Tuesday, August 17, 2010

எல்லாமே இலவசம்

துறவி ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுக்கு பொறுமையைப் பற்றிக் கற்றுக் கொடுக்க ஒரு புதுமையான ஏற்பாடு செய்திருந்தார்.

அவருடைய சிஷ்யர்கள் யாரும் ஒரு வருடத்திற்கு ஊரைவிட்டு வெளியே செல்லக் கூடாது.

அது மட்டுமல்ல... அவருடைய சிஷ்யர்களை யாரும் நிந்தித்தாலோ அடித்தாலோ கோபப் படக்கூடாது.

மேலும், நிந்தித்தவர்களுக்கு அந்த சிஷ்யர்கள் பரிசுப் பணமும் தர வெண்டும்.

அதுவும் இந்த ஊரில் மட்டும்தான்.

சிஷ்யர்கள் ஊருக்குள் வரும்போது அந்த குருவுக்காக அவர்களை வணங்குபவர்கள் எப்படி இருந்தார்களோ அதேபோல் திட்டுபவர்களும் இருந்தார்கள்.

சிஷ்யர்கள் எப்படி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்களோ அதேபோல் திட்டுபவர்களையும் பொறுத்துக் கொண்டதோடு அவர்களுக்கு குருவின் சொல்படி பரிசுப் பணமும் கொடுத்து வந்தார்கள்.

இப்படியே இந்த ஊரில் ஒரு வருடம் கழிந்தது.

சிஷ்யர்கள் இப்போது பக்கத்து ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்தார்கள்.

அங்கேயும் இவர்களிடம் வாழ்த்துப் பெற வந்தவர்களும் இருந்தார்கள்... திட்ட வந்தவர்களும் இருந்தார்கள்.

ஆனால், வந்தவர்கள் எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அதைச் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டு சிரித்தபடியே இருப்பதைப் பார்த்தவர்கள், 'இவர்களுக்குத்தான் எவ்வளவு ஞானம்...?' என்று வியந்து போனார்கள்.

இதை பார்த்துக் கொண்டே இருந்த ஒருவர், ஒருநாள் தாங்க முடியாமல் ஒரு சிஷ்யரிடம் கேட்டார்.

"எப்படி உங்களால் இத்தனை திட்டுக்களையும் கோபம் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடிகிறது...?".

அதற்கு அந்த சிஷ்யர், அவரிடம் புன்னகை மாறாமல் சொன்னார்.

"முன்பெல்லாம் நாங்கள் இதற்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தோம்... இப்போதெல்லாம் இது எங்களுக்கு இலவசமாகவே கிடைக்கிறது...."

ஞானம் பெறுவது எவ்வளவு சுலபம் பாருங்கள்...?
.
.
.

3 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ha ha ha.. enna kodumai sir ithu...

வரதராஜலு .பூ said...

அற்புதம்

VELU.G said...

ஆஹா நல்ல ஞானம்ங்க

அருமை அருமை

Post a Comment