Tuesday, September 20, 2011

செக்கில் கையெழுத்திடுவது எப்படி.?

தில்லுதுர முதன்முதலாய் தனது செக்கின் மூலமாக பணம் எடுப்பதற்காக பேங்கிற்குள் நுழைந்திருந்தார்.

பணம் எடுப்பதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அடுத்தவரிடம் கேட்க வெட்கப்பட்டு இங்கும் அங்குமாய் கொஞ்ச நேரம் அலைந்தவர், பிறகு கூட்டம் அதிகமில்லாத ஒரு கேஷியரின் டேபிளை நோக்கி நகர்ந்தார்.

அந்த கேஷியர் டேபிளில் கூட்டம்தான் இல்லையே தவிர, அவர் பயங்கர பிஸியாய் வேலை செய்து கொண்டிருந்தார்.

தில்லுதுர மெல்லிய குரலில் அவரிடம் கேட்டார்.

"சார்... இந்த செக்குல பணம் எடுக்க என்ன சார் செய்யணும்.?".

தலையே நிமிராமல் வேலை செய்தபடியே அந்த கேஷியர் சொன்னார்.

"மொதல்ல அந்த செக்குல முன்னாடிப் பக்கம் கேட்டிருக்கற டீடெய்ல்ஸ் எல்லாம் ஃபில்லப் பண்ணுங்க..!".

தில்லுதுர தலையை ஆட்டியபடி சொன்னார்.

"சார்... அதெல்லாம் அல்ரெடி ஃபில்லப் பண்ணிட்டேன் சார்..!".

அந்த கேஷியர் தொடர்ந்து சொன்னார்.

"அப்படியே செக்கோட பின்னாடிப் பக்கம் ஒரு கையெழுத்தை போட்டு இங்கே கொடுங்க..!".

தில்லுதுர கேட்ட உதவி கிடைத்த மகிழ்ச்சியுடன், "தாங்க்ஸ் சார்..!" என்றபடி நகரும்போது, அந்த கேஷியர் சொன்னார்.

"கையெழுத்து இங்க பேங்க்ல நீங்க லெட்டர் கொடுத்தப்ப எந்த மாதிரிப் போட்டீங்களோ... அதே மாதிரிப் போடணும்..!".

தில்லுதுர இன்னும் மகிழ்ச்சியுடன், "ஓகே சார்..!" என்றபடி சந்தோஷமாய் கையெழுத்திட்டு கேஷியரிடம் செக்கை திரும்ப நீட்டினார்.

செக்கை வாங்கி முன்பக்கத்தை சரிபார்த்துவிட்டுத் திரும்பிய கேஷியர் அரண்டுபோய் தில்லுதுரயைப் பார்த்தார்.

அதில்...

"தங்கள் உண்மையுள்ள,
தில்லுதுர"

என்றிருந்தது....
.
.
.

6 comments:

சே.குமார் said...

haa... haa.a...aaaaa....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hahaa

RAVI said...

எப்பீடி உங்களுக்கு மட்டும் இப்பிடி கெடைக்குது...?
ஹா...ஹா...

இளங்கோ said...

:)

அ.முத்து பிரகாஷ் said...

ம்.. நல்லாயிருக்கு..

தில்லுதுரை ஏ தில்லுதுரை :))

சு. திருநாவுக்கரசு said...

உங்கள் எழுத்து பிரவாகம் இனிமை!

Post a Comment