குரு ஒருவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.
அதுசமயம் பக்தன் ஒருவன் அவரைக் காண வந்தான்.
அவர் அமர்ந்திருந்த இடம் ஆற்றங்கரையின் அருகிலிருந்த மிக உயரமான பாறையாயிருந்தது.
அந்தப் பாறையின் கீழே அந்த ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது.
வந்த பக்தன் அவர் காலடியில் இரண்டு வைரக் கற்களை வைத்து வணங்கினான்.
அவன் வாழ்நாளெல்லாம் அலைந்து சேர்த்த செல்வம் அது.
குரு கண்விழிக்கும்வரை அங்கேயே அமைதியாக காத்து நின்றிருந்தான்.
மெல்லக் கண் விழித்த குரு அவனைப் பார்த்தார்.
அவன் தன் காலடியில் வைத்திருந்த வைரக் கற்களையும் பார்த்தார்.
அவர் அதில் ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அது கை நழுவி ஆற்றின் மையத்தில் போய் விழுந்தது..
பதறிப்போன பக்தன் ஓடிச் சென்று நதியில் குதித்தான்.
இங்கும் அங்கும் மூழ்கி மூழ்கி அதைத் தேடினான்.
நெடுநேரம் தேடிப் போராடிக் களைத்துபோய் மேலேறி வந்தவன், கண்மூடித் தியானத்திலிருந்த குருவை எழுப்பி,"வைரம் எந்த இடத்தில் விழுந்தது என்று சரியாகச் சொல்ல முடியுமா...?" என்று கேட்டான்.
குரு மற்றொரு வைரத்தை எடுத்து நடு ஆற்றில் எறிந்துவிட்டு,"அதோ அங்கேதான்...!" என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
.
.
.
Wednesday, July 28, 2010
Saturday, July 24, 2010
ஐம்பது பைசா
டேனி அன்றைய தினத்தை எங்களுக்கு திகிலுடன் தான் துவக்கினான்.
அவன் அப்பா ட்ரஸ் மாற்றும்போது கீழே விழுந்த ஒரு ஐம்பது பைசா நாணயத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
அவர் பதறி, "துப்புடா... துப்புடா...!!" என்று கத்திக்கொண்டே வருவதற்குள், இப்போதுதான் வட்டமாய் வாட்டமாய்ச் சின்னதாய் இருக்கிறதே... அந்த ஐம்பது பைசாவை அவன் விழுங்கியே விட்டான்.
அவர் மேலும் பதறி,"முழுங்கிட்டான்.. முழுங்கிட்டான்.." என்று வீட்டையே ரணகளப் படுத்திவிட்டார்.
"கொஞ்சம் பொறுமையா இருங்க.." என்ற நான் டாகடருக்குப் போன் செய்தேன்.
டாக்டர் விக்குகிறானா, மூச்சுத் திணறுகிறதா என்பதெல்லாம் விசாரித்துவிட்டு, 'பயப்பட ஒண்ணுமில்ல... பதினோரு மணிக்கு ஹாஸ்பிடல் வந்திடுங்க...!' என்று போனை வைத்துவிட்டார்.
அதற்குள் அவர் ஊரிலிருக்கும் அவருடைய அம்மாவிற்குப் போன் செய்து விசாரித்து விட்டார்.
அவருடைய அம்மாவும் பதறாமல், 'கொஞ்ச நாள் விளக்கெண்ணெயும் பூவன் பழமுமாகக் கொடுத்தால் தன்னால வந்துடப் போகுது...!' என்று சொன்னதும்தான் சற்றே ஆசுவாசமானார்.
ஆனால், இதற்கிடையில் இவர் பண்ணிய ஆர்ப்பாட்டத்தில் மிரண்டு அழ ஆரம்பித்த டேனியோ இன்னும் நிறுத்தாமல் அழுதுகொண்டிருந்தான்.
எவ்வளவு சொல்லியும் கொஞ்சியும் அவன் விடாமல் அழுது கொண்டிருக்கவே டேனியின் அப்பா அவனுடைய கவனத்தைத் திசைதிருப்ப ஒரு மேஜிக் செய்வதாய் ஆரம்பித்தார்.
பாக்கெட்டில் இருந்து டேனி விழுங்கியதைப் போலவே ஒரு சிறிய புது ஐம்பது பைசாவை எடுத்து வைத்துக் கொண்டு டேனியைக் கூப்பிட்டார்.
