Thursday, July 8, 2010

தோள் மேல... தோள் மேல...

அத்தியாயம் - 2
(கீழே முந்தைய அத்தியாயத்தைப் படித்துவிட்டு வரவும்)



மறுநாள் திங்கட்கிழமை.

கணேஷ் கம்பெனிக்குப் போனதும் மேனேஜர் கேட்டார்.

"என்னா கணேஷ்... நேத்து உங்க வீட்டுக்கு கடவுள் வந்திருந்தாராமே... ஏதோ கண்ணாடி எல்லாம் தந்ததா பேசிக்கிறாங்க...!".

கணேஷ் மிரண்டு போனான்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை.

'நம் வீட்டில் நடந்தது இவருக்கு எப்படித் தெரியும்...?'

யோசித்துக் கொண்டே இருக்கையில் மேனேஜர் சொன்னார்.

"இதப்பாரு கணேஷு... நீ எங்க போற.. என்னென்ன பண்ணுற...யாருகூட என்னவெல்லாம் பேசுற.. எல்லாம் எனக்குத் தெரியும். இவன் எங்கயோ இருக்கானே, இவன்கிட்ட எதுக்குச் சொல்லணும்னு எதையும் எங்கிட்ட மறைக்க முடியாது... தெரிஞ்சுக்கோ...!"

கணேஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் தலையாட்டினான்.

மேனேஜர் தொடர்ந்தார்.

"சரி.. சரி... அதென்ன கண்ணாடி...? அதச் சொல்லு மொதல்ல...!".

கணேஷ் நடந்ததைச் சொன்னான்.

"எங்கே... அந்த வாழ்க்கைக் கண்ணாடியை எடு பார்ப்போம்...?"

கணேஷ் எடுத்ததும் மேனேஜர் கேட்டார்.

"அதுல நம்ம கம்பெனில உன்னோட ஃபுட் ப்ரின்ட்ஸைக் காட்டு பார்ப்போம்...!".

கணேஷ் பதில் சொன்னான்.

"சார்... எல்லா நேரத்துலயும் கடவுள் என் கூடவே இருந்திருக்காரு...!"

"அதெல்லாம் கம்பெனிக்கு வெளியே... கம்பெனிக்குள்ள வொர்க்கிங் டைம்ல கடவுளாவே இருந்தாலும் அல்வ் பண்ண முடியாதுல்ல..! நீ கம்பெனி டைம உன் கண்ணாடில காட்டுப்பா...!"

கணேஷ் கண்ணாடியில் அலுவலக நேரத்தை எடுத்தான்.

கண்ணாடியில் முன்பைப் போலவே இரு ஜோடிப் பாதங்கள் தெரிந்தது.

மேனேஜர் சொன்னார்.

"பாத்தியா... இதுலயும் ரெண்டு ஜோடிப் பாதம் தெரியுது..! ஒரு ஜோடி உன்னுது... இன்னொரு ஜோடி  என்னுது...!".

கணேஷ் கண்ணாடியில் அதைப் பார்த்தான்.

அதிலும், சில இடங்களில் ஒரே ஒரு ஜோடிப் பாதங்கள் மட்டும் தெரிய சந்தேகத்துடன் கேட்டான்.

"சார்... இதுல சில இடங்கள்ல ஒரு ஜோடி மட்டும்தான இருக்கு...!"

மேனேஜர் சொன்னார்.

"ஓ... அதுவா? அது நம்ம கம்பெனியோட ப்ராப்ளமேட்டிக் டைம்ஸ்...!"

அந்த சமயங்களில் இவர் கடவுள்போல தன்னைச் சுமந்திருக்கவில்லை என்று தெரிந்தாலும் கணேஷ் கேட்டான்.

"அந்த மாதிரி சமயங்கள்ல... நீங்க என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டிங்களா சார்...?".

மேனேஜர் பொறுமையாய் சிரித்தபடி...

"அதெப்படி கணேஷ்... அப்படிப் பொறுப்பில்லாம விட்டுட்டுப் போக முடியும்...? அந்த மாதிரி சமயங்கள்ல நான்தான் உன்மேல உக்காந்திருந்தேனே...!" என்றார்.
.
.
.

இப்போதைக்கு
முற்றும்.

2 comments:

சென்ஷி said...

:))

நல்ல உல்டா..

Unknown said...

கலக்கல்...!

Post a Comment