அன்று தில்லுதுர தனது நிறுவனத்தை நடத்தும் ஏரியாவின், ஓனர்ஸ் அசோசியேஷன் மெம்பர்கள் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள்.
ஓனர்ஸ் அசோசியேஷனுக்கு இதுவரை ஒரு பைசா கூடத் தராத தில்லுதுரயிடமிருந்து, இந்த முறை ஒரு நல்ல தொகையைப் பெறாமல் போகக் கூடாது என்ற முடிவில் வந்திருந்தார்கள் அவர்கள்.
தில்லுதுரயின் டேபிளுக்கு வந்ததும் அவர்களில் ஒருவர் ஆரம்பித்தார்.
"தலைவரே... நம்மளோடது வருஷத்துக்கு 50கோடி டர்ன் - ஓவர் பண்ணற கம்பெனி. ஆனாலும், இதுவரை நீங்க ஓனர்ஸ் அசோசியேஷனுக்கு எதுவும் உதவி செய்யல.! அதனால, இந்தத் தடவை நீங்க எதாவது ஒரு பெரிய தொகைக்கு செக் கொடுத்தே ஆகணும்..!".
கறாராகச் சொன்னவரை, கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார் தில்லுதுர.
"என் வருமானத்தைப் பத்திச் சொல்லறீங்களே... என் அம்மா பத்து வருஷமா படுத்த படுக்கையா இருந்து போன மாசம்தான் ஹாஸ்பிடலை விட்டு வந்தாங்க.! அவங்களுக்கு எத்தனை கோடி செலவாச்சுனு உங்க யாருக்காவது தெரியுமாப்பா..?".
வந்தவர்கள் தெரியாது என்று மெல்லத் தலையாட்டினார்கள்.
தில்லுதுர தொடர்ந்தார்.
"என் தம்பி.. கண்ணு தெரியாம, கால் நடக்க முடியாம இருந்து ஆறு மாசம் முன்னாடி அவனுக்கு ஆப்பரேஷன் செஞ்சு சரி செஞ்சோமே.... அதுக்கு எத்தனை பணம் செலவாச்சுனு தெரியுமா உங்களுக்கு..?".
வந்தவர்கள் இன்னும் சங்கடத்தோடு தெரியாது என்று மறுபடி தலையாட்டினார்கள்.
தில்லுதுர தனது கோபம் ஆறாமல் தொடர்ந்தார்.
"என் தங்கச்சியோட கணவர், ரெண்டு மாசம் முன்னாடி ஒரு ரோட் ஆக்ஸிடென்ட்ல இறந்து போனாரு. என் தங்கச்சி மூணு கைக்குழந்தையோட கையில காசு இல்லாம கஷ்டப்படறாளே... அவளுக்கு மாசம் என்ன செலவாகுது தெரியுமா உங்களுக்கு..?".
வந்தவர்கள் மன்னிப்புக் கோரும் வகையில்,"மன்னிச்சுக்கங்க தில்லுதுர... எங்களுக்கு இது எதுவுமே தெரியாது...!'" என்றதும், தில்லுதுர சற்றே கோபம் தணிந்த குரலில் சொன்னார்.
"இவ்வளவு கஷ்டப்படற அவங்களுக்கே நான் இதுவரை ஒரு பைசா தந்ததில்ல. நீங்க யாருன்னு உங்களுக்கு கொடுக்கறதுனு சொல்லுங்க...!"
.
.
.
Monday, April 9, 2012
தில்லுதுரயின் குடும்பக் கதை
Labels:
அசோசியேஷன்,
அம்மா,
அனுபவம்,
கதை,
குடும்பம்,
குட்டிக்கதை,
கோடி,
கோபம்,
நகைச்சுவை
9
comments
Monday, April 2, 2012
இப்ப என்ன செய்வீங்க.?
(நகைச்சுவைதான் என்றாலும்... ஒரு மனிதனாக, ஒரு இக்கட்டான சமயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் எனத் தெரிந்து கொள்ள கேட்கப்படும் கற்பனைக் கதை இது. எனவே, வரிவரியாக கவனமாகப் படித்து பதில் சொல்லவும்)
நீங்கள் ஒரு தமிழர்.
அதிலும் 'மயக்கம் என்ன..?' தனுஷ் போல ஒரு அற்புதமான ஃபோட்டோகிராபர்.
