Showing posts with label கபாலி. Show all posts
Showing posts with label கபாலி. Show all posts

Friday, February 5, 2010

கபாலி இன் சொர்க்கம்


கேடி கபாலி இறந்ததும் மேலே போனான்.
சி.கு. (சித்திரகுப்தன்) அவன் கணக்குகளை எல்லாம் பார்த்துவிட்டு, "தம்பி கபாலி... உன்னோட கணக்கெல்லாம் பாத்ததுல உனக்கு நரகம்தான் வருது. ஆனாலும் நீ ஆடி மாசம் ஆஃப் சீசன்ல இங்க வந்திருக்கறதால உனக்கொரு ஆஃப்பர் இருக்கு. நீ சொர்க்கம் போறதா, இல்ல நரகம் போறதானு நீயே டிசைட் பண்ணிக்கலாம். என்ன சொல்ற..?" என்றார்.
கபாலி யோசிக்கவேயில்லை, "சொர்க்கம்தான் என்னோட சாய்ஸ்..." என்று சொல்லிவிட்டான்.
"சரி வா..." என்று சி.கு. அவனை சொர்க்கத்திற்கு கூட்டிக்கொண்டு போகும் வழியில்தான் கபாலி அந்த அறையைப் பார்த்தான்.
சுத்தமாய் சத்தம் நுழையாத அந்தக் கண்ணாடி அறைக்குள் அவனுடைய தோஸ்த்துகள் எல்லாம் டிவி, டான்ஸ் பார்த்துக் கொண்டும் சீட்டாட்டம் ஆடிக்கொண்டும் ரொம்ப குஷாலாய் இருப்பதைப் பார்த்து, " மிஸ்டர். சினாகுனா... இது என்ன இடம்..?" என்று கேட்டான்.
சி.கு., " இது நரகம் கபாலி.."என்றார்.
கபாலி யோசித்துப் பார்த்தான், ' நரகமொன்னும் நாம நெனச்ச மாதிரி அவ்வளவு கஷ்டமாய் தெரியல... நம்ம ஃபிரண்ட்ஸெல்லாம் வேற இங்க நிறைய இருக்காங்க.. பேசாம இங்கயே தங்கிடலாம்'னு முடிவு பண்ணி சி.கு.கிட்ட சொல்லிவிட்டான்.
"இதப்பாரு மிஸ்டர். சினாகுனா... நான் சொர்க்கத்துக்குப் போகல...இங்கயே தங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்...".
சி.கு., "ஓகே...உன் இஷ்டம்..."னு சொல்லிவிட்டு கிளம்பியதும் கபாலி அந்த அறைக்குள் ஆரவாரமாய் நுழைந்தான்.
அதே நேரம் ஒருவன் மறு கதவு வழியாய் கையில் சவுக்குடன் நுழைந்து, "ம்ம்ம்........கிளம்புங்க, கிளம்புங்க....." என்று சவுக்கைச் சொடுக்க எல்லோரும் எப்போதும் போல் நரகத்தின் தண்டனைகளை அனுபவிக்கத் தொடங்கினார்கள்.
கபாலி நண்பனிடம் விசயத்தைச் சொன்னபோது அவன் சொன்னான்.
" டீ பிரேக்ல வந்து மாட்டிக்கிட்டியே தோஸ்த்து..."