Saturday, July 3, 2010

மட்டன் ஸ்டால் மன்னாரு



மன்னாரு என்றும் போல் அன்றும் காலை தனது மட்டன் ஸ்டாலை திறந்து வைத்தான்.

ஆனால், அன்று அவனது கடைக்கு வந்ததோ ஒரு விநோதமான கஸ்டமர்.

மொபைல் விளம்பரத்துல வருமே அதேபோல் ஒரு நாய் வாயில் மூன்று நூறு ரூபாய் நோட்டுகளுடன் வந்தது.

கூடவே, மட்டன் எத்தனை கிலோ வேணும்னு ஒரு சீட்டு.

மன்னாரு அசந்து போனான்.

இந்த நாய் என்னதான் பண்ணுகிறது என்று பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

பேசாமல் அதில் இருந்த அளவுக்கு மட்டனை வெட்டி, ஒரு பொட்டலம் கட்டிக் கொடுத்துவிட்டு அது போகும் வரை காத்திருந்தான்.

நாய் நகர்ந்ததுதான் தாமதம்.

கடையைச் சாத்திவிட்டு மன்னாரும் நாயின் பின்னாலே கிளம்பினான்.

நாய் வாயில் கவ்விய பையுடன் சாலையின் ஓரத்திற்குச் சென்றது.

பச்சை விளக்கு விழும் வரை காத்திருந்து, சாலையின் இரு பக்கமும் பார்த்துக் கிராஸ் செய்தது.

பஸ் ஸ்டாப்புக்கு வந்து பஸ் டைமிங்கைச் செக் செய்துவிட்டு பெஞ்சில் பையை வைத்துவிட்டு சாலையைக் கவனிக்க ஆரம்பித்தது.

வந்த பஸ்ஸின் எண்ணையும் போகும் ரூட்டையும் கவனித்து பிறகுதான் அதில் ஏறியது.

மன்னாரும் அதே பஸ்ஸில் ஏறிக் கொண்டான்.

நாய் டிக்கட் வாங்கிய அதே இடத்துக்கு டிக்கட் வாங்கிக் கொண்டான்.

அந்த நாய் பஸ்ஸின் ஜன்னலோரம் ஒரு சீட்டைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்து கொண்டு வீதியின் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே வந்தது.

கொஞ்ச நேரம் கழித்து புளியமரம் ஸ்டாப் வந்ததும் அதுவே இறங்கி வேகவேகமாய் நடக்கத் தொடங்கியது.

மன்னாரும் அதன் பின்னாலேயே தொடர்ந்தான்.

சாலையின் இருபக்கமும் கவனமாய்ப் பார்த்தபடி சென்ற அது ஒரு வீட்டின் கேட்டை முட்டித் திறந்து நுழைந்தது.

கேட்டைத் தாண்டி வீட்டின் முன்னே வந்த அந்த நாய் கதவை முட்டிப் பார்த்தது.

கதவு திறக்கவில்லை.

சற்றே பின்னால் வந்து வேகமாய் ஓடி ஒரு ஜம்ப்.

சரியாய் காலிங்பெல்லில் முட்டியது.

கதவு திறக்கவில்லை.

திரும்பவும் பின்னால் வந்து ஓடி ஜம்ப் செய்து காலிங்பெல்லில் ஒரு முட்டு.

கதவு திறக்க இன்னும் தாமதமாக இதுவே நான்கைந்து முறை தொடர்ந்தது.

கொஞ்ச நேரம் கழித்து குண்டாய் ஒருவன் கடுகடுவென்ற முகத்துடன் கதவைத் திறந்தான்.

நாயைப் பார்த்துக் கத்தினான்.

"ஏய் நாயே...! அறிவில்ல உனக்கு...? எத்தனை தடவை சொன்னாலும் புத்தி வராது உனக்கு...?"

அவன் திட்டிக்கொண்டே போக மன்னாருக்கு வந்ததே கோபம்.

அந்த குண்டனைப் பார்த்து வேகமாய் ஓடினான்.

"ஏய் என்னப்பா நீ... இந்த நாயப் போயித் திட்டறியே...! உன் நாய் உண்மையிலேயே ஒரு ஜீனியஸ் தெரியுமா...?".

அந்த குண்டன் மன்னாரைப் பார்த்து அலுப்புடன் சொன்னான்.

"எது... இதுவா ஜீனியஸ்...? இந்த வாரத்துலயே ரெண்டாவது தடவையா கதவு சாவிய மறந்துட்டு வந்து காலிங் பெல்லை அடிச்சுக்கிட்டு இருக்கு...!".
.
.
.

4 comments:

Unknown said...

GOOD

Anonymous said...

Good thinking dear keep it up

Anonymous said...

extraordinary..

வெங்கட்ராமன் said...

ஷ், அப்பாடா, இப்பவே கண்ண கடடுதே.

Post a Comment