நான் ஒரு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்.
மொழியை மோசமாய்க் கையாளும் யாரைக் கண்டாலும் கோபமாய் வரும் எனக்கு.
என் மகன் டேனியோ, அவனது தந்தையின் விருப்பப்படி கான்வென்டில் படிப்பவன்.
ஆங்கிலம் கலக்காமல் அவனுக்கு ஒரு வாக்கியம் கூடப் பேசவே வராது.
அதனால், அவன் ஆங்கிலம் பேசும்போது அதற்கிணையான தமிழ் வார்த்தைகளைச் சொல்லித் தருவதும் அதை அவனைப் பேச வைப்பதும் என் வழக்கம்.
இது சம்பந்தமாக அடிக்கடி செல்லச் சண்டைகள் நடக்கும் எங்களுக்குள்.
அன்றும் அப்பிடித்தான்...
நான் டேனியுயுடன் கடைவீதியில் வீட்டிற்குத் தேவையான எல்லாம் வாங்கிவிட்டு திரும்பும் போது, டீ சாப்பிடுவதற்காக ஒரு நல்ல அடுமனைக்குள்(பேக்கரி) நுழைந்தோம்.
அடுமனையில் நல்ல நல்ல கேக்குகளைப் பார்த்த டேனி,"அம்மா... ஒரு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்குமா..!"என்றான் கண்கள் நிறைய ஆவலுடன்.
நான் 'சரி' சொல்லவும் சந்தோசமாய் கடைக்காரரை அழைத்து கேக்கை ஆர்டர் செய்துவிட்டு,"ஹை சூப்பர்... ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ரொம்ப அட்டகாசமாய் இருக்கும்..! ஐ ஜஸ்ட் லவ் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்..." என்றான்.
நான் வழக்கம்போல்,"என்ன மொழி பேசற நீ...? சூப்பர்,அட்டகாசம்,ஜஸ்ட் லவ்னு... ஒழுங்கா நல்லாத் தமிழ்ல சொல்லு. இல்லைனா, உனக்கு கேக் கிடையாது...!".
சொல்லிவிட்டு நான் கோபமாய்த் திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.
டேனி என் வருத்தத்தைச் சங்கடத்துடன் கவனித்தவன், "சரிம்மா... நான் தெளிவாத் தமிழ்ல சொல்லறேன்..."என்றவன், கடைக்காரர் கொண்டுவந்து டேபிளில் வைத்த கேக்கை ஆவலுடன் பார்த்தபடியே சொன்னான்.
"ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் மிக நன்றாக இருக்கும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்..!".
நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பும்போது அவன் என்னைப் பார்த்துச் சொன்னான்.
"ஆனா அம்மா... இந்த மாதிரிச் சொல்லும்போது எனக்கு என்னவோ ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கைப் பத்திச் சொல்லற மாதிரியே இல்லை. ஏதோ... காய்ச்சலுக்கு வாங்கிட்டுப் போற காய்ஞ்சுபோன ப்ரட்டைப் பத்திச் சொல்லற மாதிரித்தான் இருக்கு...!".
.
.
.
Tuesday, November 30, 2010
Thursday, November 25, 2010
நாயே நாயே
நான் கோவையிலிருந்து சென்னைக்கு குடி வந்தபோது நடந்து இது.
என் மகன் டேனியின் செல்ல நாய்குட்டி சீஸரை எங்கே விடுவது என்று ஒரு மஹா குழப்பம் இருந்தது.
கோவையில் நாங்கள் இருந்த வீடு தனி வீடு; அதனால், நாய் வளர்ப்பது பெரிய இடைஞ்சலாய் இல்லை.
ஆனால், நாங்கள் சென்னையில் பார்த்திருப்பதோ ஒரு நெருக்கமான அபார்ட்மென்ட்; அதில், சீஸரை வைத்திருப்பது மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்குமே என்பது எனக்கும் கணவருக்கும் யோசனையாய் இருந்தது.
