Monday, August 10, 2015

அம்மான்னா சும்மாவா…

சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்க்க வந்தவன்.

வந்தவன் அந்தக் கலாச்சாரத்தோடே ஒன்றிப் போனதால், நாகரீகம் ரொம்ப முற்றி ‘ஓகே கண்மணி’ போல தன்னுடன் வேலை செய்யும் பெண்ணுடன் லிவிங் டுகெதராய் ஒரே வீட்டில் வசித்து வந்தான்.

ஒருநாள் அவன் அம்மா திடீரென்று கிராமத்தில் இருந்து அவன் தங்கும் ஃப்ளாட்டிற்கு வந்து விட்டாள்.

வந்தவன் சேகரும் ஓர் அழகான இளம்பெண்ணும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அம்மா கேட்டாள், “இது யாரு.?”

சேகர் சொன்னான், “இது என் ரூம் மேட்மா.!”.

அம்மா, “அப்படீன்னா.?”

“ரூம் மேட்னா இதே வீட்ல என் கூட தங்கியிருக்கற பொண்ணு. நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒண்ணும் இல்லம்மா. வீட்டை மட்டுந்தான் ஷேர் பண்ணிக்கறோம். மத்தபடி அவ தனி பெட்ரூம்.. நான் தனி பெட்ரூம்.!”

அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்குப் போய் விட்டாள்.

இரண்டு நாட்கள் கழித்து சேகருடைய ரூம்மேட் சொன்னாள்.

“உங்கம்மா வந்து போனதில் இருந்து சமையல் ரூமில் இருந்த தோசைக் கரண்டியைக் காணலை. ஒருவேளை, உங்கம்மா எடுத்துட்டுப் போயிருப்பாங்களோ.?”
சேகர் சொன்னான், “தெரியலை… எங்க கிராமத்து வீட்டுல வேற ஃபோன் இல்லை. இரு… நான் எதுக்கும் லெட்டர் போட்டுக் கேக்கிறேன்.!”

அவன் அம்மாவுக்கு கடிதம் எழுதினான்.

“அன்புள்ள அம்மா, நான் நீங்கள் தோசைக் கரண்டியை எடுத்தீங்கன்னு சொல்லலை. எடுக்கலைன்னும் சொல்லலை. ஆனா, ஒண்ணு மட்டும் உண்மை. என் வீட்டுல இருந்து நீங்க போனதுக்கு அப்புறம் தோசைக் கரண்டியைக் காணவில்லை.!”

சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது.
அதை சேகர் பிரித்துப் படித்தான்.

“அன்புள்ள மகனுக்கு, நான் உன் கூட வசிக்கற பொண்ணோடு நீ தப்பா இருக்கறேன்னு சொல்லலை. இல்லைன்னும் சொல்லலை. ஆனா, ஒண்ணு மட்டும் உண்மை-
-அவள் அவ பெட்டுல தூங்கி இருந்தா இந்நேரம் அந்த தோசைக் கரண்டியைக் கண்டுபிடிச்சு இருப்பா.!”.


#வாட்ஸப்பிலிருந்து
.
.
.