Tuesday, November 23, 2010

மாணவன் குறும்பு

அப்போது நான் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம்.

நான் பள்ளியின் பத்தாம் வகுப்பு டீச்சர் என்பதோடு தமிழ்ப்பாடமும் எடுத்து கொண்டிருந்தேன்.

பள்ளிக்கூடத்தில் மாணவர்களை எல்லாம் ஒன்றாய் உட்கார வைத்து, அந்த வருட க்ரூப் ஃபோட்டோ எல்லா வகுப்புக்கும் எடுத்தாகிவிட்டது.

ப்ரிண்ட் வந்ததும் ஒவ்வொரு வகுப்பிலும் எல்லா மாணவர்களிடமும் ஆளுக்கொரு ப்ரிண்ட்டாவது விற்றுவிட வேண்டும் என்று நிர்வாகம் வகுப்பு ஆசிரியர்களிடம் சொல்லியிருந்தது.

ஆனால், நான் வகுப்புக்கு போனதும்தான் தெரிந்தது... நிறைய மாணவர்களுக்கு ஃபோட்டோவை வாங்கும் எண்ணமே இல்லை என்பது.

எனவே, அவர்களை வாங்கத் தூண்டும் விதமாய்ப் பேசத் துவங்கினேன்.

"ஸ்டூடன்ட்ஸ்... ஒரு செகன்ட் யோசிச்சுப் பாருங்க. நாமெல்லாம் பெரியவங்கானதுக்கு அப்புறம், பெரிய பெரிய பதவிக்கெல்லாம் போய், ஒருநாள் இந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது ஒரு சந்தோசம் வருமே..! யார்கிட்டயாவது இதைக் காட்டும்போது நாம சொல்லுவோமே, "இதோ இவன் ரமேஷ்... இப்ப இவன் பெரிய வக்கீல், இதோ இவன் ஜெய்... இப்ப இவன் பெரிய டாக்டர்.. இதோ இவங்க என் க்ளாஸ் டீச்சர், இவங்க.."

நான் சொல்லச் சொல்ல இடைமறித்து. ஏதோ ஒரு குறும்புக்கார ஸ்டூடண்டின் அந்தக் குரல் கேட்டது.

"இப்ப இறந்துட்டாங்க..!".
.
.
.

5 comments:

சென்ஷி said...

ஹாஹாஹா :)))

செம்ம கலக்கல்!

ஆயில்யன் said...

:)))))))))))))))

தமிழ்த்தோட்டம் said...

ம் அருமை

Unknown said...

கரக்ட்டாதான் சொல்லீர்க்காயிங்க (சும்மா ஜோக்குக்கு )

Ravi Parthasarathy said...

Its very fun.I like this one.

Post a Comment