என்றாலும், டேனி சீஸர் இல்லாமல் ஏங்கிப் போய்விடுவானே என்று நாயையும் எங்களுடனேயே அழைத்து வந்துவிட்டோம்.
சென்னை வந்து ரொம்ப நாள் ஆனபின்னாலும்கூட வீட்டுக்குள்ளேயே இருப்பது, சீஸருக்குப் பிடிக்காத விஷயமாகவே இருந்து வந்தது.
சின்னதாய் கதவைத் திறந்தாலும் வெளியே ஓடிவிடுவது அதன் குணமாய் இருந்தது.
அப்படித்தான் ஒரு சனிக்கிழமை நடந்தது.
டேனி ஸ்கூலுக்குப் போயிருந்தான்.
நான் கேஸ் வந்திருக்கிறது என்று சமயலறையின் உள்ளே சிலிண்டரை மாற்றிக் கொண்டிருந்தபோது, கதவு திறந்திருக்க அதன் வழியே சீஸர் வெளியே ஓடிவிட்டது.
கேஸ்காரர் வெளியே போய் சற்று நேரத்துக்கு அப்புறம்தான், சீஸர் வீட்டுக்குள் இல்லை என்பதே எங்களுக்கு உறைத்தது.
வெளியே இறங்கி அபார்ட்மென்ட் முழுவதும் தேடியாகிவிட்டது.
அக்கம்பக்கம், அபார்ட்மென்ட் வாட்ச்மேன் யாரும் சீஸரை கவனிக்கவில்லை என்பதால், காரை எடுத்துக் கொண்டு தெரு, மெயின் ரோடு எல்லாம் தேடியும் கிடைக்காமல்... ஒவ்வொரு தெருவாய் பதைபதைப்புடன் தேடிக் கொண்டே வந்தோம்.
சுத்தமாய் ஒரு ரவுண்ட் அடித்து முடித்துவிட்டோம்... சீஸர் கிடைக்கவில்லை.
டேனி வந்ததும் சீஸர் இல்லை என்றால் அழுவானே என்பது ஒருபுறம் இருக்க, அதற்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற பயம் அதிகமாக... என் கணவரும் காரை நிறுத்தி எதிரில் வந்த ஒரு சிறுவனிடம் கேட்டார்.
"தம்பி... இந்தப் பக்கமா ஒரு ப்ரவுன் கலர் நாய் எதையாவதைப் பார்த்தியா.? எங்க நாயைக் காணோம்..!".
என் கணவர் கேட்டு முடித்ததும் அந்தச் சிறுவன் பதிலுக்குச் சிரித்தபடியே அவரிடம் கேட்டான்.
"எந்த நாய் அங்கிள்... ரொம்ப நேரமா உங்க கார் பின்னாடியே ஓடி வந்திட்டிருக்கே, அந்த நாயவா தேடறீங்க..?".
.
.
.
என் மகன் டேனியின் செல்ல நாய்குட்டி சீஸரை எங்கே விடுவது என்று ஒரு மஹா குழப்பம் இருந்தது.
கோவையில் நாங்கள் இருந்த வீடு தனி வீடு; அதனால், நாய் வளர்ப்பது பெரிய இடைஞ்சலாய் இல்லை.
ஆனால், நாங்கள் சென்னையில் பார்த்திருப்பதோ ஒரு நெருக்கமான அபார்ட்மென்ட்; அதில், சீஸரை வைத்திருப்பது மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்குமே என்பது எனக்கும் கணவருக்கும் யோசனையாய் இருந்தது.
என்றாலும், டேனி சீஸர் இல்லாமல் ஏங்கிப் போய்விடுவானே என்று நாயையும் எங்களுடனேயே அழைத்து வந்துவிட்டோம்.
சென்னை வந்து ரொம்ப நாள் ஆனபின்னாலும்கூட வீட்டுக்குள்ளேயே இருப்பது, சீஸருக்குப் பிடிக்காத விஷயமாகவே இருந்து வந்தது.