"டேனி, இங்க பாரு... அப்பா இப்ப ஒரு மேஜிக் பண்ணுவேனாம். டேனி அழுகாமப் பார்ப்பானாம்...! இப்ப, அப்பா டேனி முழுங்குன காசை எப்படி எடுக்கப் போறேன் பாரு...!" என்றவர், அந்த இன்னொரு ஐம்பது பைசாவை வைத்திருந்த கையை அவன் வயிற்றருகில் கொண்டு சென்று,"ஜீபூம்பா..." என்று சொல்லி கையை ஒரு ஆட்டு ஆட்டி, மேலே தூக்கி... அவன் முகத்தருகே கொண்டு சென்று அந்த ஐம்பது பைசாவை டேனியிடம் காட்டினார்.
அவர் மேஜிக் செய்ய ஆரம்பித்ததுமே அழுகை குறைந்த டேனி, ஆச்சர்யமும் ஆர்வமுமாய் அவன் அப்பா கையிலிருந்த புது ஐம்பது பைசாவையே பார்த்துக் கொண்டிருந்தவன் டப்பென்று அந்த ஐம்பது பைசாவையும் பிடுங்கி வாயில் போட்டு சடாரென்று விழுங்கிவிட்டு சொன்னான்.
"எங்கே இன்னொருவாட்டி எடு பார்போம்...!".
.
.
.
Labels:
திகில்,
துப்பு,
மேஜிக்,
விளக்கெண்ணெய்
5
comments
Friday, July 23, 2010
வியாபாரம்
சின்னப்பன் செட்டி என சென்னையில் அழைக்கப்படும் சின்னப்பனின் தொழில் ஹோல்சேல் வியாபாரம்.
'செட்டி அன் கோ' என்றால் தெரியாதவர் சென்னைக்குப் புதுசு என்று அர்த்தம்.
அவர் குடும்பம் பரம்பரையாய் வியாபாரத்தில் பெயர் பெற்றது.
கடல் கடப்பது மதவிரோதமாய் இருந்த காலத்திலேயே கடல்கடந்து வியாபாரம் செய்தவர்கள் அவர்கள்.
ராஜாக்கள் காலத்திலும் வெள்ளைக்காரன் காலத்திலும் விடாமல் வியாபாரம் செய்து பொருளீட்டியது அவர் வம்சம்.
எல்லாம் சின்னப்பன் காலத்தில் தொலைந்துவிடும் போலிருக்கிறது.
சின்னப்பனுக்கு சமீபமாய் வியாபாரத்தில் பயங்கர நஷ்டம்.
நஷ்டத்தைச் சரிக்கட்டப்போய் இன்னொரு நஷ்டம்... அதைச் சரிக்கட்ட இன்னொரு நஷ்டம்... என வளர்ந்து வளர்ந்து மொத்தத்தில் மூழ்கிப்போகும் நிலைக்கு வந்துவிட்டார்.
எல்லாம் கணக்குப் பார்த்ததில் மிஞ்சியது ஒன்றுமில்லை.
வீட்டை விற்று, காட்டை விற்று கடைசியில் போன வாரம் கார் வரை விற்றாகிவிட்டது.
காரை விற்றதிலிருந்து, தாத்தா உபயோகப்படுத்திய ஒரு வெள்ளைக்காரன் காலத்து தகர டப்பா காரைத்தான் உபயோகப்படுத்தி வருகிறார்.
அதுவோ பெட்ரோலைக் குடித்துத் தள்ளுகிறது.
அதன் சத்தமோ ரோட்டில் சின்னப்பனின் மானத்தை வாங்கிவிடுகிறது.
இத்தனை காலம் சேர்த்த மரியாதை போயாச்சு. மானம் போயாச்சு. பணம் போயாச்சு.
சின்னப்பனிடம் இனிப் போவதற்கு ஒன்றுமில்லை.
இருந்த காசையும் கார் பெட்ரோலாய்க் காலி பண்ணிவிட இப்போது ஊருக்குப் போவதற்குக்கூடப் பைசா இல்லை.
ராத்திரிப்பூராவும் யோசித்தார்.
இந்தக்காரை வாங்குபவன் பேரீச்சம்பழம் தராமல் ஒரு ரெண்டாயிரம் ரூபாய் தந்தால் சத்தம் காட்டமல் உறுக்கு ஓடிவிடலாம்.
ஒரு இருபதாயிரம் தந்தால் ஊரில் ஒரு பொட்டிக்கடை போட்டு 'ஐயா வணக்கம்' என்று முதலில் இருந்து ஒருமுறை விளையாடிப் பார்க்கலாம்.
