டேனி படிக்கும் வகுப்பில் உயிரியலில் ரத்த ஓட்டத்தைப் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் அறிவியல் ஆசிரியர்.
மிகத் தெளிவாக பாடம் நடத்தும் ஆசிரியர் என்பதால், எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான உதாரணத்தைக் கையில் எடுத்தார் அவர்.
"மாணவர்களே... நம் எல்லோருக்கும் நடக்கும் ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். இப்போது நான் தலைகீழாய் நிற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது, ரத்தமானது என் தலையை நோக்கி அதிவேகமாய்ப் பாய்கிறது. அதனால், எனது முகம் இன்னும் அதிகமாய் சிவக்கிறது... இல்லையா..?".
மாணவர்கள் எல்லோரும் கோரசாய், "ஆமாம் சார்..!" என்றார்கள்.
ஆசிரியர் அடுத்துக் கேட்டார்.
"அப்படியானால்... நான் நேராய் நிற்கும்போது, அதே ரத்தமானது, ஏன் என் கால்களில் அவ்வாறு பாய்வதில்லை..? ஏன், என் கால்கள் சிவப்பதில்லை..?".
எல்லா மாணவர்களும் சற்றே யோசனையில் அமைதியாய் இருக்கும்போது, டேனியின் பளிச்சென்று கேட்டது.
"ஏனென்றால், உங்களுடைய கால் காலியாய் இல்லை..!".
.
.
.
Wednesday, December 8, 2010
Tuesday, December 7, 2010
நம்ம சிங்
ரயில்வே ஸ்டேஷனில் யாருக்காகவோ காத்திருந்தார் கிட்டத்தட்ட எழுபது வயதுக்கும் மேலான, மிகவும் கிராமத்து விவசாயியான நம்ம சிங்.
பக்கத்தில் இருந்தவர் நம்ம சிங்கின் முகத்தில் தெரிந்த பரபரப்பைப் பார்த்து ஆர்வத்துடன் கேட்டார்.
"யாருக்காகவோ வெயிட் பண்ணறீங்க போலிருக்கே..?"
நம்ம சிங் முகத்தில் ஆர்வம் சற்றும் குறையாமல் சொன்னார்.
"ஆமா சார்.. சரியா சொன்னீங்க. இந்தியா சுதந்திரத்தப்ப ரெண்டாப் பிரிஞ்சு பாகிஸ்தான் ஆனது. அப்ப, அந்த நாட்டோட தங்கிட்ட என் பெரியப்பா பையன் இன்னிக்கு இந்தியாவுக்கு ட்ரெயின்ல வர்றான். அவனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்...!".
பக்கத்தில் இருந்தவர் இப்போது கேட்டார்.
"இங்கிருந்து போனப்ப அவருக்கு என்ன வயசு இருக்கும்..?".
நம்ம சிங் சொன்னார்.
"ஒரு நாலு இல்லாட்டி அஞ்சு வயசு இருக்கும் சார்..!".
"அதுக்கப்புறம் எப்போதாவது அவரப் பாத்து இருக்கீங்களா..?".
நம்ம சிங் சோகமாய்ச் சொன்னார்.
"எங்கே.. யாரு விட்டா.? எழுதப்படிக்கத் தெரியதனால இதுவரைக்கும் ஒரு லெட்டர் போக்குவரத்துகூடக் கிடையாது. ஒரு ஃபோட்டோ கீட்டோ பார்த்தது கிடையாது. ஏதோ இப்ப ரெண்டு நாட்டுக்கு இடையில ரயில் ஓடறதால இப்பவாவது பாக்க முடிஞ்சது..."
கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கப்போகும் சகோதரர்கள்... நெகிழ்ச்சியுடன் பக்கத்தில் இருந்தவர் கேட்டார்.
"உங்களால இப்ப அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா..?".
நம்ம சிங் பரிதாபமாய்ச் சொன்னார்.
"அதெப்படிங்க முடியும்.? அவனை நான் கடைசியா அறுபது எழுவது வருஷத்துக்கு முன்னால சின்னப்பையனா இருந்தப்ப பார்த்தது..! இப்ப என்ன வயசாச்சோ.. எவ்வளோ பெருசா இருக்கானோ..!".
அதே சோகத்துடன் பக்கத்திலிருந்தவர் கேட்டார்.
"அப்ப.. அவராவது உங்களை கண்டுபுடிச்சுடுவாரா..?".
பக்கத்தில் இருந்தவர் கேட்டதும் நம்ம சிங் உற்சாகமாய் பதில் சொன்னார்.
"கண்டிப்பா அவன் என்னைக் கண்டுபுடிச்சுடுவான் சார். ஏன்னா, நான் எங்கேயும் போகலியே... இங்கேயேதான இருக்கேன்..!".
