Wednesday, April 16, 2014

டேனியின் அழுகை

டேனி அன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே சோகமாகவே இருந்தான்.

சாயங்காலம் சாப்பிடுவதற்கான நொறுக்குத் தீனிகளைக் கொடுத்து விட்டு, மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

”ஏன் டேனி... சோகமா இருக்க.?”

கேட்டதும் டேனி கவலையுடன் திரும்பி என்னைப் பார்த்தான்.

“நான் ரொம்பக் கருப்பா இருக்கனாம்மா.?”

நான் அவனைத் தேற்றும் விதமாய்ச் சொன்னேன்.

“இல்லியேடா... நீ நல்ல செகப்பு தான.!”

சொன்னதும் அவன் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“என் கண்ணு ரெண்டும் முட்டை முட்டையா பெருசா இருக்காம்மா.?”

இதென்னடா வம்பாப் போச்சு - என்று எண்ணியவாறே அவனுக்கு ஆறுதலாய் பதில் சொன்னேன்.

“இல்லியேடா... உன் கண்ணு ரெண்டும் ரொம்ப அழகா, பட்டு மாதிரி இருக்க வேண்டிய சைஸ்லதான இருக்கு.!”

டேனி இன்னும் திருப்தியாகாமல் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“நான்... குண்டா தொப்பையா சொட்டைத் தலையோட ஏதாவது இருக்கேன்னாம்மா.?”

என்னடா... புள்ள இன்னிக்கு தன் அழகு மேல இவ்வளவு வருத்தமா இருக்கானே என்று யோசித்த படியே சொன்னேன்.

“சேச்சே... யாருடா சொன்னா அப்படியெல்லாம். நீ சும்மா தங்கமாட்டம் அம்புட்டு அழகா இருக்க. உன்னை யாரு அப்பிடியெல்லாம் சொன்னா.?”

கேட்டதும் டேனி வருத்தத்துடன் சொன்னான்.

“அப்படியெல்லாம் யாரும் சொல்லலம்மா. ஆனா, எதிர் வீட்டு ஆன்ட்டி எப்பப் பாத்தாலும் என்னை ”டேனி... அவன் அப்பா மாதிரியே இருக்கான்”னு சொல்றாங்களே.!”.
.
.
.




12 comments:

duraian said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

maithriim said...

:-)))))))))))))))))))))))))))))))

amas32

Pradeep Saminathan said...

Haha ha Kubeernu sirichutaen ji ;)))))

Unknown said...

30செகன்ட் காமெடினாலும் நெநெசி

x said...

ஹா ஹா.. விவிசி

Karthik Palanisamy said...

:-))))))))

Anonymous said...

⁉⁉⁉

udhay said...

ஹா ஹா.. விவிசி

Unknown said...

ka ga ga po...

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... அருமையான கேள்வி....

Anonymous said...

Gr8

Unknown said...

ha ha

Post a Comment