யோசித்துக் கொண்டே உறங்கிவிட்டார்.
காலையில் வாசலில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும்போது தெருவில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த ஒருத்தர் வந்தார்.
"சார்... நான் பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறேன். ராஜேஸ்வரி மில்லோட ஓனர். பழைய வின்டேஜ் கார்கள் சேகரிப்பது என்னோட ஹாபி. நீங்க இந்தப் பழைய ஆஸ்டின் காரை விக்கறதா இருந்தாக் கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்...!".
சின்னப்பனுக்குள் ஒரு சந்தோசம் வந்து உட்கார்ந்தது.
'இந்த காரை வாங்கறதுக்குக் கூட ஊருக்குள்ள பைத்தியங்கள் இருக்குதா என்ன...?' என்று யோசித்தபடியே கேட்டார்.
"என்ன விலை தருவீங்க...?".
வந்தவர் லேசாய் இழுத்தபடி சொன்னார்.
"ஒரு ஐம்பதாயிரம்னா முடிச்சுடலாம்...!".
சின்னப்பன் கொஞ்சம்கூட யோசிக்காமல் சடாரென்று சொன்னார்.
"சார் ஒரே ரேட்டு... ரெண்டு லட்சம்னா நாம மேல பேசலாம்...!".
'செட்டி அன் கோ' என்றால் தெரியாதவர் சென்னைக்குப் புதுசு என்று அர்த்தம்.
அவர் குடும்பம் பரம்பரையாய் வியாபாரத்தில் பெயர் பெற்றது.
கடல் கடப்பது மதவிரோதமாய் இருந்த காலத்திலேயே கடல்கடந்து வியாபாரம் செய்தவர்கள் அவர்கள்.
ராஜாக்கள் காலத்திலும் வெள்ளைக்காரன் காலத்திலும் விடாமல் வியாபாரம் செய்து பொருளீட்டியது அவர் வம்சம்.
எல்லாம் சின்னப்பன் காலத்தில் தொலைந்துவிடும் போலிருக்கிறது.
சின்னப்பனுக்கு சமீபமாய் வியாபாரத்தில் பயங்கர நஷ்டம்.
நஷ்டத்தைச் சரிக்கட்டப்போய் இன்னொரு நஷ்டம்... அதைச் சரிக்கட்ட இன்னொரு நஷ்டம்... என வளர்ந்து வளர்ந்து மொத்தத்தில் மூழ்கிப்போகும் நிலைக்கு வந்துவிட்டார்.
எல்லாம் கணக்குப் பார்த்ததில் மிஞ்சியது ஒன்றுமில்லை.
வீட்டை விற்று, காட்டை விற்று கடைசியில் போன வாரம் கார் வரை விற்றாகிவிட்டது.
காரை விற்றதிலிருந்து, தாத்தா உபயோகப்படுத்திய ஒரு வெள்ளைக்காரன் காலத்து தகர டப்பா காரைத்தான் உபயோகப்படுத்தி வருகிறார்.
அதுவோ பெட்ரோலைக் குடித்துத் தள்ளுகிறது.
அதன் சத்தமோ ரோட்டில் சின்னப்பனின் மானத்தை வாங்கிவிடுகிறது.
இத்தனை காலம் சேர்த்த மரியாதை போயாச்சு. மானம் போயாச்சு. பணம் போயாச்சு.
சின்னப்பனிடம் இனிப் போவதற்கு ஒன்றுமில்லை.
இருந்த காசையும் கார் பெட்ரோலாய்க் காலி பண்ணிவிட இப்போது ஊருக்குப் போவதற்குக்கூடப் பைசா இல்லை.
ராத்திரிப்பூராவும் யோசித்தார்.
இந்தக்காரை வாங்குபவன் பேரீச்சம்பழம் தராமல் ஒரு ரெண்டாயிரம் ரூபாய் தந்தால் சத்தம் காட்டமல் உறுக்கு ஓடிவிடலாம்.
ஒரு இருபதாயிரம் தந்தால் ஊரில் ஒரு பொட்டிக்கடை போட்டு 'ஐயா வணக்கம்' என்று முதலில் இருந்து ஒருமுறை விளையாடிப் பார்க்கலாம்.
யோசித்துக் கொண்டே உறங்கிவிட்டார்.
