Monday, March 26, 2012

மாருதிஜென் குரு கொஸாகிபஸபுகல்

100 வருடங்களைத் தாண்டியும் வாழ்ந்தவர் நம்ம மாருதிஜென்குரு கொஸாகிபஸபுகல்.

அவர் தனது இறக்கும் தருவாயில் இருந்தார்.

வாழும் ஒவ்வொரு கணமும், பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இந்த சமூகத்துக்கான செய்தியாய் விளங்கியவர் அவர்.

இறக்கும் தருணத்தில் அவர் சொல்லப்போகும் கடைசிச் செய்திக்காக, அந்த ஊரும் அவரது சிஷ்யர்களும் அவரது மரணப் படுக்கையைச் சுற்றிக் காத்திருந்தார்கள்.

போகும் தருணம் சுகமாய் இருப்பதற்காக, சிஷ்யர்கள் கொடுத்த கடைசி டம்ளர் பாலையும் அருந்த மறுத்துக் கொண்டிருந்தார் குரு கொஸாகி.

பார்த்துக் கொண்டே இருந்த பிரதம சிஷ்யன் தோத்தாங்கோலீஸ்-க்கு அந்த யோசனை வர, டக்கென்று அந்த பால் டம்ளரை எடுத்துக் கொண்டு தனது அந்தரங்க அறைக்கு ஓடினான்.

போன மாதம் தனது நண்பன் கொடுத்த ஃபாரின் விஸ்கியை கப்போர்டிலிருந்து எடுத்து, தேவைக்கு சற்று அதிகமாகவே அந்தப் பாலில் கலந்தான் சிஷ்யன் தோத்தாங்கோலீஸ்.

பிறகு அந்தப் பாலை மரணப் படுக்கையில் இருந்த குரு கொஸாகிபஸபுகலிடம் கொண்டு வந்த சிஷ்யன் தோத்தாங்கோலீஸ், அன்புடன் குருவின் தலையை ஆதுரத்துடன் தடவியவாறு அந்தப் பாலை அருந்தக் கொடுத்தான்.

பிரதம சிஷ்யன் கொடுத்ததால், மறுக்கமுடியாமல் ஒரு மிடறு பாலைக் குடித்த குரு கொஸாகி... அடுத்த மிடறு பாலையும் ஆர்வத்துடன் குடித்தார்.

கொஞ்ச நேரம், கொஞ்சமே கொஞ்ச நேரத்தில் டம்ளரின் கடைசிச் சொட்டுவரை ஆர்வத்துடன் பாலைக் குடித்து முடித்த குருவிடம் சிஷ்யர்கள் கேட்டார்கள்.

"குருவே... இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் இறக்கப் போகிறீர்கள். இந்த தருணத்தில் தாங்கள் எங்களுக்கு சொல்லப் போகும் கடைசிச் செய்தி என்ன.?".

குடித்த பாலின் சுவை தொண்டையில் இருக்க, ஒரு கணம் தான் சாப்பிட்ட பாலை சப்புக் கொட்டியவாறு குரு கொஸாகி தனது கடைசி செய்தியைச் சொன்னார்.

"அந்தப் பசுவை விற்றுவிடாதே.!"
.
.
.

5 comments:

Anonymous said...

ஹா ஹா. ஹா. சூப்பரு..

sutha said...

Ha ha - good one ... Hope other people dont follow this - after reading your story : )) @sweetsudha1

jeganjeeva said...

ஈமுக்கு அடுத்து எலைட்ட வளக்கப் போற அந்தப் பசுக்குதான் பயங்கற கிராக்கி இருக்கும் போல. சூப்பரு!!!

Anonymous said...

Hahaha. Super - @SeSenthilkumar

maithriim said...

இறக்கும் தருவாயிலும் ஆசை ஜென் துறவியையும் விடவில்லை!
amas32

Post a Comment