Monday, August 2, 2010

திருடன் போலீஸ்

பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு விடிந்த கொஞ்ச நேரத்தில் அந்த போன் வந்தது.
போனை ஒரு போலிஸ்காரர் எடுத்தார்.
"ஹலோ...!".
மறுமுனையில் குரல் ரகசியமாய்ச் சொன்னது.
"சார்... எங்கள் தெருவில் மகேஷ் வீட்டில் பெரிய பெரிய மரக்கட்டைகளுக்குள்ளே வைத்து போதைப் பொருள்களைக் கடத்துகிறார்கள்....!"
"தகவலுக்கு நன்றி. அந்த வீட்டின் முகவரி சொல்ல முடியுமா...?"
அந்தக் குரல் சொல்லச்சொல்ல போலீஸ்காரர் குறித்துக் கொண்டார்.
"சரி... நீங்கள் யார் எனச் சொல்ல முடியுமா..?".
போன் டக்கென்று துண்டிக்கப்பட்டது.
சற்று நேரத்தில் போலீஸ் அந்த வீட்டை ரவுண்ட் செய்தது.
நேராய் வீட்டைச் சோதனையிட்ட போலீஸ், பின்பக்கம் இருந்த பெரும் பெரும் மரக்கட்டைகளைக் கண்டுபிடித்தது.
உஷாரான போலீஸ் டீம்... ஏற்கனவே கொண்டு வந்திருந்த கோடாரிகளை உபயோகப்படுத்தி எல்லா மரக்கட்டைகளையும் துண்டு துண்டாக வெட்டியெறிந்தது.
கடைசிக் கட்டை வரைக்கும் துண்டாடிய பிறகும் போதைப் பொருள் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாத போலீஸ் மகேஷிடம் சாரி சொல்லிவிட்டுக் கிளம்பியது.
போலீஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் மகேஷுக்கு போன் வந்தது.
"மகேஷ்.. நான் தினகர் பேசறேன். உங்க வீட்டுக்குப் போலீஸ் வந்ததா...?"
மகேஷ் பதில் சொன்னான்.
"ஆமாம்...!".
"கட்டைகளைப் பிளந்ததா...?".
"ஆமாம்...!".
சொன்னதும் மறுமுனையில் குரல் புன்னகையுடன் சொன்னது.
"வெரிகுட்,இனி இப்ப உன்னுடைய முறை.!நீ போன் பண்ணு... எனக்கு என்னோட தோட்டத்து மண்ணை உழுதுவிட வேண்டும்...!".

3 comments:

Post a Comment