சின்னதாய் கதவைத் திறந்தாலும் வெளியே ஓடிவிடுவது அதன் குணமாய் இருந்தது.
அப்படித்தான் ஒரு சனிக்கிழமை நடந்தது.
டேனி ஸ்கூலுக்குப் போயிருந்தான்.
நான் கேஸ் வந்திருக்கிறது என்று சமயலறையின் உள்ளே சிலிண்டரை மாற்றிக் கொண்டிருந்தபோது, கதவு திறந்திருக்க அதன் வழியே சீஸர் வெளியே ஓடிவிட்டது.
கேஸ்காரர் வெளியே போய் சற்று நேரத்துக்கு அப்புறம்தான், சீஸர் வீட்டுக்குள் இல்லை என்பதே எங்களுக்கு உறைத்தது.
வெளியே இறங்கி அபார்ட்மென்ட் முழுவதும் தேடியாகிவிட்டது.
அக்கம்பக்கம், அபார்ட்மென்ட் வாட்ச்மேன் யாரும் சீஸரை கவனிக்கவில்லை என்பதால், காரை எடுத்துக் கொண்டு தெரு, மெயின் ரோடு எல்லாம் தேடியும் கிடைக்காமல்... ஒவ்வொரு தெருவாய் பதைபதைப்புடன் தேடிக் கொண்டே வந்தோம்.
சுத்தமாய் ஒரு ரவுண்ட் அடித்து முடித்துவிட்டோம்... சீஸர் கிடைக்கவில்லை.
டேனி வந்ததும் சீஸர் இல்லை என்றால் அழுவானே என்பது ஒருபுறம் இருக்க, அதற்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற பயம் அதிகமாக... என் கணவரும் காரை நிறுத்தி எதிரில் வந்த ஒரு சிறுவனிடம் கேட்டார்.
"தம்பி... இந்தப் பக்கமா ஒரு ப்ரவுன் கலர் நாய் எதையாவதைப் பார்த்தியா.? எங்க நாயைக் காணோம்..!".
என் கணவர் கேட்டு முடித்ததும் அந்தச் சிறுவன் பதிலுக்குச் சிரித்தபடியே அவரிடம் கேட்டான்.
"எந்த நாய் அங்கிள்... ரொம்ப நேரமா உங்க கார் பின்னாடியே ஓடி வந்திட்டிருக்கே, அந்த நாயவா தேடறீங்க..?".
.
.
.
Labels:
அபார்ட்மென்ட்,
குழப்பம்,
கேஸ்,
சீஸர்,
ப்ரவுன்,
மஹா,
மெயின்,
ரவுண்ட்
9
comments
Tuesday, November 23, 2010
மாணவன் குறும்பு
அப்போது நான் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம்.
நான் பள்ளியின் பத்தாம் வகுப்பு டீச்சர் என்பதோடு தமிழ்ப்பாடமும் எடுத்து கொண்டிருந்தேன்.
பள்ளிக்கூடத்தில் மாணவர்களை எல்லாம் ஒன்றாய் உட்கார வைத்து, அந்த வருட க்ரூப் ஃபோட்டோ எல்லா வகுப்புக்கும் எடுத்தாகிவிட்டது.
ப்ரிண்ட் வந்ததும் ஒவ்வொரு வகுப்பிலும் எல்லா மாணவர்களிடமும் ஆளுக்கொரு ப்ரிண்ட்டாவது விற்றுவிட வேண்டும் என்று நிர்வாகம் வகுப்பு ஆசிரியர்களிடம் சொல்லியிருந்தது.
ஆனால், நான் வகுப்புக்கு போனதும்தான் தெரிந்தது... நிறைய மாணவர்களுக்கு ஃபோட்டோவை வாங்கும் எண்ணமே இல்லை என்பது.
எனவே, அவர்களை வாங்கத் தூண்டும் விதமாய்ப் பேசத் துவங்கினேன்.