காலையில் வாசலில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும்போது தெருவில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த ஒருத்தர் வந்தார்.
"சார்... நான் பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறேன். ராஜேஸ்வரி மில்லோட ஓனர். பழைய வின்டேஜ் கார்கள் சேகரிப்பது என்னோட ஹாபி. நீங்க இந்தப் பழைய ஆஸ்டின் காரை விக்கறதா இருந்தாக் கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்...!".
சின்னப்பனுக்குள் ஒரு சந்தோசம் வந்து உட்கார்ந்தது.
'இந்த காரை வாங்கறதுக்குக் கூட ஊருக்குள்ள பைத்தியங்கள் இருக்குதா என்ன...?' என்று யோசித்தபடியே கேட்டார்.
"என்ன விலை தருவீங்க...?".
வந்தவர் லேசாய் இழுத்தபடி சொன்னார்.
"ஒரு ஐம்பதாயிரம்னா முடிச்சுடலாம்...!".
சின்னப்பன் கொஞ்சம்கூட யோசிக்காமல் சடாரென்று சொன்னார்.
"சார் ஒரே ரேட்டு... ரெண்டு லட்சம்னா நாம மேல பேசலாம்...!".
Wednesday, July 21, 2010
கடவுளின் பிறந்தநாள்
துறவி ஒருவருக்கு இறை வழிபாட்டில் மிகுந்த பிரியம்.
ஆனால், அவருக்கு எந்த மார்க்கத்தில் கும்பிட்டால் இறைவனை அடையலாம் என்று குழப்பம்.
ஒருநாள் இரவு... இதே எண்ணத்துடன் தூங்கும்போது அவர் ஒரு கனவு கண்டார்.
கனவில் அவர் தேவலோகத்தில் இருக்கிறார்.
அங்கே வண்ண விளக்குகளும் வான வேடிக்கைகளுமாய் ஒரே குதூகலமாய் இருக்கிறது தேவலோகம்.
துறவி கேட்டார்,"என்ன விசேஷம்...?"
அருகிலிருந்தவர் சந்தோசமாய் சொன்னார்,"தெரியாதா... இன்று கடவுளின் பிறந்தநாள்...!இன்னும் சற்று நேரத்தில் அவர் ஊர்வலம் வர இருக்கிறார்...!".
துறவிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.
"கடவுளுக்கே பிறந்தநாளா...? சரி பார்ப்போம்...!".
நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாத்தியங்கள் ஒலிக்க, ஜெயகோஷங்கள் முழங்க ஒரு ஊர்வலம் வந்தது.
கூட்டம் மிகப் பெரிதாயிருக்க கூட்டத்தின் நடுவே அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஒருவர் மொட்டைத் தலையுடன் ஒருவர் வந்தார்.
"இவர்தான் கடவுளா...?" துறவி கேட்டார்.
"இல்லை.."என்ற அருகிலிருந்தவர் ஒரு பெரிய மதத்தின் பெயரைச் சொல்லி 'அதன் தலைவர் இவர்... உடன் வருபவர்கள் அவரைப் பின்பற்றுபவர்கள்...!" என்றார்.
சற்று நேரத்தில் இன்னொரு ஊர்வலம் வந்தது.
இப்போது ஒருவர் ஊர்வலத்தின் மத்தியில் ஒரு குதிரை மீது அமர்ந்து வந்தார்.
நீண்ட சடாமுடியும் பெரிய தாடியுமாயிருந்த அவரை வேறொரு மதத்தின் தலைவர் என்று துறவியிடம் சொன்னார் அருகிலிருந்தவர்.
அடுத்தடுத்து ஏராளமான ஊர்வலங்கள்.
சிலவற்றில் பத்திருபது பேர்கூட இல்லை.
சிலவற்றில் லட்சக் கணக்கானவர்கள் கூட்டம்.
நாள் முழுவதும் இது நடந்துகொண்டே இருந்தது.
எல்லாம் முடிந்து கடைசியில் ஊர்வலமில்லாமல் ஒரேயொரு குதிரை தள்ளாடியபடி மெல்ல நடந்து வந்தது.
அதன் மீது ஒரு வயதான நபர் அமர்ந்து இருந்தார். அவர் தோற்றமே பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
துறவி கேட்டார்,"இவர் எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர்..?".
"என்னது..?" அருகிலிருந்தவர் குரல் ஆச்சர்யத்துடன் கீச்சிட்டது.
"இவரைத் தெரியவில்லையா...இவர்தான் கடவுள். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள்.!".