நீங்கள் இப்போது ஒரு பத்திரிக்கை சார்பாக, கடலில் சூரியன் மறைவதைப் பார்க்க வந்திருக்கும் பிரதமரை ஃபோட்டோ எடுக்க வந்திருக்கிறீர்கள்.
கடற்கரையில் பிரதமருக்காக காத்து நிற்கும்போது ஒரு சூறாவளி அடிக்கிறது.
சூறாவளி என்றால் கடும் சூறாவளி.
நீங்கள் இப்போது அந்த சூறாவளியின் சரியான மையத்தில் நிற்கிறீர்கள்.
வீடும் மரமும் மரங்களும் கால்நடைகளும் கடல் நீரும் இப்போது உங்களைச் சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது.
உங்களால் இப்போது செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்றாலும், இயற்கையின் பெரும்பலத்தை உணர்த்தும் அந்த அற்புதமான தருணத்தை அழகழகான ஃபோட்டோக்களாய் கேமராவில் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்.
அப்போதுதான், அந்தச் சூறாவளியின் நடுவே உயிருக்காக போராடும் அந்த மனிதனைப் பார்க்கிறீர்கள்.
காற்றும் நீரும் சகதியும் அந்த மனிதனை சுழற்றி எறிய எறிய பக்கத்தில் சென்ற நீங்கள் அந்த மனிதனை எங்கோ பார்த்திருப்பதாய் உணர்கிறீர்கள்.
ஓ... அது நமது பிரதமர்.!
இப்போது உங்களுக்கு ரெண்டு வாய்ப்பு இருக்கிறது.
ஒன்று உங்கள் தேசத்தின் பிரதமர் உயிரைக் காக்கும் அரிய வாய்ப்பு.
அல்லது ஒரு பவர்ஃபுல் மனிதரின் கடைசி நிமிடத்தை ஃபோட்டோவாய் பதிவு செய்ததற்காக, ஃபோட்டோவின் ஆஸ்கார் போன்ற புலிட்சர் விருது.
இப்போது தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய தருணம்.
தயவுசெய்து இந்தக் கேள்விக்கு நியாயமான பதிலைச் சொல்லுங்கள்.
"நீங்கள் இப்போது இந்தத் தருணத்தில் இதைப் பதிவு செய்ய கலர் ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா... இல்லை, காலம் கடந்து நிற்க வேண்டும் என்பதற்காக கருப்பு வெள்ளை ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா.?".
.
.
.
நீங்கள் ஒரு தமிழர்.
அதிலும் 'மயக்கம் என்ன..?' தனுஷ் போல ஒரு அற்புதமான ஃபோட்டோகிராபர்.
நீங்கள் இப்போது ஒரு பத்திரிக்கை சார்பாக, கடலில் சூரியன் மறைவதைப் பார்க்க வந்திருக்கும் பிரதமரை ஃபோட்டோ எடுக்க வந்திருக்கிறீர்கள்.
கடற்கரையில் பிரதமருக்காக காத்து நிற்கும்போது ஒரு சூறாவளி அடிக்கிறது.
சூறாவளி என்றால் கடும் சூறாவளி.
நீங்கள் இப்போது அந்த சூறாவளியின் சரியான மையத்தில் நிற்கிறீர்கள்.
வீடும் மரமும் மரங்களும் கால்நடைகளும் கடல் நீரும் இப்போது உங்களைச் சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது.
உங்களால் இப்போது செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்றாலும், இயற்கையின் பெரும்பலத்தை உணர்த்தும் அந்த அற்புதமான தருணத்தை அழகழகான ஃபோட்டோக்களாய் கேமராவில் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்.
அப்போதுதான், அந்தச் சூறாவளியின் நடுவே உயிருக்காக போராடும் அந்த மனிதனைப் பார்க்கிறீர்கள்.
காற்றும் நீரும் சகதியும் அந்த மனிதனை சுழற்றி எறிய எறிய பக்கத்தில் சென்ற நீங்கள் அந்த மனிதனை எங்கோ பார்த்திருப்பதாய் உணர்கிறீர்கள்.
ஓ... அது நமது பிரதமர்.!
இப்போது உங்களுக்கு ரெண்டு வாய்ப்பு இருக்கிறது.
ஒன்று உங்கள் தேசத்தின் பிரதமர் உயிரைக் காக்கும் அரிய வாய்ப்பு.
