Monday, January 30, 2012

மாவீரன் தில்லுதுர

அது ஐந்தாம் வகுப்புக்கான நீதிபோதனை வகுப்பு.

ஆசிரியை தனது மாணவர்களுக்கு நேற்று கொடுத்திருந்த அசைன்மென்ட் பற்றி கேட்டுக்> கொண்டிருந்தார்.

அது எல்லோரும் தனது பெற்றோரிடம் ஒரு நீதிக்கதையைக் கேட்டு அதை வந்து> வகுப்பில் சொல்ல வேண்டும் என்பதே.>> அதேபோல், எல்லோரும் ஒவ்வொருவராய் வந்து தனது அப்பா அம்மா சொன்ன கதைகளை> சொல்லத் துவங்கினர்.

எல்லாம், வழக்கமான கெடுவான் கேடு நினைப்பான், ஏமாற்றாதே ஏமாறாதே வகைக் கதைகளே.

கிட்டத்தட்ட ஆசிரியை அலுத்துப் போகும்போது, தில்லுதுரயைன் மகன் எழுந்து வந்தான்.

ஆசிரியை அவனிடம் ஆவலுடன் கேட்டார்.

"தம்பி... நீ எதுவும் கதை சொல்லப் போறியா?".

அவன் ஆர்வத்துடன் பதில் சொன்னான்.

"ஆமா மிஸ். எங்க அம்மா சொன்னாங்க. எங்க அப்பாவைப் பத்தின கதை!".

சுத்தமாய் அலுத்துப் போயிருந்த ஆசிரியை, சட்டென்று ஆர்வம் கண்ணில் மின்ன கேட்டார்.

அவன் ஆர்வமாய் சொல்ல ஆரம்பித்தான்.

"மிஸ்... எங்கப்பா பேரு தில்லுதுர. இது அவர் மிலிட்டரில வேலை பார்க்கும்போது நடந்தது. அவர் ஒரு சமயம் பாகிஸ்தான் பார்டர்ல போயிட்டருந்தப்ப அவர் ப்ளேனை எதிரிகள் சுட்டு விழுக வச்சிட்டாங்க. அப்ப, எங்கப்பா டக்குனு பாராசூட்ல வெளிய குதிச்சுட்டாரு. குதிக்கும்போது அவர் கையில ஒரு பாட்டில் விஸ்கி, ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி மட்டும்தான் இருந்ததாம். குதிச்ச இடமோ எதிரிகள் மத்தியில. எங்கப்பா மேல இருந்து எறங்க எறங்கவே கையில இருந்த விஸ்கிய மொத்தமும் தொறந்து குடிச்சுட்டாராம்."

ஆசிரியை மட்டுமல்ல, வகுப்பே தில்லுதுர இப்ப என்ன செஞ்சிருப்பாருனு ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தது. பையன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

"கீழே எறங்கின எங்க அப்பாவை எதிரிகள் 75 பேரு சுத்திக்கிட்டாங்க. எங்கப்பா மொதல்ல துப்பாக்கில இருந்த புல்லட் தீருற வரைக்கும் 40 பேரை சுட்டுக் கொன்னுட்டு, அடுத்த 20 பேரை கத்தி ஒடயற வரைக்கும் குத்திக் கொன்னாராம். மீதி இருந்த 15 பேரையும் வெறும் கையாலயே அடிச்சுக் கொன்னுட்டு வந்த எங்கப்பாவுக்கு அரசாங்கமே பரம்வீர்சக்ரா அவார்ட் கொடுத்துச்சாம்!".

அவன் சொல்லி முடித்ததும் வகுப்பே வியப்புடன் அவனைப் பார்க்க, ஆசிரியை மட்டும் அதிர்ச்சியுடன் அவனிடம் கேட்டார்.

"இந்தக் கதைல உங்க அம்மா உனக்குச் சொன்ன நீதி என்ன? ".

ஆசிரியை கேட்டதும் அவன் எந்த சலனமும் இல்லாமல் சொன்னான்.

"அப்பா குடிச்சிருக்கும் போது யாரும் அவர் பக்கத்துல போகக் கூடாது..!".
.
.
.

4 comments:

சத்யா said...

எப்படிலாம் யோசிக்கிற பாரு, கிரேட் மச்சி :-))

நவின் said...

என்னை போலவே டெரர் அப்பா போல...

வால்பையன் said...

haahaahaahaa

செம இண்ட்ரஸ்டிங்

Mohamed Faaique said...

செம ஸ்டோரி... சிரிச்சுகிட்டே இருக்கேன்...
நீதி - செம....

Post a Comment