Wednesday, September 7, 2011

மனைவியின் திருட்டு



என் கணவர் அலுவலகத்துக்கு கிளம்பும்காலையில் கோபமாய் டேனியைப் பற்றிக் கத்திக் கொண்டு இருந்தார்.

"உன் பையன் என் சர்ட் பாக்கெட்ல இருந்து பணம் எடுத்திருக்கான். அவனை இனிமே என்னைக் கேக்காம என் பாக்கெட்ல கை வைக்கக் கூடாதுன்னு சொல்லி வை...!".

என் மகனைப் பற்றி யாராவது குறை சொன்னாலே எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். இதில் என் கணவரே குறை சொன்னால். அதிலும், விட்டால் திருட்டுப் பட்டமே கட்டிவிடுவார் போலத் தோன்றவே கோபமாய் அவரைக் கேட்டேன்.

"பணத்தை நீங்களே எங்கயாவது செலவு செஞ்சுட்டு மறந்துட வேண்டியது. இங்க வந்து அவன்மேல பழி போட வேண்டியது. இதோட நாலஞ்சு தடவை ஆச்சு..!".

நான் சொன்னதும் கோபமாய் திரும்பிய அவர், கடுகடுப்பு மாறாமல் சொன்னார்.

"ஏன்... என்னைப் பார்த்தா தண்ணியடிச்சுட்டு ஒளறுற மாதிரித் தெரியுதாக்கும்..? நான் செலவு செஞ்சிருந்தா எனக்குத் தெரியாதா..?".

அவர் அப்படிக் கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாமல், சமாளிக்கும் விதமாய் அடுத்துச் சொன்னேன்.

 "ஏன் டேனியவே சொல்லறீங்க... பணத்தை நான்கூட எடுத்திருக்கலாமே..?".

நான் கேட்டதும் கொஞ்சமும் யோசிக்காமல் என்னைப் பார்த்து திரும்பியவர், என்னைக் கடுப்பேற்றும் விதமாய் சிரித்தபடியே பதில் சொன்னார்.

"கண்டிப்பா அவன் தாண்டி எடுத்திருக்கான். நீ எடுத்திருந்தாத்தான் என் பாக்கெட்ல ஒண்ணுமே மிச்சம் இருக்காதே...!".
.
.
.

13 comments:

Mohamed Faaique said...

சரியாத்தானே சொல்லி இருக்காரு..

anandrajah said...

எதுக்கு இப்படி பண்ணனும்.. என்னை மாதிரி ATM கார்ட கொடுதிரவேண்டியது தானே. நமக்கு பையிலே பைசா லேது.பையனுக்கும் பிரச்சினை லேது.

anandrajah said...

நமக்கு பிரச்சினையே இல்ல. எதுக்கு இப்படி பண்ணனும்.. என்னை மாதிரி கார்டகொடுதிரவேண்டியது தானே

Giri Ramasubramanian said...

என்னே ஒரு புரிதல் நிலை!

வரதராஜலு .பூ said...

:)

செல்வா said...

//"கண்டிப்பா அவன் தாண்டி எடுத்திருக்கான். நீ எடுத்திருந்தாத்தான் என் பாக்கெட்ல ஒண்ணுமே மிச்சம் இருக்காதே...!//

ஹா ஹா.. சூப்பர்னா :))

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பழைய ஜோக்தான்.சொன்னவிதம் அருமை மீன்ஸ்....

chinnapiyan said...

அன்றாட நிகழ்வுகளை நகைச்சுவையாக எடுத்து தொடுத்து கொடுத்தமைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு துக்ளியூண்டு ஜோக்கை ஒரு பதிவாவே போட்டுட்டீங்களே? சபாஷ்!!!!!!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

>>> Your comment will be visible after approval.

பிரபல பதிவர்னா இந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். ஹி ஹி

வெங்கட்ராமன் said...

எல்லா மனைவிகளும் அப்படித்தானா?!?!

Mariappan said...

உண்மை ::::::"கண்டிப்பா அவன் தாண்டி எடுத்திருக்கான். நீ எடுத்திருந்தாத்தான் என் பாக்கெட்ல ஒண்ணுமே மிச்சம் இருக்காதே...!"

Anonymous said...

ஹா ஹா ஹா ! அழகு! திரும்பி எதும் ரொமான்ட்க்கா சொல்ல போறார்னு பாத்தா செம்ம பல்ப்! :)

Post a Comment