"ஸ்டூடன்ட்ஸ்... ஒரு செகன்ட் யோசிச்சுப் பாருங்க. நாமெல்லாம் பெரியவங்கானதுக்கு அப்புறம், பெரிய பெரிய பதவிக்கெல்லாம் போய், ஒருநாள் இந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது ஒரு சந்தோசம் வருமே..! யார்கிட்டயாவது இதைக் காட்டும்போது நாம சொல்லுவோமே, "இதோ இவன் ரமேஷ்... இப்ப இவன் பெரிய வக்கீல், இதோ இவன் ஜெய்... இப்ப இவன் பெரிய டாக்டர்.. இதோ இவங்க என் க்ளாஸ் டீச்சர், இவங்க.."
நான் சொல்லச் சொல்ல இடைமறித்து. ஏதோ ஒரு குறும்புக்கார ஸ்டூடண்டின் அந்தக் குரல் கேட்டது.
"இப்ப இறந்துட்டாங்க..!".
.
.
.
நான் பள்ளியின் பத்தாம் வகுப்பு டீச்சர் என்பதோடு தமிழ்ப்பாடமும் எடுத்து கொண்டிருந்தேன்.
பள்ளிக்கூடத்தில் மாணவர்களை எல்லாம் ஒன்றாய் உட்கார வைத்து, அந்த வருட க்ரூப் ஃபோட்டோ எல்லா வகுப்புக்கும் எடுத்தாகிவிட்டது.
ப்ரிண்ட் வந்ததும் ஒவ்வொரு வகுப்பிலும் எல்லா மாணவர்களிடமும் ஆளுக்கொரு ப்ரிண்ட்டாவது விற்றுவிட வேண்டும் என்று நிர்வாகம் வகுப்பு ஆசிரியர்களிடம் சொல்லியிருந்தது.
ஆனால், நான் வகுப்புக்கு போனதும்தான் தெரிந்தது... நிறைய மாணவர்களுக்கு ஃபோட்டோவை வாங்கும் எண்ணமே இல்லை என்பது.
எனவே, அவர்களை வாங்கத் தூண்டும் விதமாய்ப் பேசத் துவங்கினேன்.
"ஸ்டூடன்ட்ஸ்... ஒரு செகன்ட் யோசிச்சுப் பாருங்க. நாமெல்லாம் பெரியவங்கானதுக்கு அப்புறம், பெரிய பெரிய பதவிக்கெல்லாம் போய், ஒருநாள் இந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது ஒரு சந்தோசம் வருமே..! யார்கிட்டயாவது இதைக் காட்டும்போது நாம சொல்லுவோமே, "இதோ இவன் ரமேஷ்... இப்ப இவன் பெரிய வக்கீல், இதோ இவன் ஜெய்... இப்ப இவன் பெரிய டாக்டர்.. இதோ இவங்க என் க்ளாஸ் டீச்சர், இவங்க.."
நான் சொல்லச் சொல்ல இடைமறித்து. ஏதோ ஒரு குறும்புக்கார ஸ்டூடண்டின் அந்தக் குரல் கேட்டது.
"இப்ப இறந்துட்டாங்க..!".
.
.
.
Labels:
க்ளாஸ் டீச்சர்,
டாக்டர்,
தூண்டு,
மெட்ரிகுலேஷன்,
வக்கீல்,
ஸ்டூடண்ட்
5
comments
Friday, November 19, 2010
ஒரே ஒரு டால்மேஷன்
தில்லுதுரயின் பையன் '101 டால்மேஷன் ' படம் பார்த்துவிட்டு வந்ததும் அதேபோல் எனக்கும் ஒரு நாய் வேண்டும் என்று ரகளை பண்ண ஆரம்பித்துவிட்டான்.
வெள்ளை உடலில் கருப்பு புள்ளிகளுடன் இருக்குமே, அதுதான் டால்மேஷன்.
அந்தப் படம் 101 டால்மேஷன் நாய்களைப் பற்றிய கதை என்பதால், தில்லுதுரயின் பையன் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி.. 'நாய் உடனே வீட்டுக்கு வந்தால்தான் ஆச்சு' என்று ஒற்றைக் காலில் நின்றான்.
