Monday, July 19, 2010

சொர்க்கத்தில் டாம் & ஜெர்ரி

இறந்ததும் சொர்க்கத்திற்கு வந்தது பூனை ஒன்று.
சித்திரகுப்தன் கேட்டார்.
"சொர்க்கத்திற்கு நல்வரவு பூனையே..!சொல் உனக்கு என்ன வசதிகள் வேண்டும்...?"
பூனை கேட்டது.
"அய்யா சீனா குனா... நான் பூமியில் வாழ்ந்த காலங்களில் நிறைய அவஸ்தைப் பட்டுவிட்டேன். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் பயந்தும் எலிகளைத் தேடி ஓடியும் ஓய்ந்து போய் விட்டேன். எனக்கு இப்போது தேவை ஒரு படுக்கை. அனந்தமாய் யார் தொந்தரவும் இல்லாமல் சுகமான தூக்கம்... அவ்வளவுதான்...!".
சித்திரகுப்தன் பூனை சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுவிட்டு, அது கேட்டதை ஏற்பாடு செய்துகொடுத்தார்.
பூனைக்குப் பின்னாலேயே எலிகள் வந்தன.
சித்திரகுப்தன் அவைகளிடம் கேட்டார், "உங்களுக்கு என்ன வேண்டும்...?".
எலிகள் சொல்லின,"பூமியில் பூனைகளுக்குப் பயந்து ஓடியோடியே எங்கள் வாழ்க்கை வீணாய்ப்போனது. இனி எங்களால் ஓட முடியாது... எங்களுக்கு ஆளுக்கொரு ரோலர் ஸ்கேட்டிங் வேண்டும்..!".
சித்திரகுப்தன் எலிகள் கேட்டது கிடைக்க ஏற்பாடு செய்தார்.
கொஞ்ச நாள் சென்றதும் சித்திரகுப்தன் மறுபடி ஒருவேலையாய் சொர்க்கத்திற்கு வந்தபோது முதலில் பூனையைச் சந்தித்தார்.
"என்ன பூனையே... எப்படி இருக்கிறது சொர்க்கம்...?"
பூனை சந்தோசமாய்ப் பதில் சொன்னது.
"சொர்க்கம்னா சொர்க்கம்தான் போங்க... பூமியில் எல்லாம் ஒரு எலிக்காக ஊரெல்லாம் ஓடுவோம். ஆனா இங்கே பாருங்க... எலியெல்லாம் காலில சக்கரம் கட்டிகிட்டு நம்ம உட்கார்ந்திருந்த இடத்துகே நேரா வந்து மாட்டுதுக...!".

5 comments:

Post a Comment