்தாலும் பெரிய எரிச்சலாய் இல்லாததால் அவள் கண்டுகொள்ளவில்லை.

கொஞ்ச நேரத்தில் வீடு வந்து சேர்ந்ததும் கிளியைக் கூண்டோடு கொண்டுவந்து முன்னறையில் மாட்டிவிட்டாள்.

கிளி இப்போது சூப்பர் மேடம் சூப்பர் காருடன் வீட்டையும் சேர்த்துக் கொண்டு,"சூப்பர் மேடம் சூப்பர் கார் சூப்பர் வீடு... சூப்பர் மேடம் சூப்பர் கார் சூப்பர் வீடு...!" என்று கத்திக் கொண்டிருந்தது.

தில்லுதுரயின் மனைவி கிளியின் செய்கை விநோதமாய் இருந்தாலும், குழந்தைகள் வரும் நேரம் என்பதால், இதையெல்லாம் கவனிக்காமல் குழந்தைகளுக்கு டிபன் செய்யப் போய்விட்டாள்.

கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் வந்ததும் கிளி,"சூப்பர் மேடம் சூப்பர் கார் சூப்பர் வீடு சூப்பர் குழந்தைகள்... சூப்பர் மேடம் சூப்பர் கார் சூப்பர் வீடு சூப்பர் குழந்தைகள்...!" என்று கத்திக் கொண்டிருந்தது.

தில்லுதுரயின் மனைவி நினைத்தது மாதிரியே கிளியை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

குழந்தைகள் கிளியுடன் விளையாட்டோ விளையாட்டு என கதியாய் கிடந்தார்கள்.

இரவு எட்டு மணி இருக்கும்... தில்லுதுர அலுவலகம் முடிந்து அப்போதுதான் உள்ளே நுழைகிறார்.

குழந்தைகள் அப்பா வந்ததும் கிளியை அறிமுகப் படுத்த அழைத்துச் சென்றார்கள்.

தில்லுதுரயின் மனைவிக்கும் இப்போது ஆர்வமாய் இருந்தது.

சூப்பர் மேடம் சூப்பர் கார் சூப்பர் வீடு சூப்பர் குழந்தைகள் என்பதோடு இப்போது கிளி என்ன சேர்த்து சொல்கிறது என்று ஆர்வத்தோடு வந்து நின்றாள்.

தில்லுதுரயை பார்த்ததும் கிளி இன்னும் உற்சாகமாய் சிறகுகளை அடித்துக் கொண்டு கத்தத் துவங்கியது.

"சூப்பர் மேடம்... சூப்பர் கார்...  சூப்பர் வீடு... சூப்பர் குழந்தைகள்....."என்றா கிளி தில்லுதுரயின் பக்கம் திரும்பி...

"ஹலோ தில்லுதுர...!" என்றது.
.
.
.

4 comments:

ஏர் மறந்த உழவன் நான் said...

ஹலோ தில்லுதுர தனியாவா வந்திங்க மினிமீன்ஸ் கூட வரல...?

ஏர் மறந்த உழவன் நான் said...

ஹலோ தில்லுதுர தனியாவா வந்திங்க மினிமீன்ஸ் கூட வரல...?

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா...

தில்லுதுரைன்னா உலக்த்துக்கே தெரியும்... கிளிக்கு தெரியாத என்ன...

அருமை...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

விவேக் அம்மையப்பன் said...

தில்லு துர அந்த பொம்பள வீட்டுக்கு போயிருக்காரு போல.. நல்லா மாட்னாரு...

Post a Comment