தில்லுதுரயும் ஒவ்வொரு பெட் ஷாப்பாய் அழைந்து கடைசியில், ஒரு குட்டியைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.
ஓரளவு பெரிய குட்டி என்பதால், விலையும் கொஞ்சம் அதிகம்தான்.
ஆனால், மகன் கேட்டதாயிற்றே...!
நாய்க்குட்டி நன்றாகத்தான் வளர்ந்துவந்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்ததும்தான் பிரச்சினை ஆரம்பித்தது.
நாய் ஏதோ வியாதி கண்டு, சினிமா ஹீரோபோல் ரத்தரத்தமாய் வாந்தி எடுக்க ஆரம்பித்தது.
என்னென்ன வெட்னரி டாக்டர் எங்கெங்கே இருக்கிறார்களோ, அங்கெல்லாம் போய்க் காட்டியாகிவிட்டது.
நாய் தேறிய பாட்டைக் காணோம்... பத்தாதற்கு வியாதி இன்னும் முற்றிக் கொண்டே போனது.
பையனின் அழுகை தாங்காமல், இன்னும் புதிய டாக்டர்களைத் தேடி அழையும் போதுதான் தில்லுதுரைக்கு நண்பர் ராஜாவின் ஞாபகம் வந்தது.
ஒருமுறை, அவர் வீட்டு நாய்க்கும் இதேபோல் பிரச்சினை என்று சொன்னது ஞாபகம் வந்ததும்... உடனே அவருக்கு போன் செய்து கேட்டார்.
"அந்த வியாதிக்கு உன் நாய்க்கு என்ன மருந்து கொடுத்தே ராஜா..?".
ராஜா மறுமுனையில் சொன்னார்.
"டர்பன்டைன் கொடுத்தேன்..!".
தில்லுதுர உடனே உற்சாகமாய் 'நன்றி' சொல்லிவிட்டு, கடைவீதி போய் தேடித் தேடி டர்பன்டைன் வாங்கி வந்து நாய்க்குக் கொடுக்க ஆரம்பித்தார்.
ரெண்டே நாள்... டால்மேஷனின் நிலைமை இன்னும் மோசமாகி இறந்தேபோய் விட்டது.
ரொம்பவும் சோகத்துடன் மறுபடி ராஜாவுக்கு போன் செய்தார் தில்லுதுர.
"ராஜா... நீ சொன்னபடி நாய்க்கு டர்பன்டைன் கொடுத்தேன். ஆனாலும், நாய் ரெக்கவர் ஆகல... செத்துப் போச்சு..!".
தில்லுதுர சொன்னதும் மறுமுனையில் ராஜா கூலாய்ச் சொன்னார்.
"ஆமா நண்பா... என் நாய்கூட செத்துப் போச்சு..!".
.
.
.
வெள்ளை உடலில் கருப்பு புள்ளிகளுடன் இருக்குமே, அதுதான் டால்மேஷன்.
அந்தப் படம் 101 டால்மேஷன் நாய்களைப் பற்றிய கதை என்பதால், தில்லுதுரயின் பையன் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி.. 'நாய் உடனே வீட்டுக்கு வந்தால்தான் ஆச்சு' என்று ஒற்றைக் காலில் நின்றான்.
தில்லுதுரயும் ஒவ்வொரு பெட் ஷாப்பாய் அழைந்து கடைசியில், ஒரு குட்டியைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.
ஓரளவு பெரிய குட்டி என்பதால், விலையும் கொஞ்சம் அதிகம்தான்.
ஆனால், மகன் கேட்டதாயிற்றே...!
நாய்க்குட்டி நன்றாகத்தான் வளர்ந்துவந்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்ததும்தான் பிரச்சினை ஆரம்பித்தது.
நாய் ஏதோ வியாதி கண்டு, சினிமா ஹீரோபோல் ரத்தரத்தமாய் வாந்தி எடுக்க ஆரம்பித்தது.
