உலகின் உச்சியில் துருவத்தின் ஒரு ஓரத்தில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தன ஒரு அப்பாப் பனிக்கரடியும் குட்டிப் பனிக்கரடியும்.
துள்ளிகுதித்து விளையாடிக் கொண்டே ஓடிய குட்டிப் பனிக்கரடி திடீரென நின்று தன் அப்பாவைப் பார்த்துக் குழப்பத்துடன் கேட்டது.
"அப்பா... நான் உண்மையிலேயே பனிக்கரடிதானாப்பா..?"
அப்பாப் பனிக்கரடி குட்டியைப் பார்த்துச் சொன்னது.
"ஆமாடா செல்லம். அதுல என்ன சந்தேகம்..?"
குட்டி தனது அடுத்த கேள்வியைக் கேட்டது.
"அப்ப நீ..?"
"ஆமா, நானும் பனிக்கரடிதான்...!".
"அம்மா...?"
அப்பாப் பனிக்கரடி தன் மகனின் தலையை வாஞ்சையாய்த் தடவியவாறே சொன்னது.
"நான்,நீ,அம்மா எல்லோருமே பனிக்கரடிதான். ஏன் கேட்கிற...?".
குட்டி தன் குழப்பம் நீங்கவே சந்தோசமாய்,"ஒண்ணுமில்லப்பா, சும்மாத்தான் கேட்டேன்.." என்றபடி மறுபடி விளையாட ஓடியது.
கொஞ்ச நேரம்தான்...குட்டிப் பனிக்கரடி மீண்டும் குழப்பத்துடன் அப்பாவிடம் வந்தது.
"அப்பா.. நாமெல்லாம் உண்மையிலேயே பனிக்கரடிதானா..?"
அப்பா ஆச்சர்யத்துடன் திரும்பக் கேட்டது.
"ஆமாடா... ஏன் கேக்கற...?"
"சும்மாத்தாம்பா... நாம பனிக்கரடிங்கறது சரி. உன் அம்மா அப்பா..?"
"அவங்களும் பனிக்கரடிதான்...!".
"அம்மாவோட அம்மா அப்பா..?"
"அவங்களும் பனிக்கரடிதான். ஏன் கேக்கற?"
குட்டிப் பனிக்கரடி,"இல்லப்பா, கேட்டேன்..!" என்று சொல்லிவிட்டு மறுபடி குஷியாய் ஓடியது.
சில நிமிடம்தான் இருக்கும்.
குட்டி திரும்பவும் தன் அப்பாவிடம் ஓடி வந்தது.
"அப்பா... நாம உண்மையிலேயே பனிக்கரடிதானா..?".
அப்பாப் பனிக்கரடி இப்போது கோபத்தின் உச்சிக்கே போய்விட்டது.
"இங்க பாரு... நாம பனிக்கரடிதான். எங்க அம்மா அப்பாவும் பனிக்கரடிதான். அவங்க அம்மா அப்பாவும் பனிக்கரடிதான். நம்ம பரம்பரையே பனிக்கரடிதான். இப்பச் சொல்லு நீ ஏன் அதைக் கேக்கற...?"
அப்பாப் பனிக்கரடி கோபத்துடன் கேட்டதும், குட்டிப் பனிக்கரடி தன் குழப்பம் சற்றும் விலகாமல் சொன்னது.
"இல்லப்பா... எனக்கு லேசாய்க் குளிருது...!".
Thursday, September 30, 2010
Tuesday, September 28, 2010
கண்ணாமூச்சி
மரத்தின் பின் நின்று 1, 2, 3 எண்ணிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."
"அப்படியா? யாரிடமிருந்து?"
"என்னிடமிருந்தே."
"ஓ! எப்படி உன்னைக் கண்டுபிடிப்பாய்?"
"100 எண்ணி முடித்ததும் லேசாக எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வந்து விடுவேன்"
"நான் உன் கூட விளையாட வரவா?"
"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாகமாகக் கூறினாள் சிறுமி.
.
.
.
நன்றி: தீபா ஜோஸப்
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."
"அப்படியா? யாரிடமிருந்து?"
"என்னிடமிருந்தே."