.
.
.
பக்கத்தில் இருந்தவர் நம்ம சிங்கின் முகத்தில் தெரிந்த பரபரப்பைப் பார்த்து ஆர்வத்துடன் கேட்டார்.
"யாருக்காகவோ வெயிட் பண்ணறீங்க போலிருக்கே..?"
நம்ம சிங் முகத்தில் ஆர்வம் சற்றும் குறையாமல் சொன்னார்.
"ஆமா சார்.. சரியா சொன்னீங்க. இந்தியா சுதந்திரத்தப்ப ரெண்டாப் பிரிஞ்சு பாகிஸ்தான் ஆனது. அப்ப, அந்த நாட்டோட தங்கிட்ட என் பெரியப்பா பையன் இன்னிக்கு இந்தியாவுக்கு ட்ரெயின்ல வர்றான். அவனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்...!".
பக்கத்தில் இருந்தவர் இப்போது கேட்டார்.
"இங்கிருந்து போனப்ப அவருக்கு என்ன வயசு இருக்கும்..?".
நம்ம சிங் சொன்னார்.
"ஒரு நாலு இல்லாட்டி அஞ்சு வயசு இருக்கும் சார்..!".
"அதுக்கப்புறம் எப்போதாவது அவரப் பாத்து இருக்கீங்களா..?".
நம்ம சிங் சோகமாய்ச் சொன்னார்.
"எங்கே.. யாரு விட்டா.? எழுதப்படிக்கத் தெரியதனால இதுவரைக்கும் ஒரு லெட்டர் போக்குவரத்துகூடக் கிடையாது. ஒரு ஃபோட்டோ கீட்டோ பார்த்தது கிடையாது. ஏதோ இப்ப ரெண்டு நாட்டுக்கு இடையில ரயில் ஓடறதால இப்பவாவது பாக்க முடிஞ்சது..."
கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கப்போகும் சகோதரர்கள்... நெகிழ்ச்சியுடன் பக்கத்தில் இருந்தவர் கேட்டார்.
"உங்களால இப்ப அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா..?".
நம்ம சிங் பரிதாபமாய்ச் சொன்னார்.
"அதெப்படிங்க முடியும்.? அவனை நான் கடைசியா அறுபது எழுவது வருஷத்துக்கு முன்னால சின்னப்பையனா இருந்தப்ப பார்த்தது..! இப்ப என்ன வயசாச்சோ.. எவ்வளோ பெருசா இருக்கானோ..!".
அதே சோகத்துடன் பக்கத்திலிருந்தவர் கேட்டார்.
"அப்ப.. அவராவது உங்களை கண்டுபுடிச்சுடுவாரா..?".
பக்கத்தில் இருந்தவர் கேட்டதும் நம்ம சிங் உற்சாகமாய் பதில் சொன்னார்.
"கண்டிப்பா அவன் என்னைக் கண்டுபுடிச்சுடுவான் சார். ஏன்னா, நான் எங்கேயும் போகலியே... இங்கேயேதான இருக்கேன்..!".
.
.
.
Labels:
அடையாளம்,
இந்தியா,
எழுதப்படிக்க,
சுதந்திரம்,
நெகிழ்ச்சி,
பாகிஸ்தான்,
ரயில்
0
comments
Saturday, December 4, 2010
மிட்டாய்க் கடவுள்
கோவில் ஒன்றில் சிறுவர்களுக்காக ஏற்பாடாகியிருந்த, அந்த ஒருநாள் நிகழ்ச்சியின் மதிய உணவு நேரம்.
தனக்குத் தானே பறிமாறிக் கொள்ளும் முறையில் அமைந்திருந்தது அந்த உணவு வேளை.
குழந்தைகளுக்கு சாப்பாடு முடிந்து வரிசையாய் வெளியேறும் இடத்தில், இரண்டு பெரிய தட்டுகளில் முதல் தட்டில் நிறைய பிஸ்கெட்டுகள் இருந்தன.
குழந்தைகள் அதை நெருங்கும்போது, ஒரு பகதர் தட்டின் அருகே இவ்வாறு எழுதி வைத்திருப்பதைக் கவனித்தார்கள்.
"கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆளுக்கு ஒன்று மட்டும் எடுக்கவும்..!".
அந்த வரிசை இன்னும் கொஞ்சம் நகர்ந்ததும் அடுத்த தட்டில் நிறைய சாக்லேட்டுகள் இருப்பது தெரிந்தது.
முன்னால் இருந்த ஒரு சிறுவன், 'சாக்லெட்டில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாமா... இல்லை இரண்டை எடுக்கலாமா...?' என்று குழப்பத்துடன் கையை நீட்டியபோது, அவனுக்குப் பின்னால் நின்றிருந்த டேனி சொன்னான்.