என்னென்ன வெட்னரி டாக்டர் எங்கெங்கே இருக்கிறார்களோ, அங்கெல்லாம் போய்க் காட்டியாகிவிட்டது.
நாய் தேறிய பாட்டைக் காணோம்... பத்தாதற்கு வியாதி இன்னும் முற்றிக் கொண்டே போனது.
பையனின் அழுகை தாங்காமல், இன்னும் புதிய டாக்டர்களைத் தேடி அழையும் போதுதான் தில்லுதுரைக்கு நண்பர் ராஜாவின் ஞாபகம் வந்தது.
ஒருமுறை, அவர் வீட்டு நாய்க்கும் இதேபோல் பிரச்சினை என்று சொன்னது ஞாபகம் வந்ததும்... உடனே அவருக்கு போன் செய்து கேட்டார்.
"அந்த வியாதிக்கு உன் நாய்க்கு என்ன மருந்து கொடுத்தே ராஜா..?".
ராஜா மறுமுனையில் சொன்னார்.
"டர்பன்டைன் கொடுத்தேன்..!".
தில்லுதுர உடனே உற்சாகமாய் 'நன்றி' சொல்லிவிட்டு, கடைவீதி போய் தேடித் தேடி டர்பன்டைன் வாங்கி வந்து நாய்க்குக் கொடுக்க ஆரம்பித்தார்.
ரெண்டே நாள்... டால்மேஷனின் நிலைமை இன்னும் மோசமாகி இறந்தேபோய் விட்டது.
ரொம்பவும் சோகத்துடன் மறுபடி ராஜாவுக்கு போன் செய்தார் தில்லுதுர.
"ராஜா... நீ சொன்னபடி நாய்க்கு டர்பன்டைன் கொடுத்தேன். ஆனாலும், நாய் ரெக்கவர் ஆகல... செத்துப் போச்சு..!".
தில்லுதுர சொன்னதும் மறுமுனையில் ராஜா கூலாய்ச் சொன்னார்.
"ஆமா நண்பா... என் நாய்கூட செத்துப் போச்சு..!".
.
.
.
Labels:
இம்ப்ரஸ்,
குட்டி,
டர்பன்டைன்,
டால்மேஷன்,
வாந்தி,
ஹீரோ
3
comments
Thursday, November 18, 2010
தில்லுதுரயும் டாக்ஸியும்
தில்லுதுர அன்று அலுவலக வேலையாய் ஒரு மீட்டிங்கிற்காக கோவை வந்திருந்தார்.
ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவர், போகும் இடத்தைச் சொல்லி ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறி பின் சீட்டில் அமர்ந்ததும், தனது லேப்டாப்பைப் பிரித்து உட்கார்ந்தார்.
கோவையில் வேலை என்றாலும், தனது அலுவலகம் சம்பந்தமான உத்தரவுகளை சென்னைக்கும் இன்னபிற இடங்களுக்கும் மெயிலில் அனுப்ப ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.
திடீரென மீட்டிங்கிற்கு முன்பு 'சாப்பிட்டு விடலாம்' என்று தோன்றவே, 'நல்ல ஹோட்டல் எங்கே இருக்கிறது..' என்று கேட்பதற்காக டாக்ஸி டிரைவர் தோளைத் தொட்டார்.
டிரைவரின் தோளைத் தொட்டதுதான் தாமதம்.
அதிர்ந்துபோய் திக்கென ஆன டிரைவர், காரை சட்டென்று தாறுமாறாய் கண்டபடி ஓட்ட ஆரம்பித்தார்.
எதிரே வந்த ஒரு லாரியில் மோத இருந்து காரை ஒடித்த டிரைவர், அடுத்து ஒரு ஆட்டோ மேல் மோத இருந்து திருப்பி, மேடு பள்ளத்தில் எகிறி, ஒரு மரத்தில் கிட்டத்தட்ட மோதும் நிலையில் சட்டென்று ஒரு சடன் பிரேக்கைப் போட்டு நிறுத்தினார்.
