Wednesday, September 14, 2011

என்ன கொடும சரவணா இது..?

தில்லுதுர வாழ்க்கையில் கடினமாகப் போராடிக் கொண்டிருந்த நேரம்.

எங்கு தேடினாலும் வேலை கிடைக்கவில்லை.

வேலை இல்லாததால் வருமானம் இன்றிப்போக, அவருக்கு உறவில் யாரும் பெண் கொடுக்கத் தயாராயில்லை.

திருமண வயது தாண்டிக் கொண்டிருந்தது பற்றிய கவலையில் சுற்றிக் கொண்டிருக்கும்போது தான் தில்லுதுர ஒரு தினசரியில் அந்த விளம்பரத்தைப் பார்த்தார்.

ஒரு பயங்கரப் பணக்காரப் பெண்ணுக்கு ஏற்ற வரன் கேட்டு வந்திருந்தது அந்த விளம்பரம்.
போய்ப் பார்த்தால், அந்தப் பெண்ணோ சகிக்க முடியவில்லை.

'எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேண்டாம்..' என்று வந்தவன் எல்லாம் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே...
'ஒகே..' சொன்னது தில்லுதுர மட்டும்தான்.

ராஜா போல இருக்கும் தில்லுதுரயை யாரும் வேண்டாம் என்பார்களா..?

அந்தக் கோடீஸ்வரி தில்லுதுரயை செலெக்ட் செய்து விட்டாள்.

திருமணம் எல்லோரும் ஆச்சர்யப் படும்படி இனிதே முடிந்தது.

நண்பர்களின் கேலிப் பார்வைகளை தில்லுதுர கண்டுகொள்ளவேயில்லை.

அதுதான் அப்படியென்றால், திருமணம் முடிந்து எங்கே சென்றாலும் அந்த அவலட்சண மனைவியையும் உடன் அழைத்தபடியே சுற்றினான்.

சினிமாவுக்குப் போனால், பார்க்குக்குப் போனால், பீச்சுக்குப் போனால், ஆஃபீஸுக்குப் போனால் என எங்கேயும் வித்தியாசம் இல்லாமல் மனைவியை உடன் அழைத்துக் கொண்டே சுற்றினான் தில்லுதுர.

நண்பர்களுக்கோ இதுதான் ஆச்சர்யமான ஆச்சர்யம்...'இதென்னடா இது... இப்படி ஒரு லவ்வு' என்று.

ஒருநாள் ஒருவன் அதை தில்லுதுரயிடம் கேட்டும் விட்டான்.

"நண்பா... நீ பணத்திற்காகத்தான் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டாயென்பது தெரியும். ஆனால், இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ஜாலியாய் இருப்பதை விட்டுவிட்டு, இந்த அளவுக்கு எங்கே போனாலும் அவளையும் கூடவே கூட்டில் கொண்டு சுற்றுவதுதான் ஏன் என்று புரியவில்லை..!".

அவன் கேட்டு முடித்ததும் தில்லுதுர சோகமாய்ச் சொன்னான்.

"என் மனைவி கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. நான் அவளை விட்டு எப்பப் பிரிஞ்சு போனாலும் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுத்தான் போகணும். அதெப்படி முடியும் சொல்லு... அதனால அதிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி அவளைக் கூடக் கூப்பிட்டுக்கிட்டே சுத்தறேன்..!".

12 comments:

anandrajah said...

முத்தம் கொடுக்க கூட முடியாத அவலட்சண மூஞ்சி சந்தோசபடுற மாதிரி கூடவே கூட்டிகிட்டு .... இதான் தல "அந்த மூஞ்சி" ஆசை படுறது..!! No kiss No Sex.. But recognition..!

anandrajah said...

அவலட்சண மூஞ்சி சந்தோசபடுற மாதிரி கூடவே கூட்டிகிட்டு..இதான் தல "அந்த மூஞ்சி" ஆசை படுறது! No kiss No Sex.. But recognition..!

Anonymous said...

Good attempt :)) Quite funny!
amas32

Macchu said...

சூப்பர்ர்ர்..தில்லு....

சுந்தர் ருவாண்டா said...

சாரிண்ணே, எனக்கு புடிக்கல... :(((

ஏன்னு சொல்லத்தெரியல....!!!

Mohamed Faaique said...

மீள் பதிவு`னு நினைக்கிறேன்...
அருமையான பதிவு...

சி.பி.செந்தில்குமார் said...

>>
"என் மனைவி கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. நான் அவளை விட்டு எப்பப் பிரிஞ்சு போனாலும் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுத்தான் போகணும். அதெப்படி முடியும் சொல்லு... அதனால அதிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி அவளைக் கூடக் கூப்பிட்டுக்கிட்டே சுத்தறேன்..!".

கிஸ்ஸீங்க் டச் & ஃபினிஷிங்க் டச்

chinnapiyan said...

நகைச்சுவை இருக்கு. கூடவே, அவளும் ஒரு பெண்தானே. அவளுக்கும் ஒரு உணர்வு வுண்டல்லவா.நாம் எல்லோரும் இறைவனின் படைப்புதானே

rajamelaiyur said...

//
"என் மனைவி கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. நான் அவளை விட்டு எப்பப் பிரிஞ்சு போனாலும் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுத்தான் போகணும். அதெப்படி முடியும் சொல்லு... அதனால அதிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி அவளைக் கூடக் கூப்பிட்டுக்கிட்டே சுத்தறேன்..!".
//

haaa. haa....

அ.முத்து பிரகாஷ் said...

இதை எதிர்பார்க்கவே இல்லை :))

sar(o)m said...

i go with chinnapiyan cmt..and he is geniue......

Anonymous said...

avalum oru pen thane en ippadi?

Post a Comment