Tuesday, November 16, 2010

மகளிர் மட்டும்

ராஃபியா பஸிரி ஒரு பெண் ஸூஃபி.

ஒரு முறை அவரைச் சந்தித்த சிலர்,சில வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு, அவரை அவமானப்படுத்தும் நோக்குடன் அவரிடம் கேட்டார்கள்.

"என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு பெண்தானே..! இறைவன் தனது தூதர்களாக ஆண்களை மட்டும்தானே அனுப்பி வைத்திருக்கிறான்.. அது ஏன்? பெண்களின் பலவீனங்களைத் தெரிந்ததால்தானே, அவன் பெண்களைத் தன் தூதர்களாய் அனுப்பவில்லை..?".

உடனே, ராஃபியா பஸிரி அவர்கள் அறியாமையைப் பார்த்துப் புன்னகைத்தபடி கூறினார்.

"நீங்கள் சொல்வது மிகச் சரிதான் நண்பர்களே..! ஆனால், நீங்கள் சொல்லும் அந்தத் தூதர்களை பெற்றெடுக்க இறைவன் பெண்களைத்தானே தேர்ந்தெடுத்திருக்கிறார். நீங்கள் சொல்லும் எந்த ஆணையும் அவர் அதற்குத் தேர்ந்தெடுக்கவில்லையே..!".

கேட்டுவிட்டு அவர் புன்னகைக்க... நண்பர்களோ சொல்ல பதிலின்றி வாயடைத்து நின்றனர்.
.
.
.

2 comments:

ராஜவம்சம் said...

வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்
இதுக்கு பெயர் தான் பேச்சித்திரமை என்பது.

Unknown said...

அதுதானே..?

Post a Comment