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் துறவி. கனவு கலைந்தது.
அன்றோடு மார்க்கங்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு கடமைகளை அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தார் துறவி.
ஆனால், அவருக்கு எந்த மார்க்கத்தில் கும்பிட்டால் இறைவனை அடையலாம் என்று குழப்பம்.
ஒருநாள் இரவு... இதே எண்ணத்துடன் தூங்கும்போது அவர் ஒரு கனவு கண்டார்.
கனவில் அவர் தேவலோகத்தில் இருக்கிறார்.
அங்கே வண்ண விளக்குகளும் வான வேடிக்கைகளுமாய் ஒரே குதூகலமாய் இருக்கிறது தேவலோகம்.
துறவி கேட்டார்,"என்ன விசேஷம்...?"
அருகிலிருந்தவர் சந்தோசமாய் சொன்னார்,"தெரியாதா... இன்று கடவுளின் பிறந்தநாள்...!இன்னும் சற்று நேரத்தில் அவர் ஊர்வலம் வர இருக்கிறார்...!".
துறவிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.
"கடவுளுக்கே பிறந்தநாளா...? சரி பார்ப்போம்...!".
நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாத்தியங்கள் ஒலிக்க, ஜெயகோஷங்கள் முழங்க ஒரு ஊர்வலம் வந்தது.
கூட்டம் மிகப் பெரிதாயிருக்க கூட்டத்தின் நடுவே அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஒருவர் மொட்டைத் தலையுடன் ஒருவர் வந்தார்.
"இவர்தான் கடவுளா...?" துறவி கேட்டார்.
"இல்லை.."என்ற அருகிலிருந்தவர் ஒரு பெரிய மதத்தின் பெயரைச் சொல்லி 'அதன் தலைவர் இவர்... உடன் வருபவர்கள் அவரைப் பின்பற்றுபவர்கள்...!" என்றார்.
சற்று நேரத்தில் இன்னொரு ஊர்வலம் வந்தது.
இப்போது ஒருவர் ஊர்வலத்தின் மத்தியில் ஒரு குதிரை மீது அமர்ந்து வந்தார்.
நீண்ட சடாமுடியும் பெரிய தாடியுமாயிருந்த அவரை வேறொரு மதத்தின் தலைவர் என்று துறவியிடம் சொன்னார் அருகிலிருந்தவர்.
அடுத்தடுத்து ஏராளமான ஊர்வலங்கள்.
சிலவற்றில் பத்திருபது பேர்கூட இல்லை.
சிலவற்றில் லட்சக் கணக்கானவர்கள் கூட்டம்.
நாள் முழுவதும் இது நடந்துகொண்டே இருந்தது.
எல்லாம் முடிந்து கடைசியில் ஊர்வலமில்லாமல் ஒரேயொரு குதிரை தள்ளாடியபடி மெல்ல நடந்து வந்தது.
அதன் மீது ஒரு வயதான நபர் அமர்ந்து இருந்தார். அவர் தோற்றமே பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
துறவி கேட்டார்,"இவர் எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர்..?".
"என்னது..?" அருகிலிருந்தவர் குரல் ஆச்சர்யத்துடன் கீச்சிட்டது.
"இவரைத் தெரியவில்லையா...இவர்தான் கடவுள். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள்.!".
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் துறவி. கனவு கலைந்தது.
அன்றோடு மார்க்கங்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு கடமைகளை அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தார் துறவி.
Labels:
இறை,
ஊர்வலம்,
குதிரை,
குதூகலம்,
தலைவர்,
பிறந்தநாள்,
ஜெயகோஷம்
3
comments
Monday, July 19, 2010
சொர்க்கத்தில் டாம் & ஜெர்ரி
இறந்ததும் சொர்க்கத்திற்கு வந்தது பூனை ஒன்று.
சித்திரகுப்தன் கேட்டார்.
"சொர்க்கத்திற்கு நல்வரவு பூனையே..!சொல் உனக்கு என்ன வசதிகள் வேண்டும்...?"
பூனை கேட்டது.
"அய்யா சீனா குனா... நான் பூமியில் வாழ்ந்த காலங்களில் நிறைய அவஸ்தைப் பட்டுவிட்டேன். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் பயந்தும் எலிகளைத் தேடி ஓடியும் ஓய்ந்து போய் விட்டேன். எனக்கு இப்போது தேவை ஒரு படுக்கை. அனந்தமாய் யார் தொந்தரவும் இல்லாமல் சுகமான தூக்கம்... அவ்வளவுதான்...!".