அல்லது ஒரு பவர்ஃபுல் மனிதரின் கடைசி நிமிடத்தை ஃபோட்டோவாய் பதிவு செய்ததற்காக, ஃபோட்டோவின் ஆஸ்கார் போன்ற புலிட்சர் விருது.
இப்போது தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய தருணம்.
தயவுசெய்து இந்தக் கேள்விக்கு நியாயமான பதிலைச் சொல்லுங்கள்.
"நீங்கள் இப்போது இந்தத் தருணத்தில் இதைப் பதிவு செய்ய கலர் ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா... இல்லை, காலம் கடந்து நிற்க வேண்டும் என்பதற்காக கருப்பு வெள்ளை ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா.?".
.
.
.
Labels:
அனுபவம்,
கதை,
குட்டிக்கதை,
தனுஷ்,
நகைச்சுவை,
பிரதமர்,
மயக்கம் என்ன
9
comments
Thursday, March 29, 2012
தில்லுதுர வீட்டுக்கு வரல
அன்று தில்லுதுர மனைவிக்கு பிறந்த நாள்.
சாயங்காலம் வந்து வெளியே எங்கேயாவது கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிச் சென்ற தில்லுதுர, இரவு பதினோரு மணியாகியும் வீடு வந்து சேரவில்லை.
காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போன மனைவி கடுப்புடன் அவருக்கு ஃபோன் செய்தாள்.
மறுமுனையில் தில்லுதுர ஃபோனை எடுத்ததும், கடுப்பும் வெறுப்பும் உமிழ கோபமாய்க் கேட்டாள்.
"எங்க போய்த் தொலைஞ்சீங்க இந்நேரம் வரைக்கும்.?".
மறுமுனையில் அன்பும் காதலும் வழிய தில்லுதுரயின் குரல் கேட்டது.
"செல்லம்... உனக்கு ஞாபகம் இருக்கா.? அன்னிக்கு ஒருநாள் ஒரு நகைக் கடையில ஒரு வைர நெக்லஸை பாத்துட்டு ஆசையோட கேட்டியே... எங்கிட்ட கூட அன்னிக்கு பணம் இல்லாம இருந்தது. ஆனாலும் அப்ப உங்கிட்டச் சொன்னேனே.... இந்த வைர நெக்லஸ் கண்டிப்பா ஒருநாள் உன் கழுத்துல கிடக்கும்னு.... உனக்கு ஞாபகம் இருக்கா..?".
தில்லுதுரயின் மனைவியின் கோபம் இப்போது காணாமல் போயிருந்தது.
அதே காதலும் புன்னகையும் வழிய ஃபோனில் பதில் சொன்னாள்.
"அதெப்படிங்க மறப்பேன்... நல்லா ஞாபகம் இருக்கு.!".
மனைவி சொன்னதும் தில்லுதுர அதே அன்புடன் தொடர்ந்து சொன்னார்.
"அந்த நகைக்கடைக்கு பக்கத்து இருக்கற டீக்கடையிலதான் இப்ப என் ஃபிரண்ட் ராஜாகூட டீ சாப்டுட்டு இருக்கேன்...!".
.
.
.
சாயங்காலம் வந்து வெளியே எங்கேயாவது கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிச் சென்ற தில்லுதுர, இரவு பதினோரு மணியாகியும் வீடு வந்து சேரவில்லை.
காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போன மனைவி கடுப்புடன் அவருக்கு ஃபோன் செய்தாள்.
மறுமுனையில் தில்லுதுர ஃபோனை எடுத்ததும், கடுப்பும் வெறுப்பும் உமிழ கோபமாய்க் கேட்டாள்.
"எங்க போய்த் தொலைஞ்சீங்க இந்நேரம் வரைக்கும்.?".
மறுமுனையில் அன்பும் காதலும் வழிய தில்லுதுரயின் குரல் கேட்டது.
"செல்லம்... உனக்கு ஞாபகம் இருக்கா.? அன்னிக்கு ஒருநாள் ஒரு நகைக் கடையில ஒரு வைர நெக்லஸை பாத்துட்டு ஆசையோட கேட்டியே... எங்கிட்ட கூட அன்னிக்கு பணம் இல்லாம இருந்தது. ஆனாலும் அப்ப உங்கிட்டச் சொன்னேனே.... இந்த வைர நெக்லஸ் கண்டிப்பா ஒருநாள் உன் கழுத்துல கிடக்கும்னு.... உனக்கு ஞாபகம் இருக்கா..?".