"ஓ! எப்படி உன்னைக் கண்டுபிடிப்பாய்?"
"100 எண்ணி முடித்ததும் லேசாக எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வந்து விடுவேன்"
"நான் உன் கூட விளையாட வரவா?"
"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாகமாகக் கூறினாள் சிறுமி.
.
.
.
நன்றி: தீபா ஜோஸப்
Labels:
ஒளிந்து,
கண்டுபிடி,
கண்ணாமூச்சி,
விளையாட்டு
1 comments
Monday, September 27, 2010
பேசு பேசாமலிரு
புத்தர் வாழ்ந்த காலத்தில் சாரிபுத்தர் என்ற துறவி இருந்தார்.
ஒருமுறை புத்தரைக் காண வந்த சாரிபுத்தர்,"உங்களைப்போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவர் வேறொருவர் உலகில் இல்லை." என்று புகழ்ந்தார்.
புத்தரும் அவரிடம்,"அருமையாகச் சொன்னீர்கள். இதற்கு முன்வாழ்ந்த புத்தர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்..!" என்று கேட்டார்.
மறுமொழி ஏதும்பேச முடியாமல் சாரிபுத்தர் தயங்கி நின்றார்.
"அது சரி.. பரவாயில்லை.! என்னைப் பற்றியாவது சொல்லுங்களேன். நான் எப்படி வாழ்கிறேன் என்றாவது சொல்லுங்கள்...!" என்றார்.
அதற்கும் சாரிபுத்தர் அமைதி காத்தார்.
அப்போது புத்தர்,"அதுதான் சரி. தெரிந்ததைப்பற்றிப் பேசுவதும் தெரியாததைப் பற்றி மௌனம் காப்பதும்தான் சாலச்சிறந்தது...!" என்றார்.
அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவரான சாரிபுத்தரும் புத்தரின் அறிவுரையை ஒரு நண்பரைப்போல ஏற்றார்.
.
.
ஒருமுறை புத்தரைக் காண வந்த சாரிபுத்தர்,"உங்களைப்போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவர் வேறொருவர் உலகில் இல்லை." என்று புகழ்ந்தார்.
புத்தரும் அவரிடம்,"அருமையாகச் சொன்னீர்கள். இதற்கு முன்வாழ்ந்த புத்தர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்..!" என்று கேட்டார்.
மறுமொழி ஏதும்பேச முடியாமல் சாரிபுத்தர் தயங்கி நின்றார்.
"அது சரி.. பரவாயில்லை.! என்னைப் பற்றியாவது சொல்லுங்களேன். நான் எப்படி வாழ்கிறேன் என்றாவது சொல்லுங்கள்...!" என்றார்.
அதற்கும் சாரிபுத்தர் அமைதி காத்தார்.
அப்போது புத்தர்,"அதுதான் சரி. தெரிந்ததைப்பற்றிப் பேசுவதும் தெரியாததைப் பற்றி மௌனம் காப்பதும்தான் சாலச்சிறந்தது...!" என்றார்.
அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவரான சாரிபுத்தரும் புத்தரின் அறிவுரையை ஒரு நண்பரைப்போல ஏற்றார்.
.
.
Labels:
அருமை,
காத்தார்,
சாரிபுத்தர்,
சிறந்தவர்,
மறுமொழி,
மௌனம்
2
comments
Saturday, September 25, 2010
டேனியின் ஆம்புலன்ஸ்
ஆற்றுக்குள் சற்றே இறக்கித் தனது வண்டியைக் கழுவிக் கொண்டிருந்தார் அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவர்.
கொஞ்ச நேரம் கழுவிய பிறகு, இந்தப் பக்கமாய் வந்த போதுதான் ஆற்றங்கரையில் நாயுடனும் பூனையுடனும் நின்றிருந்த அந்தச் சிறுவன் டேனியைக் கவனித்தார்.
அவன் கையில் இழுத்துச் செல்லக்கூடிய அளவில் சற்றே பெரிய வெள்ளை வண்டியை வைத்திருந்தான்.
அது பார்க்க ஒருமாதிரி ஆம்புலன்ஸ் போலவேதான் இருந்தது.