"டேய் ரமேஷ்... எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க. கடவுள் பிஸ்கெட்டைத்தான் கவனிச்சுக்கிட்டு இருக்காரு..!".
.
.
.
தனக்குத் தானே பறிமாறிக் கொள்ளும் முறையில் அமைந்திருந்தது அந்த உணவு வேளை.
குழந்தைகளுக்கு சாப்பாடு முடிந்து வரிசையாய் வெளியேறும் இடத்தில், இரண்டு பெரிய தட்டுகளில் முதல் தட்டில் நிறைய பிஸ்கெட்டுகள் இருந்தன.
குழந்தைகள் அதை நெருங்கும்போது, ஒரு பகதர் தட்டின் அருகே இவ்வாறு எழுதி வைத்திருப்பதைக் கவனித்தார்கள்.
"கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆளுக்கு ஒன்று மட்டும் எடுக்கவும்..!".
அந்த வரிசை இன்னும் கொஞ்சம் நகர்ந்ததும் அடுத்த தட்டில் நிறைய சாக்லேட்டுகள் இருப்பது தெரிந்தது.
முன்னால் இருந்த ஒரு சிறுவன், 'சாக்லெட்டில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாமா... இல்லை இரண்டை எடுக்கலாமா...?' என்று குழப்பத்துடன் கையை நீட்டியபோது, அவனுக்குப் பின்னால் நின்றிருந்த டேனி சொன்னான்.
"டேய் ரமேஷ்... எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க. கடவுள் பிஸ்கெட்டைத்தான் கவனிச்சுக்கிட்டு இருக்காரு..!".
.
.
.
Friday, December 3, 2010
தண்டச்சோறு தில்லுதுர
பொருளாதார வீழ்ச்சி தில்லுதுரயையும் பாதித்திருந்த காலம் அது.
தில்லுதுர தன் பிசினஸையும் கவனிக்காமல், வேலைக்கும் போகாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்.
மனைவியின் குடும்பம் மொத்தமுமே, தில்லுதுரயின் குடும்பத்தை சப்போர்ட் செய்து கொண்டிருந்தது.
யார் யாரோ எவ்வளவோ சொல்லியும், தில்லுதுர அசைவதாய் இல்லை.
வீட்டுச் செலவைச் சமாளிக்க, பொருளாதாரத் தேவைகளைச் சாமாளிக்க பணமும் இன்னபிறவும் தில்லுதுரயின் மாமியார் வீட்டிலிருந்தே வந்து கொண்டிருந்தது.
அன்றும் அப்படித்தான், அந்த மாதச் செலவுக்காக அப்பா அனுப்பிய பணத்தைப் பெற்றுக் கொண்ட மனைவி, தில்லுதுரயிடம் வருத்தத்துடன் சொன்னாள்.
"எனக்கே கேவலமாய் இருக்கு. என் அப்பா சாப்பாட்டுக்குப் பணம் அனுப்பறாரு. அண்ணன் துணிமணிகள் எடுத்துக் கொடுத்துடறான். தம்பி காய்கறி பூராவும் அனுப்பிடறான். இதெல்லாம் போக, என்னோட ஒரு மாமாவும் மளிகைச் சாமானுக்காக பணம் அனுப்பறாரு. இதெல்லாம் வெளியே சொல்லக் கூட எனக்கு வெட்கமாய் இருக்கு...!"
கேட்டுக் கொண்டிருந்த தில்லுதுர அதைவிட வருத்தத்துடன் சொன்னார்.
"ஆமாம், எனக்கும் வெட்கமாத்தான் இருக்கு. உன்னுடைய ஒரு மாமாதான் பணம் அனுப்ப்றாரு... இன்னொரு மாமா எதுவுமே செய்யறதில்லியே...!".
.
.
.
தில்லுதுர தன் பிசினஸையும் கவனிக்காமல், வேலைக்கும் போகாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்.
மனைவியின் குடும்பம் மொத்தமுமே, தில்லுதுரயின் குடும்பத்தை சப்போர்ட் செய்து கொண்டிருந்தது.
யார் யாரோ எவ்வளவோ சொல்லியும், தில்லுதுர அசைவதாய் இல்லை.
வீட்டுச் செலவைச் சமாளிக்க, பொருளாதாரத் தேவைகளைச் சாமாளிக்க பணமும் இன்னபிறவும் தில்லுதுரயின் மாமியார் வீட்டிலிருந்தே வந்து கொண்டிருந்தது.