தில்லுதுரயின் மனைவியின் கோபம் இப்போது காணாமல் போயிருந்தது.
அதே காதலும் புன்னகையும் வழிய ஃபோனில் பதில் சொன்னாள்.
"அதெப்படிங்க மறப்பேன்... நல்லா ஞாபகம் இருக்கு.!".
மனைவி சொன்னதும் தில்லுதுர அதே அன்புடன் தொடர்ந்து சொன்னார்.
"அந்த நகைக்கடைக்கு பக்கத்து இருக்கற டீக்கடையிலதான் இப்ப என் ஃபிரண்ட் ராஜாகூட டீ சாப்டுட்டு இருக்கேன்...!".
.
.
.
Labels:
அனுபவம்,
கதை,
கிஃப்ட்,
தில்லுதுர,
நகைச்சுவை,
பிறந்த நாள்,
வைர நெக்லஸ்
13
comments
Monday, March 26, 2012
மாருதிஜென் குரு கொஸாகிபஸபுகல்
100 வருடங்களைத் தாண்டியும் வாழ்ந்தவர் நம்ம மாருதிஜென்குரு கொஸாகிபஸபுகல்.
அவர் தனது இறக்கும் தருவாயில் இருந்தார்.
வாழும் ஒவ்வொரு கணமும், பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இந்த சமூகத்துக்கான செய்தியாய் விளங்கியவர் அவர்.
இறக்கும் தருணத்தில் அவர் சொல்லப்போகும் கடைசிச் செய்திக்காக, அந்த ஊரும் அவரது சிஷ்யர்களும் அவரது மரணப் படுக்கையைச் சுற்றிக் காத்திருந்தார்கள்.
போகும் தருணம் சுகமாய் இருப்பதற்காக, சிஷ்யர்கள் கொடுத்த கடைசி டம்ளர் பாலையும் அருந்த மறுத்துக் கொண்டிருந்தார் குரு கொஸாகி.
பார்த்துக் கொண்டே இருந்த பிரதம சிஷ்யன் தோத்தாங்கோலீஸ்-க்கு அந்த யோசனை வர, டக்கென்று அந்த பால் டம்ளரை எடுத்துக் கொண்டு தனது அந்தரங்க அறைக்கு ஓடினான்.
போன மாதம் தனது நண்பன் கொடுத்த ஃபாரின் விஸ்கியை கப்போர்டிலிருந்து எடுத்து, தேவைக்கு சற்று அதிகமாகவே அந்தப் பாலில் கலந்தான் சிஷ்யன் தோத்தாங்கோலீஸ்.
பிறகு அந்தப் பாலை மரணப் படுக்கையில் இருந்த குரு கொஸாகிபஸபுகலிடம் கொண்டு வந்த சிஷ்யன் தோத்தாங்கோலீஸ், அன்புடன் குருவின் தலையை ஆதுரத்துடன் தடவியவாறு அந்தப் பாலை அருந்தக் கொடுத்தான்.
பிரதம சிஷ்யன் கொடுத்ததால், மறுக்கமுடியாமல் ஒரு மிடறு பாலைக் குடித்த குரு கொஸாகி... அடுத்த மிடறு பாலையும் ஆர்வத்துடன் குடித்தார்.
கொஞ்ச நேரம், கொஞ்சமே கொஞ்ச நேரத்தில் டம்ளரின் கடைசிச் சொட்டுவரை ஆர்வத்துடன் பாலைக் குடித்து முடித்த குருவிடம் சிஷ்யர்கள் கேட்டார்கள்.
"குருவே... இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் இறக்கப் போகிறீர்கள். இந்த தருணத்தில் தாங்கள் எங்களுக்கு சொல்லப் போகும் கடைசிச் செய்தி என்ன.?".
குடித்த பாலின் சுவை தொண்டையில் இருக்க, ஒரு கணம் தான் சாப்பிட்ட பாலை சப்புக் கொட்டியவாறு குரு கொஸாகி தனது கடைசி செய்தியைச் சொன்னார்.
"அந்தப் பசுவை விற்றுவிடாதே.!"
.
.
.
அவர் தனது இறக்கும் தருவாயில் இருந்தார்.
