Tuesday, January 25, 2011

தொபுக்கடீர்..!

ஒரு மாலை வேளையின் இளம் வெயிலில், அந்த மூன்று துறவிகளும் இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஏரியின் நடுவில் இருந்த படகில் உட்கார்ந்திருந்தார்கள்.

அதில் இருவர் அந்த இடத்திற்கு மிகப் பழக்கமானவர்களாகவும், ஒருவர் மிகப் புதியவராகவும் தோன்றினார்கள்.

வெயில் சற்றே அதிகமாக, அதில் ஒரு துறவி புதிய துறவியிடம், "நான் கரையில் இருக்கும் மரத்தடிக்குப் போகிறேன்..!" என்றபடி, படகை விட்டு இறங்கி சடசடவென்று தண்ணீரின் மீது நடந்துபோய், கரையில் இருந்த அந்த மரத்தடியில் உட்கார்ந்தார்.

உடனே, அடுத்த துறவியும் புதிய துறவியிடம், "நானும் அவருக்குத் துணையாய் அங்கே போகிறேன்..!' என்றபடி படகில் இருந்து இறங்கினார்.

அவரும், அதேபோல் தண்ணீரில் மேலாக ஒரு நடை நடந்துபோய், முந்தைய துறவியுடன் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார்.

இதைப் பார்த்த அந்த புதிய துறவி, 'அவர்களால் முடியும்போது, நம்மால் முடியாதா என்ன..?" என்று எண்ணியபடி ஏரியில் இறங்கியவர், தொபுக்கடீர் என்று ஏரித் தண்ணீரில் விழுந்து காணாமல் போனார்.

கரையில் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு துறவிகளில், ஒருவர் மற்றொருவரிடம் சொன்னார்.

"அவர்கிட்ட பாறை எங்கெங்கே இருக்குன்னு நாம சொல்லவே இல்லியோ..?".
.
.
.

7 comments:

சென்ஷி said...

:)

Ashwin Ji said...

கலக்கல்ஸ்.
எப்பூடி? இப்புடி !!!!!!

ஸனுசெல்லம் said...

ரொம்ப நல்லாயிருக்கு..............

அன்புடன் நான் said...

செம கலக்கல்.....

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப ரசனை யான பதிவு.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சூப்பர்

Unknown said...

அருமை

Post a Comment