Tuesday, March 22, 2011

தில்லுதுரயும் ஆதிவாசியும்


தில்லுதுர இளைஞராய் இருந்தபோது நடந்தது இது.

தில்லுதுரயின் அலுவலகம் வனவிலங்கு வாரம் முடித்த பிறகு, அதன் தொடர்ச்சியாக காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு நாகரிகம் கற்றுக் கொடுக்க முடிவு செய்தது.

மலையின் மீது வசிக்கும் அந்த மக்கள் முழுவதும் சுகாதாரம் இல்லாது வசிப்பது கண்டு மனம் நொந்து போனார் தில்லுதுர.

நல்ல சுகாதாரமான உணவு இல்லை. உடைகள் இல்லை. வசிப்பிடம் இல்லை.

வாழும் முறையில் ஒரு ஒழுங்கு இல்லை.

தில்லுதுர தனது நான்கைந்து நண்பர்களோடு சேர்ந்து அவர்களை சுகாதாரமாய் வாழக் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார்.

அதற்காக அலுவலகத்தில் பேசி அனுமதியும் வாங்கிவிட்டார்.

ஒரு வருடம், வார இறுதியில் அந்த மலைவாழ் ஆதிவாசிகளோடே வாழ்ந்தார் தில்லுதுர.

அவர்களுக்கு நல்ல சுத்தமாக உடை உடுத்தக் கற்றுக் கொடுத்தார்.

உணவை நன்றாக சமைத்துச் சாப்பிடக் கற்றுக் கொடுத்தார்.

குடிசை கட்ட கற்றுக் கொடுத்தார்.

அவர்கள் கும்பிடும் காட்டுக் கருப்பன் தெய்வத்துக்கு கோயில் கட்டிக் கொடுத்தார்.

கும்பிடக் கற்றுக் கொடுத்தார்.

வரைமுறையாய் வாழ்வதற்கு திருமணம் என்பதைக் கற்றுக் கொடுத்து, குடும்ப வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுத்தார்.

ஒரு முழு வருடம்.

அந்த ஆதிவாசிகள் முற்றிலும் மாறிப் போனார்கள்.

கிட்டத்தட்ட, ஒரு வருடத்தில் நகரத்தில் வாழ்பவர்களைப் போல அவர்களை மாற்றிய சந்தோஷத்தில் அவர்களைப் பிரியும் தினத்தில், அந்த ஆதிவாசி மக்கள் எல்லாம் குழுமியிருக்கும் கூட்டத்தில் தில்லுதுர அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

"இந்த ஒரு வருஷத்துல நீங்க கத்துகிட்டதுலயே, நீங்க அதிகம் சந்தோசப்பட்டது எந்த விஷயத்துக்காகன்னு சொல்ல முடியுமா..?".

தில்லுதுர கேட்டதும் அந்த ஆதிவாசி ஆண்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் சந்தோஷமாய் சொன்னார்கள்.

"நாங்கள் உங்களிடம் கற்றுக் கொண்டதிலேயே மிக மகிழ்ச்சியான விஷயம் எதுன்னா, இந்த திருமண வாழ்க்கைதான்...!".

குடும்ப ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்த சந்தோஷத்தில் தில்லுதுர முகம் மலர்ந்து அவர்களிடம் கேட்டார்.

"அது ஏன்னு சொல்ல முடியுமா..?".

தில்லுதுர கேட்டதும் அந்தக் கூட்டத்தில் தலைவன் மாதிரி இருந்தவன் சிரித்தபடியே மிக சந்தோஷமாய்ச் சொன்னான்.

"அதுக்கப்புறம்தான் எங்களோட பழைய மனைவிகளுக்கு பதிலா, புதுசு புதுசா மனைவிகள் கிடைச்சாங்க..!".
.
.
.

4 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice.,

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

thillu ul manusu pesutho?

செல்வா said...

அட பாவமே . தில்லுதுரை இப்படி பண்ணிட்டரே .. ஹி ஹி

இராம்குமார் said...

என்ன கொடுமை மீனாட்சி சார் இது .................

Post a Comment