வாழும் ஒவ்வொரு கணமும், பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இந்த சமூகத்துக்கான செய்தியாய் விளங்கியவர் அவர்.
இறக்கும் தருணத்தில் அவர் சொல்லப்போகும் கடைசிச் செய்திக்காக, அந்த ஊரும் அவரது சிஷ்யர்களும் அவரது மரணப் படுக்கையைச் சுற்றிக் காத்திருந்தார்கள்.
போகும் தருணம் சுகமாய் இருப்பதற்காக, சிஷ்யர்கள் கொடுத்த கடைசி டம்ளர் பாலையும் அருந்த மறுத்துக் கொண்டிருந்தார் குரு கொஸாகி.
பார்த்துக் கொண்டே இருந்த பிரதம சிஷ்யன் தோத்தாங்கோலீஸ்-க்கு அந்த யோசனை வர, டக்கென்று அந்த பால் டம்ளரை எடுத்துக் கொண்டு தனது அந்தரங்க அறைக்கு ஓடினான்.
போன மாதம் தனது நண்பன் கொடுத்த ஃபாரின் விஸ்கியை கப்போர்டிலிருந்து எடுத்து, தேவைக்கு சற்று அதிகமாகவே அந்தப் பாலில் கலந்தான் சிஷ்யன் தோத்தாங்கோலீஸ்.
பிறகு அந்தப் பாலை மரணப் படுக்கையில் இருந்த குரு கொஸாகிபஸபுகலிடம் கொண்டு வந்த சிஷ்யன் தோத்தாங்கோலீஸ், அன்புடன் குருவின் தலையை ஆதுரத்துடன் தடவியவாறு அந்தப் பாலை அருந்தக் கொடுத்தான்.
பிரதம சிஷ்யன் கொடுத்ததால், மறுக்கமுடியாமல் ஒரு மிடறு பாலைக் குடித்த குரு கொஸாகி... அடுத்த மிடறு பாலையும் ஆர்வத்துடன் குடித்தார்.
கொஞ்ச நேரம், கொஞ்சமே கொஞ்ச நேரத்தில் டம்ளரின் கடைசிச் சொட்டுவரை ஆர்வத்துடன் பாலைக் குடித்து முடித்த குருவிடம் சிஷ்யர்கள் கேட்டார்கள்.
"குருவே... இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் இறக்கப் போகிறீர்கள். இந்த தருணத்தில் தாங்கள் எங்களுக்கு சொல்லப் போகும் கடைசிச் செய்தி என்ன.?".
குடித்த பாலின் சுவை தொண்டையில் இருக்க, ஒரு கணம் தான் சாப்பிட்ட பாலை சப்புக் கொட்டியவாறு குரு கொஸாகி தனது கடைசி செய்தியைச் சொன்னார்.
"அந்தப் பசுவை விற்றுவிடாதே.!"
.
.
.
Labels:
அனுபவம்,
கதை,
குரு,
கொஸாகிபஸபுகல்,
செய்தி,
தோத்தாங்கோலீஸ்,
நகைச்சுவை,
ஜென்
5
comments
Wednesday, March 21, 2012
3 (தனுஷுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல)
அந்த மருத்துவமனையில் அன்று மூன்று குழந்தைகள் பிறந்தன.
ஒன்று விருந்தினராய் வந்திருந்த சிங்களப் பெண்ணுக்கும், ஒன்று அகதியாய் வந்திருந்த ஈழத் தமிழ் பெண்ணுக்கும், மற்றொன்று தமிழகத்தை சார்ந்த மத்திய கட்சி அரசியல்வாதியின் மனைவிக்குமாய் மொத்தம் மூன்று குழந்தைகள்.
ஆச்சர்யமான ஆச்சர்யமாய்... ஒரே நாளில், ஒரே நேரத்தில், ஒரே அறையில், கிட்டத்தட்ட ஒரே எடையில் பிறந்தன அந்த மூன்று குழந்தைகளும்.
அந்த ஆச்சர்யமே ஒரு பெரிய குழப்பத்தையும் உண்டாக்கி விட்டது மருத்துவமனையில்.
குழந்தைகளை குளிப்பாட்ட அறைக்குள் எடுத்துச்சென்ற நர்ஸ், பதட்டத்தில் குழந்தைகளை இடம் மாற்றி வைத்துவிட, இப்போது யார் குழந்தை யாருடையது என்று அடையாளம் தெரியாமல் போய்விட்டது.