அன்றும் அப்படித்தான், அந்த மாதச் செலவுக்காக அப்பா அனுப்பிய பணத்தைப் பெற்றுக் கொண்ட மனைவி, தில்லுதுரயிடம் வருத்தத்துடன் சொன்னாள்.
"எனக்கே கேவலமாய் இருக்கு. என் அப்பா சாப்பாட்டுக்குப் பணம் அனுப்பறாரு. அண்ணன் துணிமணிகள் எடுத்துக் கொடுத்துடறான். தம்பி காய்கறி பூராவும் அனுப்பிடறான். இதெல்லாம் போக, என்னோட ஒரு மாமாவும் மளிகைச் சாமானுக்காக பணம் அனுப்பறாரு. இதெல்லாம் வெளியே சொல்லக் கூட எனக்கு வெட்கமாய் இருக்கு...!"
கேட்டுக் கொண்டிருந்த தில்லுதுர அதைவிட வருத்தத்துடன் சொன்னார்.
"ஆமாம், எனக்கும் வெட்கமாத்தான் இருக்கு. உன்னுடைய ஒரு மாமாதான் பணம் அனுப்ப்றாரு... இன்னொரு மாமா எதுவுமே செய்யறதில்லியே...!".
.
.
.
Labels:
அண்ணன்,
அப்பா,
சப்போர்ட்,
தம்பி,
பொருளாதார வீழ்ச்சி,
மாதச் செலவு,
மாமா,
வெட்கம்
1 comments
Wednesday, December 1, 2010
அவ்வளவுக்கவ்வளவு
துறவியிடம் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
"ஸ்வாமி... நானும் கடவுளும் ஒன்றிணைவது என்பது எப்போது நடக்கும்..? எனக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் தூரம் எவ்வளவு..? "
துறவி சொன்னார்.
"நீ கடவுளுடன் இணைவதை எவ்வளவுக்கெவ்வளவு கடினம் என்று நினைக்கிறாயோ... அவ்வளவுக்கவ்வளவு உனக்கும் கடவுளுக்கும் தூரம் அதிகமாகும்..?".
அவன் தொடர்ந்து கேட்டான்.
"ஸ்வாமி... நான் அந்த தூரத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்..?"
"நீ அந்த இடைப்பட்ட தூரத்தை இல்லை என்று கருதுவாயானால், அது இல்லாமல் போய்விடும்...".
அவன் குழப்பத்துடன் மீண்டும் கேட்டான்.
"அவ்வாறு கருதினால், நானும் கடவுளும் ஒன்று என்றாகிவிட முடியுமா..?".
துறவி சிரித்தபடி சொன்னார்.
"அப்போதும்கூட நீயும் கடவுளும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
அவன் மேலும் குழம்பியவனாய்க் கேட்டான்.
"அதெப்படி ஸ்வாமி முடியும்...?".
துறவி தனது புன்னகை மாறாமல் பதில் சொன்னார்.
"அது அப்படித்தான். எப்படியென்றால், இதோ நீ பார்க்கும் கடலும் அதன் அலையும், சூரியனும் அதன் கதிரும், ஒரு பாடகனும் அவனது பாடலும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
.
.
.
"ஸ்வாமி... நானும் கடவுளும் ஒன்றிணைவது என்பது எப்போது நடக்கும்..? எனக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் தூரம் எவ்வளவு..? "
துறவி சொன்னார்.
"நீ கடவுளுடன் இணைவதை எவ்வளவுக்கெவ்வளவு கடினம் என்று நினைக்கிறாயோ... அவ்வளவுக்கவ்வளவு உனக்கும் கடவுளுக்கும் தூரம் அதிகமாகும்..?".
அவன் தொடர்ந்து கேட்டான்.
"ஸ்வாமி... நான் அந்த தூரத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்..?"
"நீ அந்த இடைப்பட்ட தூரத்தை இல்லை என்று கருதுவாயானால், அது இல்லாமல் போய்விடும்...".
அவன் குழப்பத்துடன் மீண்டும் கேட்டான்.
"அவ்வாறு கருதினால், நானும் கடவுளும் ஒன்று என்றாகிவிட முடியுமா..?".
துறவி சிரித்தபடி சொன்னார்.
"அப்போதும்கூட நீயும் கடவுளும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
அவன் மேலும் குழம்பியவனாய்க் கேட்டான்.
"அதெப்படி ஸ்வாமி முடியும்...?".
துறவி தனது புன்னகை மாறாமல் பதில் சொன்னார்.
"அது அப்படித்தான். எப்படியென்றால், இதோ நீ பார்க்கும் கடலும் அதன் அலையும், சூரியனும் அதன் கதிரும், ஒரு பாடகனும் அவனது பாடலும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
.
.
.
Subscribe to:
Posts (Atom)