சித்திரகுப்தன் பூனை சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுவிட்டு, அது கேட்டதை ஏற்பாடு செய்துகொடுத்தார்.
பூனைக்குப் பின்னாலேயே எலிகள் வந்தன.
சித்திரகுப்தன் அவைகளிடம் கேட்டார், "உங்களுக்கு என்ன வேண்டும்...?".
எலிகள் சொல்லின,"பூமியில் பூனைகளுக்குப் பயந்து ஓடியோடியே எங்கள் வாழ்க்கை வீணாய்ப்போனது. இனி எங்களால் ஓட முடியாது... எங்களுக்கு ஆளுக்கொரு ரோலர் ஸ்கேட்டிங் வேண்டும்..!".
சித்திரகுப்தன் எலிகள் கேட்டது கிடைக்க ஏற்பாடு செய்தார்.
கொஞ்ச நாள் சென்றதும் சித்திரகுப்தன் மறுபடி ஒருவேலையாய் சொர்க்கத்திற்கு வந்தபோது முதலில் பூனையைச் சந்தித்தார்.
"என்ன பூனையே... எப்படி இருக்கிறது சொர்க்கம்...?"
பூனை சந்தோசமாய்ப் பதில் சொன்னது.
"சொர்க்கம்னா சொர்க்கம்தான் போங்க... பூமியில் எல்லாம் ஒரு எலிக்காக ஊரெல்லாம் ஓடுவோம். ஆனா இங்கே பாருங்க... எலியெல்லாம் காலில சக்கரம் கட்டிகிட்டு நம்ம உட்கார்ந்திருந்த இடத்துகே நேரா வந்து மாட்டுதுக...!".
சித்திரகுப்தன் கேட்டார்.
"சொர்க்கத்திற்கு நல்வரவு பூனையே..!சொல் உனக்கு என்ன வசதிகள் வேண்டும்...?"
பூனை கேட்டது.
"அய்யா சீனா குனா... நான் பூமியில் வாழ்ந்த காலங்களில் நிறைய அவஸ்தைப் பட்டுவிட்டேன். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் பயந்தும் எலிகளைத் தேடி ஓடியும் ஓய்ந்து போய் விட்டேன். எனக்கு இப்போது தேவை ஒரு படுக்கை. அனந்தமாய் யார் தொந்தரவும் இல்லாமல் சுகமான தூக்கம்... அவ்வளவுதான்...!".
சித்திரகுப்தன் பூனை சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுவிட்டு, அது கேட்டதை ஏற்பாடு செய்துகொடுத்தார்.
பூனைக்குப் பின்னாலேயே எலிகள் வந்தன.
சித்திரகுப்தன் அவைகளிடம் கேட்டார், "உங்களுக்கு என்ன வேண்டும்...?".
எலிகள் சொல்லின,"பூமியில் பூனைகளுக்குப் பயந்து ஓடியோடியே எங்கள் வாழ்க்கை வீணாய்ப்போனது. இனி எங்களால் ஓட முடியாது... எங்களுக்கு ஆளுக்கொரு ரோலர் ஸ்கேட்டிங் வேண்டும்..!".
சித்திரகுப்தன் எலிகள் கேட்டது கிடைக்க ஏற்பாடு செய்தார்.
கொஞ்ச நாள் சென்றதும் சித்திரகுப்தன் மறுபடி ஒருவேலையாய் சொர்க்கத்திற்கு வந்தபோது முதலில் பூனையைச் சந்தித்தார்.
"என்ன பூனையே... எப்படி இருக்கிறது சொர்க்கம்...?"
பூனை சந்தோசமாய்ப் பதில் சொன்னது.
"சொர்க்கம்னா சொர்க்கம்தான் போங்க... பூமியில் எல்லாம் ஒரு எலிக்காக ஊரெல்லாம் ஓடுவோம். ஆனா இங்கே பாருங்க... எலியெல்லாம் காலில சக்கரம் கட்டிகிட்டு நம்ம உட்கார்ந்திருந்த இடத்துகே நேரா வந்து மாட்டுதுக...!".
Labels:
எலி,
டாம்,
நல்வரவு,
பாருங்க,
பூனை,
ரோலர்ஸ்கேட்டிங்,
ஜெர்ரி
5
comments
Subscribe to:
Posts (Atom)