கவலையுடன் நர்ஸ் விஷயத்தை டாக்டரிடம் சொல்ல, டாக்டரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளின் தந்தையரை அழைத்து விஷயத்தைச் சொன்னார்.
விஷயத்தைக் கேட்ட மற்றவர்களும் குழப்பமடைய, ஈழத்தமிழ்க் குழந்தையின் தந்தை மட்டும் புன்னகைத்தவாறு சொன்னார்.
"அந்த மூணு குழந்தையையும் இந்த டேபிள்ல கொண்டு வந்து படுக்க வைங்க... கண்டுபிடிச்சிடலாம்..!".
சொன்னதுபோல், வரிசையாய் குழந்தைகளை கொண்டு வந்து டேபிளில் படுக்க வைத்ததும், அந்த ஈழத்தமிழர் சப்தமாய், "ஜெய் டைகர்...!" என்று குரல் கொடுத்தார்.
டைகர் என்ற சப்தம் கேட்டதுதான் மாயம்.
ஈழத்தமிழ்க் குழந்தை கையை உயர்த்தி சல்யூட் அடிக்க, சிங்களக் குழந்தை மூச்சா கக்காவே போய்விட்டது.
ஆனால், மத்திய அரசியல்வாதியின் குழந்தையோ எந்தக் கவலையும் இன்றி குஷியாய், அந்த மூச்சா கக்காவில் கையால் டப்டப்பென்று அடித்து, அது மூஞ்சியில் தெறிக்க விளையாட ஆரம்பித்திருந்தது.
.
.
.
ஒன்று விருந்தினராய் வந்திருந்த சிங்களப் பெண்ணுக்கும், ஒன்று அகதியாய் வந்திருந்த ஈழத் தமிழ் பெண்ணுக்கும், மற்றொன்று தமிழகத்தை சார்ந்த மத்திய கட்சி அரசியல்வாதியின் மனைவிக்குமாய் மொத்தம் மூன்று குழந்தைகள்.
ஆச்சர்யமான ஆச்சர்யமாய்... ஒரே நாளில், ஒரே நேரத்தில், ஒரே அறையில், கிட்டத்தட்ட ஒரே எடையில் பிறந்தன அந்த மூன்று குழந்தைகளும்.
அந்த ஆச்சர்யமே ஒரு பெரிய குழப்பத்தையும் உண்டாக்கி விட்டது மருத்துவமனையில்.
குழந்தைகளை குளிப்பாட்ட அறைக்குள் எடுத்துச்சென்ற நர்ஸ், பதட்டத்தில் குழந்தைகளை இடம் மாற்றி வைத்துவிட, இப்போது யார் குழந்தை யாருடையது என்று அடையாளம் தெரியாமல் போய்விட்டது.
கவலையுடன் நர்ஸ் விஷயத்தை டாக்டரிடம் சொல்ல, டாக்டரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளின் தந்தையரை அழைத்து விஷயத்தைச் சொன்னார்.
விஷயத்தைக் கேட்ட மற்றவர்களும் குழப்பமடைய, ஈழத்தமிழ்க் குழந்தையின் தந்தை மட்டும் புன்னகைத்தவாறு சொன்னார்.
"அந்த மூணு குழந்தையையும் இந்த டேபிள்ல கொண்டு வந்து படுக்க வைங்க... கண்டுபிடிச்சிடலாம்..!".
சொன்னதுபோல், வரிசையாய் குழந்தைகளை கொண்டு வந்து டேபிளில் படுக்க வைத்ததும், அந்த ஈழத்தமிழர் சப்தமாய், "ஜெய் டைகர்...!" என்று குரல் கொடுத்தார்.
டைகர் என்ற சப்தம் கேட்டதுதான் மாயம்.
ஈழத்தமிழ்க் குழந்தை கையை உயர்த்தி சல்யூட் அடிக்க, சிங்களக் குழந்தை மூச்சா கக்காவே போய்விட்டது.
ஆனால், மத்திய அரசியல்வாதியின் குழந்தையோ எந்தக் கவலையும் இன்றி குஷியாய், அந்த மூச்சா கக்காவில் கையால் டப்டப்பென்று அடித்து, அது மூஞ்சியில் தெறிக்க விளையாட ஆரம்பித்திருந்தது.
.
.
.
Subscribe to:
Posts (Atom)