Wednesday, February 23, 2011

தில்லுதுர Vs அதிசய நாய்

தில்லுதுரயின் நண்பர் ஒரு அதிசய நாயை எங்கிருந்தோ வாங்கி வந்தார்.

அந்த நாய்க்கு தண்ணீரில் நடக்கும் சக்தி இருந்தது.

ஆண்டாண்டு காலமாய் தில்லுதுரயின் பெருமைகளையே கேட்டுக் கேட்டு அலுத்துப் போயிருந்த அந்த நண்பர், இப்போது தில்லுதுரயிடம் தனது பெருமையைக் காட்ட நினைத்தார்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை, தில்லுதுரயையும் நாயையும் கூப்பிட்டுக் கொண்டு துப்பாக்கியுடன் ஏரிக்கரைக்கு வந்தார் அவர்.

தில்லுதுர பார்த்துக் கொண்டிருக்கும்போதே... கரையில் இருந்தபடி அவர் வாத்துக்களை ஒவ்வொன்றாக சுட, அந்த அதிசய நாயும் தண்ணீரின் மேலாக நடந்து போய் ஒவ்வொரு வாத்தையும் கரைக்கு எடுத்து வந்து கொண்டிருந்தது.

உணர்ச்சியே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுரயிடம் திரும்பி, நண்பர் பெருமையுடன் கேட்டார்.

"பாத்தியா தில்லு, எப்படி என் நாய்..?".

கேட்ட நண்பரை திரும்பிப் பார்த்த தில்லுதுர சலனமின்றிக் கேட்டார்.

"ஆமா, உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே...!".
.
.
.

8 comments:

சென்ஷி said...

adakkadavule :)))

Gunasekaran said...

நல்லா இருக்கு :-)

Gunasekaran said...

நல்லா இருக்கு :-)

Thangaraju Ramasamy said...

:::::)))))))))))

சி.பி.செந்தில்குமார் said...

முத ஓட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>>>"அமா, உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே...!".
.

ஹா ஹா செம கமெடி பஞ்ச்


அப்புறம் அமா = ஆமா

செல்வா said...

தில்லு எப்பவும் தில்லுதான் .. ஹி ஹி ..
எப்படி கேள்வி கேட்டார்ல ..

குறையொன்றுமில்லை. said...

நல்ல காமெடி பஞ்ச் தான்.

Post a Comment