அந்த வண்டியின் உடலில், அவன் ஆம்புலன்ஸைப் பார்த்துப் பார்த்து அதைப் போலவே அலங்காரம் செய்து கொண்டிருந்தான்.
அவர் வண்டியைக் கழுவி முடித்தபோது, டேனியும் தனது வண்டியைக் கிட்டத்தட்ட ஆம்புலன்ஸ் போலவே மாற்றியிருந்தான்.
வண்டியை அவர் துடைக்க ஆரம்பித்த போது அவர் டேனி செய்வதைக் கவனித்து அதிர்ந்து போனார்.
அவன் கையிலிருந்த ஒரு கயிற்றால் அவனுடைய வண்டியை, அந்த நாயின் கழுத்தைச் சுற்றி இழுத்துச் செல்ல வசதியாய் ஒரு பெல்ட்டால் கட்டியிருந்தான்.
கூடவே மற்றொரு கயிற்றால் அந்தப் பூனையின் வயிற்றை அழுத்திப் பிடிக்கும்படி, வண்டி ஓடும்போது வண்டியுடன் இழுத்துச் செல்லும்படி பின்புறமாய் இணைத்துக் கட்டியிருந்தான்.
அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது.
ஏற்கனவே கயிறு இறுக்கிய வலியால் பூனை கதறிக் கொண்டிருக்க, டேனி ஆம்புலன்ஸை ஓட்டுகிறேன் என்று நாயை விரட்டினால் பூனை கதறியே குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகிவிடும்.
எனவே, அவர் அந்தப் பூனையைக் காப்பாற்ற முடிவு செய்து டேனியிடம் சொன்னார்.
"தம்பி... நீ பூனையை முன்னாடி நாய்கூடச் சேர்த்துக் கட்டினேனு வையேன். ரெண்டும் சேர்ந்து இழுக்கும்போது ஆம்புலன்ஸ் இன்னும் ஸ்பீடாப் போகும்ல...?"
ட்ரைவர் சொன்னதும் ஒரு கணம் யோசித்தவன் சொன்னான்.
"ஆமா சார், நீங்க சொல்லற மாதிரி செஞ்சா ஆம்புலன்ஸ் ஸ்பீடாப் போகும்... ஆனா, என் ஆம்புலன்ஸுக்கு சைரென் கிடையாதே.! அதுக்குத்தான் பூனையைக் கத்தற மாதிரிக் கட்டியிருந்தேன்..!".
.
.
.
கொஞ்ச நேரம் கழுவிய பிறகு, இந்தப் பக்கமாய் வந்த போதுதான் ஆற்றங்கரையில் நாயுடனும் பூனையுடனும் நின்றிருந்த அந்தச் சிறுவன் டேனியைக் கவனித்தார்.
அவன் கையில் இழுத்துச் செல்லக்கூடிய அளவில் சற்றே பெரிய வெள்ளை வண்டியை வைத்திருந்தான்.
அது பார்க்க ஒருமாதிரி ஆம்புலன்ஸ் போலவேதான் இருந்தது.
அந்த வண்டியின் உடலில், அவன் ஆம்புலன்ஸைப் பார்த்துப் பார்த்து அதைப் போலவே அலங்காரம் செய்து கொண்டிருந்தான்.
அவர் வண்டியைக் கழுவி முடித்தபோது, டேனியும் தனது வண்டியைக் கிட்டத்தட்ட ஆம்புலன்ஸ் போலவே மாற்றியிருந்தான்.
வண்டியை அவர் துடைக்க ஆரம்பித்த போது அவர் டேனி செய்வதைக் கவனித்து அதிர்ந்து போனார்.
அவன் கையிலிருந்த ஒரு கயிற்றால் அவனுடைய வண்டியை, அந்த நாயின் கழுத்தைச் சுற்றி இழுத்துச் செல்ல வசதியாய் ஒரு பெல்ட்டால் கட்டியிருந்தான்.
கூடவே மற்றொரு கயிற்றால் அந்தப் பூனையின் வயிற்றை அழுத்திப் பிடிக்கும்படி, வண்டி ஓடும்போது வண்டியுடன் இழுத்துச் செல்லும்படி பின்புறமாய் இணைத்துக் கட்டியிருந்தான்.
அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது.
ஏற்கனவே கயிறு இறுக்கிய வலியால் பூனை கதறிக் கொண்டிருக்க, டேனி ஆம்புலன்ஸை ஓட்டுகிறேன் என்று நாயை விரட்டினால் பூனை கதறியே குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகிவிடும்.
எனவே, அவர் அந்தப் பூனையைக் காப்பாற்ற முடிவு செய்து டேனியிடம் சொன்னார்.
"தம்பி... நீ பூனையை முன்னாடி நாய்கூடச் சேர்த்துக் கட்டினேனு வையேன். ரெண்டும் சேர்ந்து இழுக்கும்போது ஆம்புலன்ஸ் இன்னும் ஸ்பீடாப் போகும்ல...?"
ட்ரைவர் சொன்னதும் ஒரு கணம் யோசித்தவன் சொன்னான்.
"ஆமா சார், நீங்க சொல்லற மாதிரி செஞ்சா ஆம்புலன்ஸ் ஸ்பீடாப் போகும்... ஆனா, என் ஆம்புலன்ஸுக்கு சைரென் கிடையாதே.! அதுக்குத்தான் பூனையைக் கத்தற மாதிரிக் கட்டியிருந்தேன்..!".
.
.
.
Labels:
அலங்காரம்,
ஆம்புலன்ஸ்,
இழுத்து,
கதறி,
கழுவி,
சைரென்,
பெல்ட்,
வெள்ளை
2
comments
Friday, September 24, 2010
ஸ்தோத்திரம் ஃபாதர்
தில்லுதுரயும் அவர் நண்பரும் நடந்து போகும் வழியில், ஒரு ஆர்.சி. சர்ச் வாசலில் அந்த நபரைப் பார்த்தார்கள்.
நீண்ட வெள்ளை மழைக்கோட்டை மாட்டி, இடுப்பில் நழுவாமல் இருக்க ஒரு கயிற்றாலும் கட்டியிருந்த அவரைப் பார்க்க ஒரு கிறிஸ்தவ பாதிரியாரைப் போலவே இருக்க அவரிடம்,"ஸ்தோத்திரம் ஃபாதர்..." என்றார் தில்லுதுரயின் நண்பர்.
அவரும் பதிலுக்கு கிண்டலாகச் சிரித்தபடியே, "ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்..." என்று சொல்லிவிட்டுப் போனார்.
நண்பர் தொடர்ந்து அவரிடம்,"ஃபாதர்..." என்று ஏதோ தொடரப் போக...
இடைநுழைந்த தில்லுதுர, "டேய் நிறுத்து, அவரை எனக்குத் தெரியும்..." என்றவர் தொடர்ந்து சொன்னார்.
"அவர் ஃபாதரே கிடையாது. ஏன்னா, அவருக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகூட இருக்கு..!".
.
.
.
நீண்ட வெள்ளை மழைக்கோட்டை மாட்டி, இடுப்பில் நழுவாமல் இருக்க ஒரு கயிற்றாலும் கட்டியிருந்த அவரைப் பார்க்க ஒரு கிறிஸ்தவ பாதிரியாரைப் போலவே இருக்க அவரிடம்,"ஸ்தோத்திரம் ஃபாதர்..." என்றார் தில்லுதுரயின் நண்பர்.
அவரும் பதிலுக்கு கிண்டலாகச் சிரித்தபடியே, "ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்..." என்று சொல்லிவிட்டுப் போனார்.
நண்பர் தொடர்ந்து அவரிடம்,"ஃபாதர்..." என்று ஏதோ தொடரப் போக...
இடைநுழைந்த தில்லுதுர, "டேய் நிறுத்து, அவரை எனக்குத் தெரியும்..." என்றவர் தொடர்ந்து சொன்னார்.
"அவர் ஃபாதரே கிடையாது. ஏன்னா, அவருக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகூட இருக்கு..!".
.
.
.
Labels:
ஃபாதர்,
சர்ச்,
நழுவாமல்,
மழைக்கோட்டு,
ஸ்தோத்திரம்
3
comments
Subscribe to:
Posts (Atom)