தில்லுதுரயின் நெஞ்சு படவென்று அடிக்க ஆரம்பித்து, ஓயவே ஐந்து நிமிடம் ஆகியது.
டிரைவரோ நெஞ்சைப் பிடித்தபடி கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவர், நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத் திரும்பி மெதுவான குரலில் தில்லுதுரயிடம் கேட்டார்.
"என்ன சார், இப்படிப் பண்ணிட்டீங்க..?".
தில்லுதுர மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார்.
"சாரிப்பா... நான் தான் தப்பு பண்ணிட்டேன்..!".
இப்போது லேசாய்ப் புன்னகைத்த டிரைவர், தில்லுதுரயிடம் சொன்னார்.
"இல்ல சார்... இதுல உங்க தப்பு ஒண்ணுமில்ல. எல்லாம் என் தப்புதான். நான் இப்பத்தான் புதுசா டாக்ஸி ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். இதுக்கு முன்னால பத்து வருசமா ஹாஸ்பிடல்ல டெட்பாடிகளை ஏற்றிச் செல்லும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன்..!".
.
.
.
ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவர், போகும் இடத்தைச் சொல்லி ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறி பின் சீட்டில் அமர்ந்ததும், தனது லேப்டாப்பைப் பிரித்து உட்கார்ந்தார்.
கோவையில் வேலை என்றாலும், தனது அலுவலகம் சம்பந்தமான உத்தரவுகளை சென்னைக்கும் இன்னபிற இடங்களுக்கும் மெயிலில் அனுப்ப ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.
திடீரென மீட்டிங்கிற்கு முன்பு 'சாப்பிட்டு விடலாம்' என்று தோன்றவே, 'நல்ல ஹோட்டல் எங்கே இருக்கிறது..' என்று கேட்பதற்காக டாக்ஸி டிரைவர் தோளைத் தொட்டார்.
டிரைவரின் தோளைத் தொட்டதுதான் தாமதம்.
அதிர்ந்துபோய் திக்கென ஆன டிரைவர், காரை சட்டென்று தாறுமாறாய் கண்டபடி ஓட்ட ஆரம்பித்தார்.
எதிரே வந்த ஒரு லாரியில் மோத இருந்து காரை ஒடித்த டிரைவர், அடுத்து ஒரு ஆட்டோ மேல் மோத இருந்து திருப்பி, மேடு பள்ளத்தில் எகிறி, ஒரு மரத்தில் கிட்டத்தட்ட மோதும் நிலையில் சட்டென்று ஒரு சடன் பிரேக்கைப் போட்டு நிறுத்தினார்.
தில்லுதுரயின் நெஞ்சு படவென்று அடிக்க ஆரம்பித்து, ஓயவே ஐந்து நிமிடம் ஆகியது.
டிரைவரோ நெஞ்சைப் பிடித்தபடி கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவர், நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத் திரும்பி மெதுவான குரலில் தில்லுதுரயிடம் கேட்டார்.
"என்ன சார், இப்படிப் பண்ணிட்டீங்க..?".
தில்லுதுர மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார்.
"சாரிப்பா... நான் தான் தப்பு பண்ணிட்டேன்..!".
இப்போது லேசாய்ப் புன்னகைத்த டிரைவர், தில்லுதுரயிடம் சொன்னார்.
"இல்ல சார்... இதுல உங்க தப்பு ஒண்ணுமில்ல. எல்லாம் என் தப்புதான். நான் இப்பத்தான் புதுசா டாக்ஸி ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். இதுக்கு முன்னால பத்து வருசமா ஹாஸ்பிடல்ல டெட்பாடிகளை ஏற்றிச் செல்லும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன்..!".
.
.
.
Labels:
அமைதி,
உத்தரவு,
கோவை,
பெருமூச்சு,
மீட்டிங்,
மேடு,
லேப்டாப்,
ஹோட்டல்
6
comments
Subscribe to:
Posts (Atom)