Tuesday, January 11, 2011

சார்ஜென்ட் தில்லுதுர

தில்லுதுர கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது.

கல்லூரியின் என்சிசி, ஒரு மலை வாசஸ்தலத்தில் ஒரு மாதம் கேம்ப் போட்டிருந்தது.

அந்த கேம்ப் வந்திருக்கும் என்சிசியில், தில்லுதுர ஒரு கம்பெனியின் சார்ஜென்ட் பொறுப்பில் இருந்தார்.

கேம்ப்பிற்குச் சென்ற மூன்றாம் நாள்.

அவர் கம்பெனியில் இருந்த ஒரு கேடட்டின் அம்மா இறந்து விட்டதாகச் செய்தி வந்திருந்தது.

மாஸ்டர் கூப்பிட்டு தில்லுதுரயிடம் சொன்னார்.

"சார்ஜென்ட் தில்லுதுர... கேடட் செந்திலின் அம்மா இறந்து விட்டதாக தந்தி வந்திருக்கிறது. அவரை வந்து என்னைப் பார்க்கச் சொல்..!".

தில்லுதுர போனபோது, அதிகாலைப் பேரேடில் நின்றிருந்தது ட்ரூப்.

அவர்களைப் பார்த்து பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க ஆரம்பித்தார் தில்லுதுர.

"கம்பெனி லிஷன்... நான் சொல்பவர்கள் ஒரு வரிசை முன்னால் வந்து நிற்கவும். கேடட் ரமேஷ்... இன்று கிச்சன் உங்கள் பொறுப்பு. கேடட் செந்தில்... நமது தங்குமிடம் சுத்தம் செய்வது உங்கள் பொறுப்பு. அப்புறம், கேடட் செந்தில்... உங்கள் அம்மா இறந்துவிட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. நீங்கள் சென்று, அலுவலகத்தில் நமது கேபடனைச் சந்திக்கவும்..!".

அன்று மாலை, தில்லுதுரயிடம் மாஸ்டர் சொன்னார்.

"சார்ஜென்ட் தில்லுதுர... ஒரு கேடட்டின் அம்மா இறந்ததை நீங்கள் தெரிவித்த விதம் சரியில்லை என்றே நான் நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் பதமாக, புத்திசாலித்தனமாகச் சொல்ல முயற்சி செய்யலாம்...!".

"யெஸ் சார்...!" சொன்ன தில்லுதுர, கேப்டனுக்கு ஒரு சல்யூட் அடித்து விடை பெற்றார்.

மறுபடி, ஒரு பதினைந்து நாள் இருக்கும்... அதேபோல் ஒரு அதிகாலையில் மாஸ்டர் தில்லுதுரயைக் கூப்பிட்டார்.

"சார்ஜென்ட் தில்லுதுர... கேடட் மகேஷின் அம்மா இறந்து விட்டதாக தந்தி வந்திருக்கிறது. அவரை வந்து என்னைப் பார்க்கச் சொல். ஆனால், இந்தமுறை செய்தியைக் கொஞ்சம் பக்குவமாக, புத்திசாலித்தனமாகச் சொல்லவும்...!".

"ஓகே சார்...!" சல்யூட் அடித்துவிட்டு வந்த தில்லுதுர, காலைப் பேரேடில் வரிசையாய் நின்றிருந்த கம்பெனியிடம் சொன்னார்.

கேடட் மகேஷிடம் செய்தியை எப்படிச் சொல்வது என்று யோசித்தபடியே சொன்னார்.

"அட்டென்ஷன் கேடட்ஸ்.. லிசன்...! உங்களில் யார் யாருக்கெல்லாம் அம்மா இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இரண்டு ஸ்டெப் முன்னால் வரவும்." என்றவர் தொடர்ந்து சொன்னார்.

"நோ நோ... கேடட் மகேஷ். நீங்க முன்னால வர வேண்டாம்..!
.
.
.

5 comments:

abbeys said...

நோ நோ... கேடட் மகேஷ். நீங்க முன்னால வர வேண்டாம்..! ADA KODUMAIAE..:)))))))))))) Mr.Bean mathiriae yosipar pola

இளைய கவி said...

hehehehehehhhahahahahaahhahh ROTFL

இளங்கோ said...

:):)

Nanjil Kannan said...

அட பாவிகளா ????????????

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

haahaahaa......

Post a Comment