Showing posts with label அசிங்கமான மனைவி. Show all posts
Showing posts with label அசிங்கமான மனைவி. Show all posts

Thursday, April 7, 2011

அசிங்கமான மனைவி






தில்லுதுர வாழ்க்கையில் கடினமாகப் போராடிக் கொண்டிருந்த நேரம்.

எங்கு தேடினாலும் வேலை கிடைக்கவில்லை.

வேலை இல்லாததால் வருமானம் இன்றிப்போக, திருமணமும் தள்ளிக்கொண்டே போனது.

அவருக்கு உறவில் யாரும் பெண் கொடுக்கவும் தயாராயில்லை.

திருமண வயது தாண்டிக் கொண்டிருந்தது பற்றிய கவலையில் சுற்றிக் கொண்டிருக்கும்போது தான் தில்லுதுர ஒரு தினசரியில் அந்த விளம்பரத்தைப் பார்த்தார்.

ஒரு நல்ல பணக்காரப் பெண்ணுக்கு ஏற்ற வரன் கேட்டு வந்திருந்தது அந்த விளம்பரம்.

போய்ப் பார்த்தால், அந்தப் பெண்ணோ பார்க்கச் சகிக்க முடியாத அவலட்சணமாயிருந்தாள்.

'எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேண்டாம்..' என்று பெண்பார்க்க வந்தவன் எல்லாம் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே...

'ஒகே..' சொன்னது தில்லுதுர மட்டும்தான்.

மஹாராஜா போல் தில்லுதுரயை யாரும் வேண்டாம் என்பார்களா என்ன..?

அந்தக் கோடீஸ்வரியும் தில்லுதுரயை செலெக்ட் செய்து விட்டாள்.

திருமணம் எல்லோரும் ஆச்சர்யப் படும்படி இனிதே முடிந்தது.

'பணத்துக்காக இப்படி ஒரு பெண்ணைக் கட்டுவானா ஒருவன்..?' என்ற நண்பர்களின் கேலிப் பார்வைகளை தில்லுதுர கண்டுகொள்ளவேயில்லை.

அதுதான் அப்படியென்றால், திருமணம் முடிந்து எங்கே சென்றாலும் அந்த அவலட்சண மனைவியையும் கையோடு உடன் அழைத்தபடியே சுற்றிக் கொண்டிருந்தான்.

மனைவி இல்லாமல் தில்லுதுரயை வெளியில் பார்ப்பது அபூர்வமாய் இருந்தது.

நண்பர்களுக்கோ இதுதான் ஆச்சர்யமான ஆச்சர்யமாய் இருந்தது.

ஒருநாள் ஒருவன் அதை தில்லுதுரயிடம் கேட்டும் விட்டான்.

"நன்பா... நீ பணத்திற்காகத்தான் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டாயென்பது தெரியும். ஆனால், இந்த அளவுக்கு எங்கே போனாலும் அவளையும் கூடவே கூட்டிக் கொண்டு சுற்றுவதுதான் ஏன் என்று புரியவில்லை..!".

அவன் கேட்டு முடித்ததும் தில்லுதுர சோகமாய்ச் சொன்னான்.

"என் மனைவி கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. நான் அவளை விட்டு எப்பப் பிரிஞ்சு போனாலும் அவ எனக்கு ஒரு முத்தம் கொடுப்பா. பதிலுக்கு நான் அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்கணும். அது எப்படி முடியும் சொல்லு. அதனால, அதிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி அவளையும் கூடக் கூப்பிட்டுக்கிட்டே சுத்தறேன்..!".
.
.
.